பிரேம்
13-02-2011, 11:51 PM
தான் கொண்ட காதலுக்காய்..
மேகத்திலிருந்து விடுபட்டு..
மண்ணோடு விழுகின்றன மழைத்துளிகள்..
விழுந்த துளிகளுக்கு விடைகொடுத்து..
மீண்டும் மேகத்தோடு சேர்த்துவிடுகிறது மண்..
துளியின் காதலை மன்ணறிவது எப்போது..
கொட்டித் தீர்த்த மழையின்
ஞாபகமாய்.. மரக்கிளை சேர்த்து வைத்த
சில துளிகள்..நில்லாமலே சென்று விடுகின்றன..
துளிகளுக்கு தெரியுமா கிளையின் காதல்..
கிளையோடு வாழவே..
கனிகள் விரும்பினாலும் கூட...
காலம் வந்தபின் கனிகளை
கைவிடுகிறன கிளைகள்...
கனியின் காதலை கிளையறியுமா..
நாளெல்லாம்..
அலையின் காதலை சொல்லாமல் சொன்னாலும்..
அடிப்பதாய் வந்து உரசிச் சென்றாலும்...
அதனின் காதல் அசட்டயாக்கப் படுகிறதே..
கரை அறியுமா அலையின் ஆவலை..
காண்பதெல்லாம் அவளாய் தோன்ற - அவள்
கண்முன் தோன்றினால் மட்டும்..
காட்டமாய் பார்க்கிறாள்..-
கடவுளே...இந்த
கனவுக் காதலை...அந்த
கண்மணி அறிவதென்று...
அதுசரி..
காலமே இந்த காதலென்று..
கடவுளே கண்ணீர் விட்டாலும்கூட
விடைகொடுத்த விழிகளை..
விரக்தியோடு பார்க்குமே துளிகள்..
கண்ணீரின் காதலை கடவுள் அறிவாரா..
மேகத்திலிருந்து விடுபட்டு..
மண்ணோடு விழுகின்றன மழைத்துளிகள்..
விழுந்த துளிகளுக்கு விடைகொடுத்து..
மீண்டும் மேகத்தோடு சேர்த்துவிடுகிறது மண்..
துளியின் காதலை மன்ணறிவது எப்போது..
கொட்டித் தீர்த்த மழையின்
ஞாபகமாய்.. மரக்கிளை சேர்த்து வைத்த
சில துளிகள்..நில்லாமலே சென்று விடுகின்றன..
துளிகளுக்கு தெரியுமா கிளையின் காதல்..
கிளையோடு வாழவே..
கனிகள் விரும்பினாலும் கூட...
காலம் வந்தபின் கனிகளை
கைவிடுகிறன கிளைகள்...
கனியின் காதலை கிளையறியுமா..
நாளெல்லாம்..
அலையின் காதலை சொல்லாமல் சொன்னாலும்..
அடிப்பதாய் வந்து உரசிச் சென்றாலும்...
அதனின் காதல் அசட்டயாக்கப் படுகிறதே..
கரை அறியுமா அலையின் ஆவலை..
காண்பதெல்லாம் அவளாய் தோன்ற - அவள்
கண்முன் தோன்றினால் மட்டும்..
காட்டமாய் பார்க்கிறாள்..-
கடவுளே...இந்த
கனவுக் காதலை...அந்த
கண்மணி அறிவதென்று...
அதுசரி..
காலமே இந்த காதலென்று..
கடவுளே கண்ணீர் விட்டாலும்கூட
விடைகொடுத்த விழிகளை..
விரக்தியோடு பார்க்குமே துளிகள்..
கண்ணீரின் காதலை கடவுள் அறிவாரா..