PDA

View Full Version : அன்றும்....இன்றும்..:பாகம்:1



ராஜாராம்
21-02-2011, 06:38 AM
(நிகழ்கால நிகழ்வுகள்)
இன்று..............நடப்பது....
21.02.2011..


"ஏய்..ராஜா...சீக்கிரம் புறப்படுடா....பொண்ணு வீட்டுல,எல்லாரும் உனக்காக வெய்ட் பன்னுறாங்க...",
என்றாள் ராஜாவின் அக்கா பிரியா,.

"நான் ரெடி...",
என்று உற்சாகம் இன்றி ராஜாவிடம் இருந்து பதில் வந்தது.

"என்ன?இன்னும் அந்தப் பொண்ணு சுஜாதாவையே நெனச்சுக்கிட்டே இருக்கிங்களா?
அதான் இல்லைன்னு ஆயிடுச்சே,,...நடக்கப்போறத பாருங்க",
என்ற ராஜாவின் அண்ணி கமலா,

"இப்ப உங்களுக்கு பார்க்கப்போற இந்தப் பொண்ணு,ரொம்ப அழகா இருப்பாளாம்.அவள் பேரு,.."ஷோபா"..
கூடப்பிறந்தவங்க யாரும் இல்லை..
பீ.எஸ்,ஸி படிச்சிருக்காள்...",
என்று படபடவென, விஷயத்தைக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

காதலிச்ச சுஜாவின் நினைவு ஒருபுறம் ராஜாவின் மனதில் நீங்காமல் பசுமையாய் படர்ந்திருக்க,
அந்தக் காதல் நிறைவேறமல் போனதும்,அவளை மறக்க தவியாய் தவித்ததும் முட்களைப்போல்
அவன் மனதை நெறுடிக் கொண்டும் இருந்தன.

(சிறிது நேரத்தில்,ராஜாவும் அவன் குடும்பத்தாரும்,பெண்ணின் வீட்டில் பெண்பார்க்கும் படலத்திற்கு தயாரகி இருந்தனர்)

"லெக்ஷ்மி....ஷோபாவைக் கூட்டிக்கிட்டு வாம்மா...",
என்று தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் பெண்ணின் தந்தை சந்தானம்,,,.,

மாம்பழக்கலரில் அழகியப் பட்டுப்புடவைக் கட்டி...
முகத்தை மேக்கப் செய்யாமல்....இயல்பான தோற்றத்தோடு...
தலை நிறைய மல்லிகை சூடி....
அழகு தேவதையாய் வந்தாள்,மணப்பெண் ஷோபா...
அவளைக் கண்ட ராஜாவின் மனம் சற்றே மெய்மறந்துப் போனது.

"வெள்ளாவியில் வெச்சு வெலுத்தாகளா....
உன்னை வெய்யிலுக்கேக் காட்டாமல் வளர்த்தாகளா...",
என்றப் பாடலை, அவளைப் பார்த்து பாடவேண்டும்போல் இருந்தது.
அவனுக்கு...

"மாப்பிள்ளையை நல்லாப் பார்த்துக்கம்மா,...",
என்று,ஷோபாவின் அப்பா, சந்தானம் கூறியதும்...
லேசான புன்னகையுடன் அவனை மெல்ல வெட்க்கத்தோடு,ஏறிட்டுப் பார்த்தாள் ஷோபா...

அவளது பார்வையைக் கண்டதும்

"கண்கள் இரண்டால்...
உன் கண்கள் இரண்டால்..
என்னைக் கட்டியிழுத்தாய்...
யிழுத்தாய்...போதாதென்று...
கள்ள சிரிப்பால்...
உன் கள்ள சிரிப்பால்....
என்னை தள்ளிவிட்டு
தள்ளிவிட்டு,....
மூடிமறைத்தாய்........",

என்று புதிதாய் வந்தப் படத்தின் பாடல் வரிகள்
உண்மைகளில் உணரப்பட்டன....



(இறந்தகால நினைவுகள்)_______(flash back)
அன்று நடந்தது...
19.05.2001...(வதானேஷ்வரர் கோவில்...மயிலாடுதுறை)

சுஜாதாவின் அப்பா சந்தானம்:-என்ன ராஜா,,..நீங்களும்,என் பொண்ணு சுஜாதாவும்
அடிக்கடி இங்க கோவிலில் சந்திச்சு பேசிக்கிட்டே இருக்கிங்களாமே?",

ராஜா:-சும்மாத்தான்,...பேசிக்கிட்டு இருப்போம்..

