அக்னி
09-03-2011, 11:51 AM
நான் கிறுக்கத் தொடங்கிய காலத்துக் கையெழுத்துப் பிரதிகள்,
மீண்டும் என்னிடம்...
என் மனதுக்குச் சுகந்தமாகும், அந்தக் காகிதமணத்தினை,
உங்கள் மனதுக்குள்ளும் பாய்ச்ச விரும்பி விளைகின்றேன்...
ஆரம்பக் கிறுக்கல்களில்,
பாடல்களின் வரிகளும் இருக்கும்... கவிகளின் வார்த்தைகளும் இருக்கும்...
சொற்குற்றம், பொருட்குற்றங்களும் இருக்கலாம்...
ஆனால்,
இவை தெரிந்தே செய்த தவறல்ல...
எனது எழுத்துக்கள் எழுந்து நடக்க உதவிய பிடிமானங்கள்...
நன்றி!
*****
காதல்..!
இரு ஆத்மாக்களின்
மனச் சந்திப்பில்
உணர்வுகளின்
எழுச்சியில் உதிப்பது.
சோகத்திற்கும்
சுகானுபவத்திற்கும்
தனித்துவமாகிப்போன
துடிப்பு அது.
மௌனங்களின்
மொழி பெயர்ப்பில்
இசையும் கவிதை..,
காதல்...
நிசப்தத்தில்
உறைந்துபோகும்
இரவுகளில்..,
இருதயத்தின்
ஒரு ஓரத்தில்
எட்டிப்பார்க்கும்
நிலா... அது...
பார்வையில் ஒரு வீச்சு
சலனத்தில் ஒரு துளி
மௌனத்தில் ஒரு பேச்சு
இதயத்தில் ஒரு வலி
இவை தொடர்ந்த
ஒரு ஏகாந்தம்
காதல்...
மொத்தத்தில்,
சத்தமில்லாமல்
சரித்திரம் படைக்கும்
உயிர்க் காவியம்
காதலே..!
*****
காதலின் பிரசவம்
சிரிப்பினில் புரிவதில்லை.
அது
கண்ணீர்த் துளிகளிலேதான்
பிரசன்னமாகும்.
*****
நீ காதலித்திருந்தால்
உனது இதயத்துடிப்பின்
ஒலி
உனது காதுவரை
எதிரொலிக்கும்...
அப்பொழுது,
உனக்குள் சந்தோஷம்மட்டுமே
நர்த்தனமாடும்...
ஏனென்றால்,
உனது இதயம்
காதலுக்கு மட்டுமே
அர்ப்பணமாயிருக்கும்...
உனது காதல்
கல்லறைக்குள் அடங்கிப்போனால்
உனது உயிர்த்துடிப்பின்
வலி
நீ உள்ளளவும்
உன்னை வெறுக்கவைக்கும்...
ஏனெனில்,
உனது உயிர்
காதலில் மட்டுமே
உறைந்திருக்கும்.
அப்பொழுது,
உனது நினைவுகளுக்குள்
காதல் மட்டுமே
சமர்ப்பணமாயிருக்கும்...
*****
என் உயிரோடு வாசம் செய்பவளே
உன் இதழோர மௌனம்
என்னைக் கொல்லுதடி...
தளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே
விழி நீர் கூடத்
துளிர்க்க மறுக்கிறதே...
*****
வஞ்சியே!
உன்னை என்
இதயத் துடிப்பில் வைத்துத்
தாலாட்டுவேன்..,
அது துடிக்கும்வரையிலும்...
உன் நினைவுகளை
அதன் மிருதுவான தாளத்தில்
உறங்கவைப்பேன்..,
அது அதிரும்வரையிலும்...
*****
எனது கண்கள்
இமைப்பதைக் கூட
நான் அனுமதிப்பதில்லை...
அவை
உனது விம்பத்தைக்
கணப்பொழுது
என்னிடம் பிரிப்பதனால்...
*****
அழகே!
நீ என்னுள் கலந்த
நாள் முதலாய்
நான் நானாகவில்லை...
