dellas
10-03-2011, 10:40 AM
நான் கண்மூடி வையாதிருக்கையில்
பாலோடு பழமும் நறுக்கித் தருகிறாய்.
நான் பயங்கொள்வேனோ என்ற பயத்தால் - நம்
சுவாசங்கள் உரசிக்கொள்ளும் தூரத்தில் மட்டுமே நீ துய்கிறாய்.
என் நகைப்பை அறியாதவனாய்
எனக்களித்த சொல்லமறந்து - ஒரு திருடன்போல்
என் சுவாச எல்லை கடந்து,
தாழ்வாரம்தேடி மறைந்துசென்று புகைக்கிறாய்.
நான் சாலை கடக்கும் நேரங்களில் கரம்கோர்த்து
வழிநடுத்துகிறாய்.
நீராடும் வேளைகளில் தண்ணீரும் வெந்நீரும்
பதமாகும் விதம் கலந்து, பண்பாக கையாள்வாய்.
உணவோடு நான் உட்காரும் வேளைகளில்
என்னெதிரே நீ அமர்வதன் சூட்சுமம் நானறிந்ததே.
உன்னோடு ஒப்பிடுகையில்
என்வயது இரண்டு குறைவே.
ஆனால் நான் ஒன்றும் குழந்தை அல்லவே.
என் தோள்சேர்த்து ஆதரவாய் அணைத்துச் செல்லும்
பொன்வேளைகளில் - என் காதலேனே உன்வயது
எண்பது என்பதும் நீ மறப்பதேன்?
பாலோடு பழமும் நறுக்கித் தருகிறாய்.
நான் பயங்கொள்வேனோ என்ற பயத்தால் - நம்
சுவாசங்கள் உரசிக்கொள்ளும் தூரத்தில் மட்டுமே நீ துய்கிறாய்.
என் நகைப்பை அறியாதவனாய்
எனக்களித்த சொல்லமறந்து - ஒரு திருடன்போல்
என் சுவாச எல்லை கடந்து,
தாழ்வாரம்தேடி மறைந்துசென்று புகைக்கிறாய்.
நான் சாலை கடக்கும் நேரங்களில் கரம்கோர்த்து
வழிநடுத்துகிறாய்.
நீராடும் வேளைகளில் தண்ணீரும் வெந்நீரும்
பதமாகும் விதம் கலந்து, பண்பாக கையாள்வாய்.
உணவோடு நான் உட்காரும் வேளைகளில்
என்னெதிரே நீ அமர்வதன் சூட்சுமம் நானறிந்ததே.
உன்னோடு ஒப்பிடுகையில்
என்வயது இரண்டு குறைவே.
ஆனால் நான் ஒன்றும் குழந்தை அல்லவே.
என் தோள்சேர்த்து ஆதரவாய் அணைத்துச் செல்லும்
பொன்வேளைகளில் - என் காதலேனே உன்வயது
எண்பது என்பதும் நீ மறப்பதேன்?