M.Jagadeesan
26-02-2011, 04:16 AM
மலர் இருக்குது மணம் இருக்குது
வண்டைக் காணவில்லை..அன்பே!
வண்டைக் காணவில்லை.
தலம் இருக்குது கோயில் இருக்குது
தெய்வம் காணவில்லை..அன்பே!
தெய்வம் காணவில்லை.
கல் இருக்குது உளி இருக்குது
சிற்பி இங்கு இல்லை..அன்பே!
சிற்பி இங்கு இல்லை.
வில் இருக்குது அம்பு இருக்குது
வீரன் இங்கு இல்லை..அன்பே!
வீரன் இங்கு இல்லை.
யாழ் இருக்குது நரம்பு இருக்குது
மீட்டும் விரல் இல்லை..அன்பே!
மீட்டும் விரல் இல்லை.
வயல் இருக்குது விதை இருக்குது
உழவன் இங்கு இல்லை..அன்பே!
உழவன் இங்கு இல்லை.
படகு இருக்குது நதி இருக்குது
ஓடக காரன் இல்லை..அன்பே!
ஓடக் காரன் இல்லை.
பண் இருக்குது பாட்டு இருக்குது
பாடக் கலைஞன் இல்லை..அன்பே!
பாடக் கலைஞன் இல்லை.
கடல் இருக்குது அலை இருக்குது
நிலவை மட்டும் காணோம்..அன்பே!
நிலவை மட்டும் காணோம்.
உடல் இருக்குது உயிர் இருக்குது
உன்னை மட்டும் காணேன்..அன்பே!
உன்னை மட்டும் காணேன்.
வண்டைக் காணவில்லை..அன்பே!
வண்டைக் காணவில்லை.
தலம் இருக்குது கோயில் இருக்குது
தெய்வம் காணவில்லை..அன்பே!
தெய்வம் காணவில்லை.
கல் இருக்குது உளி இருக்குது
சிற்பி இங்கு இல்லை..அன்பே!
சிற்பி இங்கு இல்லை.
வில் இருக்குது அம்பு இருக்குது
வீரன் இங்கு இல்லை..அன்பே!
வீரன் இங்கு இல்லை.
யாழ் இருக்குது நரம்பு இருக்குது
மீட்டும் விரல் இல்லை..அன்பே!
மீட்டும் விரல் இல்லை.
வயல் இருக்குது விதை இருக்குது
உழவன் இங்கு இல்லை..அன்பே!
உழவன் இங்கு இல்லை.
படகு இருக்குது நதி இருக்குது
ஓடக காரன் இல்லை..அன்பே!
ஓடக் காரன் இல்லை.
பண் இருக்குது பாட்டு இருக்குது
பாடக் கலைஞன் இல்லை..அன்பே!
பாடக் கலைஞன் இல்லை.
கடல் இருக்குது அலை இருக்குது
நிலவை மட்டும் காணோம்..அன்பே!
நிலவை மட்டும் காணோம்.
உடல் இருக்குது உயிர் இருக்குது
உன்னை மட்டும் காணேன்..அன்பே!
உன்னை மட்டும் காணேன்.