நீயாகவே
நான் மாறிவிட்டேன்...
மீண்டும் என்னிடம்...
என் மனதுக்குச் சுகந்தமாகும், அந்தக் காகிதமணத்தினை,
உங்கள் மனதுக்குள்ளும் பாய்ச்ச விரும்பி விளைகின்றேன்...
ஆரம்பக் கிறுக்கல்களில்,
பாடல்களின் வரிகளும் இருக்கும்... கவிகளின் வார்த்தைகளும் இருக்கும்...
சொற்குற்றம், பொருட்குற்றங்களும் இருக்கலாம்...
ஆனால்,
இவை தெரிந்தே செய்த தவறல்ல...
எனது எழுத்துக்கள் எழுந்து நடக்க உதவிய பிடிமானங்கள்...
நன்றி!
*****
காதல்..!
இரு ஆத்மாக்களின்
மனச் சந்திப்பில்
உணர்வுகளின்
எழுச்சியில் உதிப்பது.
சோகத்திற்கும்
சுகானுபவத்திற்கும்
தனித்துவமாகிப்போன
துடிப்பு அது.
மௌனங்களின்
மொழி பெயர்ப்பில்
இசையும் கவிதை..,
காதல்...
நிசப்தத்தில்
உறைந்துபோகும்
இரவுகளில்..,
இருதயத்தின்
ஒரு ஓரத்தில்
எட்டிப்பார்க்கும்
நிலா... அது...
பார்வையில் ஒரு வீச்சு
சலனத்தில் ஒரு துளி
மௌனத்தில் ஒரு பேச்சு
இதயத்தில் ஒரு வலி
இவை தொடர்ந்த
ஒரு ஏகாந்தம்
காதல்...
மொத்தத்தில்,
சத்தமில்லாமல்
சரித்திரம் படைக்கும்
உயிர்க் காவியம்
காதலே..!
*****
காதலின் பிரசவம்
சிரிப்பினில் புரிவதில்லை.
அது
கண்ணீர்த் துளிகளிலேதான்
பிரசன்னமாகும்.
*****
நீ காதலித்திருந்தால்
உனது இதயத்துடிப்பின்
ஒலி
உனது காதுவரை
எதிரொலிக்கும்...
அப்பொழுது,
உனக்குள் சந்தோஷம்மட்டுமே
நர்த்தனமாடும்...
ஏனென்றால்,
உனது இதயம்
காதலுக்கு மட்டுமே
அர்ப்பணமாயிருக்கும்...
உனது காதல்
கல்லறைக்குள் அடங்கிப்போனால்
உனது உயிர்த்துடிப்பின்
வலி
நீ உள்ளளவும்
உன்னை வெறுக்கவைக்கும்...
ஏனெனில்,
உனது உயிர்
காதலில் மட்டுமே
உறைந்திருக்கும்.
அப்பொழுது,
உனது நினைவுகளுக்குள்
காதல் மட்டுமே
சமர்ப்பணமாயிருக்கும்...
*****
என் உயிரோடு வாசம் செய்பவளே
உன் இதழோர மௌனம்
என்னைக் கொல்லுதடி...
தளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே
விழி நீர் கூடத்
துளிர்க்க மறுக்கிறதே...
*****
வஞ்சியே!
உன்னை என்
இதயத் துடிப்பில் வைத்துத்
தாலாட்டுவேன்..,
அது துடிக்கும்வரையிலும்...
உன் நினைவுகளை
அதன் மிருதுவான தாளத்தில்
உறங்கவைப்பேன்..,
அது அதிரும்வரையிலும்...
*****
எனது கண்கள்
இமைப்பதைக் கூட
நான் அனுமதிப்பதில்லை...
அவை
உனது விம்பத்தைக்
கணப்பொழுது
என்னிடம் பிரிப்பதனால்...
*****
அழகே!
நீ என்னுள் கலந்த
நாள் முதலாய்
நான் நானாகவில்லை...
நீயாகவே
நான் மாறிவிட்டேன்...