மீனலோஷனி
06-04-2003, 06:03 PM
ண்ணே கண்மணியே
நான் கண்டெடுத்த சித்திரமே
கண்ணன் என் மேல்
நீ வைத்த பாசம்
கண்முன் இன்னும்
நிழலாடுதடி
கரையில்லா அன்பு
என் மேல் நீ வைத்தாய்
காற்றாய் என்னைத்
தழுவியே நின்றாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்
என் கையில் அடிபடவே
கதிகலங்கிப்போனாய்
கண்களில் நீர் கசிய
கருணையுடன் நின்றாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்
காய்ச்சலில் நான்
துடித்துக் கிடக்கவே
கண்ணே உன் கவனிப்பால்
கடல் கடக்க வைத்தாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்
கல்யாண பத்திரிகை
கையில் நீ தரவே
அன்பா என்றேன்
அழுதுகொண்டே
இல்லை காதல் என்றாய்
நான் கண்டெடுத்த சித்திரமே
கண்ணன் என் மேல்
நீ வைத்த பாசம்
கண்முன் இன்னும்
நிழலாடுதடி
கரையில்லா அன்பு
என் மேல் நீ வைத்தாய்
காற்றாய் என்னைத்
தழுவியே நின்றாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்
என் கையில் அடிபடவே
கதிகலங்கிப்போனாய்
கண்களில் நீர் கசிய
கருணையுடன் நின்றாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்
காய்ச்சலில் நான்
துடித்துக் கிடக்கவே
கண்ணே உன் கவனிப்பால்
கடல் கடக்க வைத்தாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்
கல்யாண பத்திரிகை
கையில் நீ தரவே
அன்பா என்றேன்
அழுதுகொண்டே
இல்லை காதல் என்றாய்