உமாமீனா
09-03-2011, 09:25 AM
முந்நூறு நாள் என்னை
மடி சுமந்தவள் நீ...
ஈன்ற பின்னும் என்னை நீ
மடி இறக்கியதில்லை...
விழுந்தால், கை கொடுத்து தூக்கியதில்லை
நானே எழ வேண்டும் என்று,
ஒன்றரை வயதில் எனக்கு
தன்னம்பிக்கை கற்று கொடுத்தவள் நீ...
நான் பள்ளியில் இருந்த நேரத்தை விட,
எனக்காக பள்ளிவாசலில் நீ
காத்திருந்த நேரமே அதிகம்...
பள்ளிப்படிப்பு படிக்கவில்லை என்றேன்,
பக்குவமாக எடுத்து சொன்னாய் என்
பாதை மாறக்கூடாது என்று....
நான் தேவை என்பதை எல்லாம்
நீ வாங்கி தந்ததில்லை, ஆனால் என்
தேவை அறிந்து வாங்கித்தந்தாய்...
நீ அழுது பார்த்ததில்லை ஆனாலும்
கண்ணீர் கண்டிருக்கிறேன், நான் அழும் போது
உன் கண்களில்...
எனக்கு தெரிந்த உலகம் நீ,
உனக்கு உலகமே நான் தான்..
பொறியியல் படிக்க வேண்டுமென்றேன்,
பதிலேதும் சொல்லாமல் உன் பொன்
நகை விற்று படிக்கவைத்தாய்...
நான் காதலிப்பதை சொன்னேன்,
கவனத்தை சிதறவிடாதே என்றாய் .. கண்டிப்போடு
நான் இன்று பட்டம் பெறப்போகிறேன்,
சாதித்துவிட்டாய் என்கிறார்கள் என்
ஆசிரியர்களும், நண்பர்களும்..
எப்படி புரிய வைப்பேன் அவர்களுக்கு
சாதித்தது நான் இல்லை என்பதையும்
இந்த பட்டம் பெற
எனக்கு தகுதி இல்லை என்பதையும்..
புற்றுநோயை உன் புன்னகையால்
மறைத்த நீ...
இப்போதும் அதே
புன்னகையுடன் என் பூஜையறையில்
புகைப்படமாய் .......
நன்றி வெறும்பய
மடி சுமந்தவள் நீ...
ஈன்ற பின்னும் என்னை நீ
மடி இறக்கியதில்லை...
விழுந்தால், கை கொடுத்து தூக்கியதில்லை
நானே எழ வேண்டும் என்று,
ஒன்றரை வயதில் எனக்கு
தன்னம்பிக்கை கற்று கொடுத்தவள் நீ...
நான் பள்ளியில் இருந்த நேரத்தை விட,
எனக்காக பள்ளிவாசலில் நீ
காத்திருந்த நேரமே அதிகம்...
பள்ளிப்படிப்பு படிக்கவில்லை என்றேன்,
பக்குவமாக எடுத்து சொன்னாய் என்
பாதை மாறக்கூடாது என்று....
நான் தேவை என்பதை எல்லாம்
நீ வாங்கி தந்ததில்லை, ஆனால் என்
தேவை அறிந்து வாங்கித்தந்தாய்...
நீ அழுது பார்த்ததில்லை ஆனாலும்
கண்ணீர் கண்டிருக்கிறேன், நான் அழும் போது
உன் கண்களில்...
எனக்கு தெரிந்த உலகம் நீ,
உனக்கு உலகமே நான் தான்..
பொறியியல் படிக்க வேண்டுமென்றேன்,
பதிலேதும் சொல்லாமல் உன் பொன்
நகை விற்று படிக்கவைத்தாய்...
நான் காதலிப்பதை சொன்னேன்,
கவனத்தை சிதறவிடாதே என்றாய் .. கண்டிப்போடு
நான் இன்று பட்டம் பெறப்போகிறேன்,
சாதித்துவிட்டாய் என்கிறார்கள் என்
ஆசிரியர்களும், நண்பர்களும்..
எப்படி புரிய வைப்பேன் அவர்களுக்கு
சாதித்தது நான் இல்லை என்பதையும்
இந்த பட்டம் பெற
எனக்கு தகுதி இல்லை என்பதையும்..
புற்றுநோயை உன் புன்னகையால்
மறைத்த நீ...
இப்போதும் அதே
புன்னகையுடன் என் பூஜையறையில்
புகைப்படமாய் .......
நன்றி வெறும்பய