சந்தானம்:-சும்மான்னா?இதை நான் நம்பனுமா?...
அண்ணன் தங்கச்சியா பழகுறிங்களா?
நண்பர்களா பழகுறிங்களா?

ராஜா:-.............(மவுனமாக நின்றான்)

சந்தானம்:-சுஜா உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனாள்?",

ராஜா:-காலேஜில எனக்கு ஜூனியர்...நான் செகண்ட் இயர்,அவள் ஃபர்ஸ்ட் இயர்..",

சந்தானம்:-அவளைப் புடிச்சிருக்கா?",

ராஜா:-.......................

சந்தானம்:-நானும் என் மனைவியும் லவ் மேரேஜ் பன்னிக்கிட்டவங்கதான்....
ஏற்கனவே..உங்க குடும்பத்தைப் பற்றி நான் விசாரிச்சுட்டேன்....
பொண்ணப் புடிச்சிருந்தா சொல்லிடுங்க...
ஆனா...இப்படி கோவில்லே,..பார்க்கில்லே...பப்ளிக்கா பேசிக்கிட்டு
குடும்பமானத்தை கப்பலில் ஏற்றிடாதிங்க...",

ராஜா;-புடிச்சிருக்கு....சுஜாவை எனக்கு புச்சிருக்கு,,.",
என்றான் சற்றே அஞ்சியவன்னம்.

சந்தானம்:-சுஜாவிற்கு உங்களைப் புடிச்சிருக்கா?",

ராஜா:-"தெரியாது...
நாங்க காதலைப் பற்றிப் பேசியதே இல்லை..",

சந்தானம்:-அவளுக்கும் உங்களைப் புடிச்சிருக்காம்...
நான் விசாரிச்சிட்டேன்...
உங்களிடம் நிறையா பேசனும்..
நாளைக்குப் வீட்டிற்கு வாங்க",...
என்றுக் கூறிவிட்டு....நகர்ந்தார் சந்தானம்.

அன்று நடந்தது...
21.05.2001...
(சுஜாவின் வீட்டில் )

சந்தானம்:-படிப்பை நல்லவிதமா முடிங்க...
நல்லதொரு வேலையில் சேர்ந்து செட்டில் ஆகுங்க...
நானே,,,உங்க அப்பா,அம்மாவைப் பார்த்து பேசுறேன்...
ஆனால் அதுவரை கட்டுப்பாட இருக்கனும்....
எதுவும் பேசனும்னா இங்க வீட்டுக்கு வந்து பேசுங்க...
ரோட்டில கண்ட எடத்துல...நின்னுபேசி எங்க மானத்தை வாங்காதீங்க...",
என்றதும்,...

சுஜாவும்..
ராஜாவும்,.......
ஒருவரை ஒருவர் தன்னிலைமறந்து பார்க்க....

"ராஜாவின் பார்வை ராணியின் பர்க்கம்...
கண்தேடுதே சொர்க்கம்....
கைமூடுதே வெட்கம்....
பொன்மாலை மயக்கம்...
பொன்...மாலை.....மயக்கம்.......",

என்ற பழையப் பாடல்வரிகள்....
அன்று
நிஜங்களில் நிறைவேறின...................


(தொடரும்.....................)

Nivas.T
21-02-2011, 06:58 AM
நல்ல இருக்கு ராஜாராம்
தொடருங்கள்

முரளிராஜா
21-02-2011, 07:32 AM
[COLOR="DarkGreen"](நிகழ்கால நிகழ்வுகள்)
இன்று..............நடப்பது....



மாம்பழக்கலரில் அழகியப் பட்டுப்புடவைக் கட்டி...
முகத்தை மேக்கப் செய்யாமல்....இயல்பான தோற்றத்தோடு...
தலை நிறைய மல்லிகை சூடி....
அழகு தேவதையாய் வந்தாள்,மணப்பெண் ஷோபா...
அவளைக் கண்ட ராஜாவின் மனம் சற்றே மெய்மறந்துப் போனது.

"வெள்ளாவியில் வெச்சு வெலுத்தாகளா....
உன்னை வெய்யிலுக்கேக் காட்டாமல் வளர்த்தாகளா...",
என்றப் பாடலை, அவளைப் பார்த்து பாடவேண்டும்போல் இருந்தது.
அவனுக்கு...



தொடர்ந்து எழுது ராரா (மேற்கோள் எதுக்குன்னு உனக்கு புரிஞ்சா சரி)

உமாமீனா
21-02-2011, 07:51 AM
தொடர்ந்து வரட்டும் அப்புறம் வக்கிறேன்....

