PDA

View Full Version : மடியில் குழந்தை



மீனலோஷனி
06-04-2003, 06:03 PM
கல்லுரிப் படிப்பில்
முதல் இடம் உனக்கு
கவிதைகள் எழுதுவதில்
கவிஞன் நீ உலகுக்கு

பேராசியருக்கே ஆசிரியர் பதவி
பேர் அறிவாளி பெயருக்கு தகுதி

இருபது வயதில் பலவித பொறுதி
இன்றைய இளைஞனின் முன்னோடி

அழகில் நீ மன்மதனுக்கு போட்டி
அகங்காரம் இல்லாத ஞானி

இவ்வளவு இருந்தும்
இவள் மடியில் உறங்கும்போதுமட்டும்
இரவு நேரத்துக் குழந்தையாவது ஏனோ?



அன்பர்களே

இது என் முதல் கவிதை
தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்

rambal
06-04-2003, 06:15 PM
அந்த மடியில் கிடைக்கும்
நிம்மதி
எத்தனை கோடி கொடுத்தாலும்
கிடைக்காது..

பாராட்டுக்கள் மீனா அவர்களே..

இளசு
06-04-2003, 07:18 PM
அகங்காரம் இல்லாத ஞானி
அன்பெனும் மலருக்குள் தேனி
இதழ் மூடி சிறை வையுங்கள்
காலமெல்லாம் காதலில் மூழ்கட்டும்

அருமை மீனா அவர்களே, உங்கள் வரவு கவிதைப்பக்கங்களுக்கு
புதுசோபை தருகிறது...
தொடருங்கள்............

gans5001
07-04-2003, 03:41 AM
தாயின் மடிக்கு பின்பு அவளின் மடியே தாய் மடி

Narathar
07-04-2003, 04:46 AM
முதலகவிதையா இது
"முத்திய" கவிதையாய் அல்லவா இருக்கிறது....
நன்று! நன்று!!