PDA

View Full Version : எப்போது?



M.Jagadeesan
01-03-2011, 07:35 AM
ஓடும் வரைதான் நதி
ஓடாவிட்டால் குளம்
இவ்வுண்மையை
ஓடாமல் ஓரிடத்தில்
ஒதுங்கிக் கிடப்போர்கள்
ஒப்பும் நாள் எப்போது?

தேடும் வரைதான் செல்வம்
தேடாவிட்டால் வறுமை
இவ்வுண்மை
தேடாமல் ஓரிடத்தில்
தேங்கிக் கிடப்போர்க்குத்
தெரியும் நாள் எப்போது?

பாடும் வரைதான் குயில்
பாடாவிட்டால் காக்கை
இவ்வுண்மை
உள்ளிருக்கும் திறமைகளை
உலகுக்குக் காட்டாமல்
கல்லினுள் தேரைபோல்
கரந்து வாழ்வோர்கள்
கற்கும் நாள் எப்போது?

மூடும் வரைதான் அழகு
மூடாவிட்டால் அசிங்கம்
இவ்வுண்மை
மூடாமல் எல்லாமே
முழுமையாய்க் காட்டுகின்ற
மூளையில்லா மூடருக்கு
உறைக்கும் நாள் எப்போது?

வாழும் வரைதான் பெண்
இல்லையெனில் வாழாவெட்டி
இவ்வுண்மை
வாழாமல் பெண்ணை
வீட்டகத்தே வைத்திருந்து
காவல் காப்போர்கள்
கற்கும் நாள் எப்போது?

Nivas.T
01-03-2011, 07:50 AM
மனக்குமறலை கொட்டித்தீர்க்கும் கவிதை வரிகள்

நாம் என்ன செய்ய முடியும் ஜெகதீசன்

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன பயன்?

நல்ல கவிதை பாராட்டுகள்

பிரேம்
01-03-2011, 08:08 AM
அருமையான கவிதை...வாழ்த்துக்கள் சார்..

உமாமீனா
01-03-2011, 08:16 AM
வாழும் வரைதான் பெண்
இல்லையெனில் வாழாவெட்டி
இவ்வுண்மை
வாழாமல் பெண்ணை
வீட்டகத்தே வைத்திருந்து
காவல் காப்போர்கள்
கற்கும் நாள் எப்போது?

அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே

நச் என்ற வரிகளில் ஈரோட்டாரை ஞாபகபடுத்தியமைக்கு பாராட்டுக்கள்

M.Jagadeesan
01-03-2011, 08:18 AM
பாராட்டுக்கு நன்றி! நிவாஸ்.டி அவர்களே!

M.Jagadeesan
01-03-2011, 08:20 AM
வாழ்த்துக்கு நன்றி! பிரேம்!

M.Jagadeesan
01-03-2011, 08:21 AM
நன்றி! உமாமீனா!!

ஜானகி
01-03-2011, 08:23 AM
ரசிக்கப்படும் போதுதான் கவிதை

இல்லாவிட்டால் வெறும் சொற்கோவை

இவ்வுண்மையை

பின்னூட்டம் இடாமல்

வெறுமனே படிப்போர்கள்

உணரும் நாள் எப்போது....?

இது எப்படி இருக்கு...?

M.Jagadeesan
01-03-2011, 08:27 AM
கவிதைக்குக் கவிதையைப்
பின்னூட்டமிட்ட ஜானகிக்கு
நன்றிகள் ஆயிரம்!!

உமாமீனா
01-03-2011, 08:29 AM
பின்னூட்டம் இடாமல்

வெறுமனே படிப்போர்கள்

உணரும் நாள் எப்போது....?

இது எப்படி இருக்கு...?

ஆகா ஆகா சரியாக சொன்னிர்கள் இடத்துக்கு ஏற்ற பொருள் பட

கீதம்
01-03-2011, 08:59 AM
முடங்கிக் கிடக்கும் மனங்களைத் தட்டியெழுப்பி இயங்கச் செய்யும் கவிதை.
பாராட்டுகள் ஐயா.

கீதம்
01-03-2011, 09:00 AM
ரசிக்கப்படும் போதுதான் கவிதை

இல்லாவிட்டால் வெறும் சொற்கோவை

இவ்வுண்மையை

பின்னூட்டம் இடாமல்

வெறுமனே படிப்போர்கள்

உணரும் நாள் எப்போது....?

இது எப்படி இருக்கு...?

சீரிய கண்ணோட்டத்தில் பிறந்த கவிதைக்கு இடப்பட்ட சிறப்புப் பின்னூட்டம். பாராட்டுகள் ஜானகி அவர்களே.

M.Jagadeesan
01-03-2011, 09:25 AM
பாராட்டுக்கு நன்றி! கீதம்!