ராஜாராம்
21-02-2011, 09:49 AM
தொடர்ந்து எழுது ராரா (மேற்கோள் எதுக்குன்னு உனக்கு புரிஞ்சா சரி)

இதை எதுக்கு முரளி சொல்லிருக்கே?
எனக்கு ஒன்னுமே புரியலையே? :frown:

ராஜாராம்
21-02-2011, 09:51 AM
தொடர்ந்து வரட்டும் அப்புறம் வக்கிறேன்....

:icon_rollout: ஒரு பச்சப்புள்ளைய இப்படியா மிரட்டுறது.....
:traurig001:

ராஜாராம்
21-02-2011, 09:53 AM
நன்றி நிவாஸ்...
நிவாஸு .....!!!!
பின்னூட்டலில்,என்னை ஆளாளுக்கு மிரட்டுறாங்க....
(என்னை ஒரு பச்சப்புள்ளைன்னுகூடப் பார்க்காமல்)

முரளிராஜா
21-02-2011, 10:28 AM
இதை எதுக்கு முரளி சொல்லிருக்கே?
எனக்கு ஒன்னுமே புரியலையே? :frown:
உன் மர மண்டைக்கு நான் சொன்னா விளங்காதுன்னு வரவேண்டியவங்களை வர
சொல்லி இருக்கேன் அப்ப விளங்கும்

sarcharan
21-02-2011, 10:48 AM
2001- 2011..பத்து வருஷ இடைவெளியா? இடையில் என்ன ஆச்சு?

ராஜாராம்
21-02-2011, 10:50 AM
வரவேண்டியவங்களை வரசொல்லி இருக்கியா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒருத்தனை கோத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கறதுள அம்புட்டு சந்தோஷமா உனக்கு....
(ஏன்,...ஏன்....ஏன் இந்தக் கொலைவெறி)

Nivas.T
21-02-2011, 11:00 AM
நன்றி நிவாஸ்...
நிவாஸு .....!!!!
பின்னூட்டலில்,என்னை ஆளாளுக்கு மிரட்டுறாங்க....
(என்னை ஒரு பச்சப்புள்ளைன்னுகூடப் பார்க்காமல்)

:eek::eek::eek:
பச்சபுள்ளைய யாரு? யாரு?

மாயவரத்துல பச்சப்புள்ள இப்படித்தான் பாடுமா ராஜாராம்?

"வெள்ளாவியில் வெச்சு வெலுத்தாகளா....
உன்னை வெய்யிலுக்கேக் காட்டாமல் வளர்த்தாகளா...",

"கண்கள் இரண்டால்...
உன் கண்கள் இரண்டால்..
என்னைக் கட்டியிழுத்தாய்...
யிழுத்தாய்...போதாதென்று...
கள்ள சிரிப்பால்...
உன் கள்ள சிரிப்பால்....
என்னை தள்ளிவிட்டு
தள்ளிவிட்டு,....
மூடிமறைத்தாய்........",

"ராஜாவின் பார்வை ராணியின் பர்க்கம்...
கண்தேடுதே சொர்க்கம்....
கைமூடுதே வெட்கம்....
பொன்மாலை மயக்கம்...
பொன்...மாலை.....மயக்கம்.......",
:wuerg019::wuerg019::wuerg019::wuerg019:

முரளிராஜா
21-02-2011, 11:07 AM
அட நிவாஸ் நீங்க நம்ம பக்கமா?

sarcharan
21-02-2011, 11:11 AM
அட நிவாஸ் நீங்க நம்ம பக்கமா?

பாத்து அப்புறம் பக்கம் பக்கமா புரட்டீர போறாங்க :aetsch013:

ராஜாராம்
21-02-2011, 11:12 AM
நிவாஸுஸுஸு...!!!!!!!,
நீங்களும் அந்தப் பக்கம்மா...............!!!!!!!!!!!!!!!??????***???!!!!,

(முந்தியெல்லாம் தனித்தனியா தான் வந்து அடிப்பாய்ங்க.....
இப்பையெல்லாம்....இதுக்குன்னு கூட்டணி தயார் பன்னி சேர்ந்து வந்து அடிக்கிறான்ய்ங்களே..... அவ்வ்வ்வ்வ்வ்வ்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்,... :medium-smiley-045:

sarcharan
21-02-2011, 11:15 AM
இப்பையெல்லாம்....இதுக்குன்னு கூட்டணி தயார் பன்னி சேர்ந்து வந்து அடிக்கிறான்ய்ங்களே..... அவ்வ்வ்வ்வ்வ்வ்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்,... :medium-smiley-045:

என்னது? சீ சீ.. என்ன ஒரு கூட்டணி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்,...

