Nanban
02-12-2003, 04:53 PM
மேடை தேடும் கவிஞன்........
வேஷம் கட்டி
ஆடுவதில்
நீ சமத்து.....
நேருக்கு நேராய்
மைதானத்தில்
மோதுவது
மட்டும் தான்
நான்.....
களத்தில்
கோல் அடித்த பொழுது
கை தட்டுவாய் நீ....
மேடையில்
நீ
வரும் பொழுது
கூச்சலிடத் தான்
தெரியும் எனக்கு.....
கண்ணீருடன்
நீ போய் விட்டாய்...
உனக்குத் தெரியாது -
இன்று
நான் கண்ணீருடன்
மேடைகளைத் தேடுவது......
வேஷம் கட்டி
ஆடுவதில்
நீ சமத்து.....
நேருக்கு நேராய்
மைதானத்தில்
மோதுவது
மட்டும் தான்
நான்.....
களத்தில்
கோல் அடித்த பொழுது
கை தட்டுவாய் நீ....
மேடையில்
நீ
வரும் பொழுது
கூச்சலிடத் தான்
தெரியும் எனக்கு.....
கண்ணீருடன்
நீ போய் விட்டாய்...
உனக்குத் தெரியாது -
இன்று
நான் கண்ணீருடன்
மேடைகளைத் தேடுவது......