lenram80
16-02-2011, 05:34 PM
இன்று
நல்ல பொழுதாய் இருக்கப் போவதில்லை!
எண்ணிக் கொண்டான் இந்த தம்பிப் பிள்ளை!
முதன் முதலாய் பகல் இரவாகப் பட்டது!
பாதியில் விட்டுப் போவது இவனைச் சுட்டது!
இது தொடக்கமா? முடிவா?
இல்லை புது விடிவா?
அத்தனை தியாகமும் வீண்!
அத்தனை காயமும் வீண்!
ஆண்டாண்டாய் வளர்ந்த மரம்
அரை நொடியில் அடியோடு அறுந்தது காண்!
கால் நூற்றாண்டாய் கட்டிய கோட்டை
கால் நொடியில் அழிந்தது காண்!
வருடக்கணக்கில் வளர்பிறை!
தினக் கணக்கில் தேய்பிறை!
என்ன நியாயம்?
வளர்ந்து மரமாகாமல்
மீண்டும் விதை ஆனது
என்ன நீதி?
சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை!
தானாகத் தரப்படுவது!
தடுக்கப்பட்ட நிலை வந்ததால்
எடுக்கப்பட வேண்டிய நிலையும் வந்தது!
சுதந்திரம் என்பது பிறப்புரிமை!
அதைப் பிடுங்க எவருக்கும் இல்லை உரிமை!
அறவழியில் கேட்டோம்!
அரக்க வழியில் விடை வந்தது!
அமைதியாய் கேட்டோம்!
அடக்கப் படை வந்தது!
அடித்த சத்தம் கேட்டதே தவிர
எங்கள் அழகைச் சத்தம் கேட்டதில்லை!
எங்கள் சிசுக்கள் பசிக்கு அழுததே தவிர
ஒருநாளும் பயந்து அழுததில்லை!
விழுந்த ஒவ்வொரு அடியும்
அவனே அறியாமல் -
அவனே போட்ட எங்களின் அடித்தளம்!
பறந்து வந்த ஒவ்வொரு செல்லும்
குண்டுக் குழி மட்டும் போடவில்லை!
புலிகள் ஒன்று சேர
பிள்ளையார் சுழியும் சேர்த்துப் போட்டது!
வலியாய் பட்ட ஒவ்வொரு பழியும்
புலியாய் மாறி புத்துயிர் பெற்றது!
பயந்தது பாய்ந்தது!
பாய்ந்தது கை ஓங்கியது!
ஓங்கியது உயிர் வாங்கியது!
இப்படி
ஆண்ட இயக்கம் இத்தோடு மாண்டதா?
ஓங்கிய கை இத்தோடு ஓய்ந்ததா?
(புரட்சி இன்னும் படரும்!
கவி இன்னும் தொடரும்!....)
நல்ல பொழுதாய் இருக்கப் போவதில்லை!
எண்ணிக் கொண்டான் இந்த தம்பிப் பிள்ளை!
முதன் முதலாய் பகல் இரவாகப் பட்டது!
பாதியில் விட்டுப் போவது இவனைச் சுட்டது!
இது தொடக்கமா? முடிவா?
இல்லை புது விடிவா?
அத்தனை தியாகமும் வீண்!
அத்தனை காயமும் வீண்!
ஆண்டாண்டாய் வளர்ந்த மரம்
அரை நொடியில் அடியோடு அறுந்தது காண்!
கால் நூற்றாண்டாய் கட்டிய கோட்டை
கால் நொடியில் அழிந்தது காண்!
வருடக்கணக்கில் வளர்பிறை!
தினக் கணக்கில் தேய்பிறை!
என்ன நியாயம்?
வளர்ந்து மரமாகாமல்
மீண்டும் விதை ஆனது
என்ன நீதி?
சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை!
தானாகத் தரப்படுவது!
தடுக்கப்பட்ட நிலை வந்ததால்
எடுக்கப்பட வேண்டிய நிலையும் வந்தது!
சுதந்திரம் என்பது பிறப்புரிமை!
அதைப் பிடுங்க எவருக்கும் இல்லை உரிமை!
அறவழியில் கேட்டோம்!
அரக்க வழியில் விடை வந்தது!
அமைதியாய் கேட்டோம்!
அடக்கப் படை வந்தது!
அடித்த சத்தம் கேட்டதே தவிர
எங்கள் அழகைச் சத்தம் கேட்டதில்லை!
எங்கள் சிசுக்கள் பசிக்கு அழுததே தவிர
ஒருநாளும் பயந்து அழுததில்லை!
விழுந்த ஒவ்வொரு அடியும்
அவனே அறியாமல் -
அவனே போட்ட எங்களின் அடித்தளம்!
பறந்து வந்த ஒவ்வொரு செல்லும்
குண்டுக் குழி மட்டும் போடவில்லை!
புலிகள் ஒன்று சேர
பிள்ளையார் சுழியும் சேர்த்துப் போட்டது!
வலியாய் பட்ட ஒவ்வொரு பழியும்
புலியாய் மாறி புத்துயிர் பெற்றது!
பயந்தது பாய்ந்தது!
பாய்ந்தது கை ஓங்கியது!
ஓங்கியது உயிர் வாங்கியது!
இப்படி
ஆண்ட இயக்கம் இத்தோடு மாண்டதா?
ஓங்கிய கை இத்தோடு ஓய்ந்ததா?
(புரட்சி இன்னும் படரும்!
கவி இன்னும் தொடரும்!....)