உமாமீனா
21-02-2011, 11:17 AM
நிவாஸுஸுஸு...!!!!!!!,
நீங்களும் அந்தப் பக்கம்மா...............!!!!!!!!!!!!!!!??????***???!!!!,

(முந்தியெல்லாம் தனித்தனியா தான் வந்து அடிப்பாய்ங்க.....
இப்பையெல்லாம்....இதுக்குன்னு கூட்டணி தயார் பன்னி சேர்ந்து வந்து அடிக்கிறான்ய்ங்களே..... அவ்வ்வ்வ்வ்வ்வ்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்,... :medium-smiley-045:

கூட்டமா வந்தா அதுக்கு பெயர் வேற. என்னது சின்னபுள்ளதனமா?

இன்னும் அடுத்த பாகத்தை எழுதலை? பச்சபுள்ள நீ எழுது அப்புறமாக வச்சிகிறேன்.

Nivas.T
21-02-2011, 11:18 AM
அட நிவாஸ் நீங்க நம்ம பக்கமா?

காட்டுமன்னார் கோயில், மீன்சுருட்டி :rolleyes:


பாத்து அப்புறம் பக்கம் பக்கமா புரட்டீர போறாங்க :aetsch013:

:eek: நான் என்ன பரோட்டா மாவா? :lachen001:


நிவாஸுஸுஸு...!!!!!!!,
நீங்களும் அந்தப் பக்கம்மா...............!!!!!!!!!!!!!!!??????***???!!!!,

(முந்தியெல்லாம் தனித்தனியா தான் வந்து அடிப்பாய்ங்க.....
இப்பையெல்லாம்....இதுக்குன்னு கூட்டணி தயார் பன்னி சேர்ந்து வந்து அடிக்கிறான்ய்ங்களே..... அவ்வ்வ்வ்வ்வ்வ்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்,... :medium-smiley-045:


நல்லகாரியம் நடந்த அத ஒன்னுகூடி செய்யிறது தப்பிலதான?:rolleyes::D:D:D:D

ராஜாராம்
21-02-2011, 11:22 AM
இன்னும் அடுத்த பாகத்தை எழுதலை? பச்சபுள்ள நீ எழுது அப்புறமாக வச்சிகிறேன்.

நீங்களும் அந்தக் குரூப்பா???(முரளி,நிவாஸ்,பிரேம்.)
ஏதோ உள்குத்தோட மிரட்டுறாப்ளயே இருக்கே?.....

பிரேம்
21-02-2011, 11:22 AM
நல்லகாரியம் நடந்த அத ஒன்னுகூடி செய்யிறது தப்பிலதான?:rolleyes::D:D:D:D[/QUOTE]

அதையும் நம்ம..வழக்கத்துக்கு மாறா..
வெகுவிமர்சியா செஞ்சிரனும்...என்ன சொல்றீங்க..:icon_b:

sarcharan
21-02-2011, 11:23 AM
நல்லகாரியம் நடந்த அத ஒன்னுகூடி செய்யிறது தப்பிலதான?:rolleyes::D:D:D:D

நாலு பேருக்கு நல்லது செய்யறதா இருந்த எதுவமே நல்லதுதான்
அப்படிங்கற உங்க தீர்ப்பு, சொல்லுகிற விதம் அட அட..

உண்மையிலேயே நாயகன் கமல் மாதிரி (அழுது) சொல்லீட்டீங்க

மன்ற நீதிபதி நிவாஸ்

நீங்க ஒரு நீதிமான் கவரிமான் அந்தமான்

Nivas.T
21-02-2011, 11:32 AM
அதையும் நம்ம..வழக்கத்துக்கு மாறா..
வெகுவிமர்சியா செஞ்சிரனும்...என்ன சொல்றீங்க..:icon_b:

அப்படியே ஆகட்டும் தவறொன்றுமில்லை:icon_b:


நாலு பேருக்கு நல்லது செய்யறதா இருந்த எதுவமே நல்லதுதான்
அப்படிங்கற உங்க தீர்ப்பு, சொல்லுகிற விதம் அட அட..

உண்மையிலேயே நாயகன் கமல் மாதிரி (அழுது) சொல்லீட்டீங்க

மன்ற நீதிபதி நிவாஸ்

நீங்க ஒரு நீதிமான் கவரிமான் அந்தமான்

என்னது நான் நீதிமானா? ரொம்பப் புகழாதிங்கப்பா..


நீதிமான் கவரிமான் சரி அது என்ன?அந்தமான்?
என்ன உள்குத்து இருக்குன்னு தெரியலையே