View Full Version : தலைப்பற்ற கவிதை
இன்று உன் சொற்கள்
உவப்பானதாயில்லை
அவை
ஒரு குட்டிச்சுவரின் தனிமையில்
என்னை ஆழ்த்தி சென்றன
நிச்சலனமிழந்து
குழப்பமீன்களால் முழுமுற்றாய் கலங்கி
தத்தளிக்கும் மனக்குளத்தில்
வெடிக்கின்றன
விபரீத எண்ணக்குமிழிகள்
அச்சமூட்டுவதாய் இருக்கிறது
தம் குரூரக் கரங்களால்
என்னை வதைபலிக்கு
ஒப்புவித்த இக்கணம்
M.Jagadeesan
10-03-2011, 12:15 PM
கவிதை நன்று ஆதன்.தங்களை வதைபலிக்கு ஆளாக்கிய காதலியின்
சொற்களையும் குறிப்பிட்டிருக்கலாமே!
dellas
10-03-2011, 12:20 PM
நன்று ஆதன். (ரகசியமாக உங்களோடு : விற்கிற விலையில், காதலி ஏதும் தங்க மோதிரம் கேட்டு விட்டார்களா?)
Nivas.T
10-03-2011, 12:23 PM
என்ன ஆதன்?
உங்க கவிதைய எப்ப படிச்சாலும்
இரண்டு மூன்றுமுறை படித்தால்தான்
புரியும், அதிலும் ஒரு திருப்தி
அழகு கவிதை ஆதன்
இது எந்த மாதிரியான கவிதை?
தாமரை
10-03-2011, 02:56 PM
இன்று உன் சொற்கள்
உவப்பானதாயில்லை
அவை
ஒரு குட்டிச்சுவரின் தனிமையில்
என்னை ஆழ்த்தி சென்றன
நிச்சலனமிழந்து
குழப்பமீன்களால் முழுமுற்றாய் கலங்கி
தத்தளிக்கும் மனக்குளத்தில்
வெடிக்கின்றன
விபரீத எண்ணக்குமிழிகள்
அச்சமூட்டுவதாய் இருக்கிறது
தம் குரூரக் கரங்களால்
என்னை வதைபலிக்கு
ஒப்புவித்த இக்கணம்
இங்கு இரு காலங்கள் இருக்கின்றன..
ஒன்று சென்ற கவிதைக்கு நான் எழுதிய பின்னூட்டம்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=516814#post516814
அதில் இருந்த அர்த்தத்தைத்தான் சொன்னேன். காதல் என்றால் பலப் பல முட்டாள்தனங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.. அதைப் பட்டியல் போட்டி காதலிக்காவிட்டால் இதெல்லாம் வச்தி என்று சொல்லாமல் ஒருத்தியைக் காதலிக்காவிட்டால் எல்லோரையும் காதலிக்கலாம் என்று எழுதி விட்டாயே என்று சொன்னேன்
இப்பொழுது அதையே இன்னொரு கவிதையா வடிச்சு
அச்சமூட்டுவதாய் இருக்கிறது
தம் குரூரக் கரங்களால்
என்னை வதைபலிக்கு
ஒப்புவித்த இக்கணம்
இதுக்கு என்ன சொல்லப்போறாரோ என்று எழுதி இருக்கிறாய்..
ஹெ ஹெ ஹெ தலைப்பற்ற கவிதை என்று எழுதினாலே அடுத்த நிமிஷம் தலையைப் பற்றிக் கொண்டு உட்காருகிற மாதிரி இப்படி பதில் வந்தா என்னதான் செய்யறதாம்? ஞாயமான கவலைதான்,
இதை இங்க எழுத காரணம் என்ன?
பின்னாடி வந்திருக்கிற பின்னூட்டங்கள்தான். ஏற்கனவே போன கவிதையில புலம்பி தள்ளிட்ட..
சரி சரி அழாத. கண்ணைத் துடைச்சிக்கோ...
:lachen001::lachen001::lachen001:
செல்வா
10-03-2011, 04:32 PM
ஐயோ... பாவம்
பொழச்சுப் போ.... :)
தாமரையண்ணா சொன்னது மட்டும் தானா?
வேறயும் இருக்கிறமாதிரி தோணுதே :confused:
ஐயோ... பாவம்
பொழச்சுப் போ.... :)
தாமரையண்ணா சொன்னது மட்டும் தானா?
வேறயும் இருக்கிறமாதிரி தோணுதே :confused:
ஸ்டார் மியூஸிக்......
தாமரை
10-03-2011, 05:14 PM
ஐயோ... பாவம்
பொழச்சுப் போ.... :)
தாமரையண்ணா சொன்னது மட்டும் தானா?
வேறயும் இருக்கிறமாதிரி தோணுதே :confused:
ஸ்டார் மியூஸிக்......
புதுச் சேனலு..
(செல்வா ஜால்ரா போடறார் என்று அர்த்தப் படும்படி... தெரிஞ்சி போட்டியா தெரியாம போட்டியா?)
ஸ்டார்(ட்) மியூசிக்