M.Jagadeesan
14-03-2011, 05:42 AM
(இக்கவிதை முழுவதும் ஈரசைச்சீர்களே வந்துள்ளன)
அதரச் சிவப்பு கோவைப் பழமே!
ஆடும் சடையோ கருநிற நாகம்!
இமைகள் இரண்டும் அடிக்கடித் துடிக்கும்!
ஈக்கள் மொய்க்கும் மாம்பழக் கன்னம்!
உடுக்கை இடையோ அழகைக் கூட்டும்!
ஊரில் அவளே கனவுக் கன்னி!
எப்படி இவளைப் பிரமன் செய்தான்
ஏட்டில் செதுக்கிய சிற்பம் போல?
ஐம்புலன் அடக்கிய முனிவரும் கூட
ஒருமுறை பார்க்கத் தூண்டும் அழகு!
ஓடும் நதியில் துள்ளும் மீன்களும்
ஒளவியம் கொள்ளும் அழகிய கண்கள்!!
ஒளவியம்=பொறாமை
அதரச் சிவப்பு கோவைப் பழமே!
ஆடும் சடையோ கருநிற நாகம்!
இமைகள் இரண்டும் அடிக்கடித் துடிக்கும்!
ஈக்கள் மொய்க்கும் மாம்பழக் கன்னம்!
உடுக்கை இடையோ அழகைக் கூட்டும்!
ஊரில் அவளே கனவுக் கன்னி!
எப்படி இவளைப் பிரமன் செய்தான்
ஏட்டில் செதுக்கிய சிற்பம் போல?
ஐம்புலன் அடக்கிய முனிவரும் கூட
ஒருமுறை பார்க்கத் தூண்டும் அழகு!
ஓடும் நதியில் துள்ளும் மீன்களும்
ஒளவியம் கொள்ளும் அழகிய கண்கள்!!
ஒளவியம்=பொறாமை