inban
13-02-2011, 03:28 PM
மனதை தாளிட்டவளே
காலத் துளிகளை
விரயமாக்கிவிட்டாய்
கல் எனும் மனதில்
எறும்பாய் ஊர்ந்தேன்
நீதான்
தத்துவத்தையே
தகர்த்துப் போய்விட்டாய்
பெண்ணே
என் சகாராவை பிளந்தோடி
சட்டென்று வற்றிப்போன
நைல் நீ
பூ சூடுபவளே
என் இதயமும்
பூ போலத்தானே
இதையும் சூடிஇருந்தால் என்னவாம்?
என்காதல் கேணியில்
கல் எறிந்தவளே
உன் அலையில்
என் கரைகள்
சிதைக்கப் பட்டதைப்பார்
அந்த ஆடிக்காற்றில்
அனாதையான
உன் கூந்தல் முடிகளில்
முத்துக்களை சேகரித்திருக்கிறேன்
உன்னோடு பேச வந்து
முகம் நோக்கா போனதுண்டு,
உன்னை தொட வந்து
நிழலேனும் தீண்டியதில்லை
முதலில் முரடன் என்றாய்,
பிறகு கோழை என்றாய்,
இப்போதோ
பைத்தியமென்கிறாய்...
கட்டுப்பாடுகளும் சமூகமும்
கைவிலங்காக
சிறை கூடமாய்
உன் நினைவுகள்
போகட்டும்!
எல்லாம் போகட்டும்!!
என்மரிப்பிலாவது
சிதையோடு
உன் நினைவுகளும்
புதைந்து போகட்டும் .
காலத் துளிகளை
விரயமாக்கிவிட்டாய்
கல் எனும் மனதில்
எறும்பாய் ஊர்ந்தேன்
நீதான்
தத்துவத்தையே
தகர்த்துப் போய்விட்டாய்
பெண்ணே
என் சகாராவை பிளந்தோடி
சட்டென்று வற்றிப்போன
நைல் நீ
பூ சூடுபவளே
என் இதயமும்
பூ போலத்தானே
இதையும் சூடிஇருந்தால் என்னவாம்?
என்காதல் கேணியில்
கல் எறிந்தவளே
உன் அலையில்
என் கரைகள்
சிதைக்கப் பட்டதைப்பார்
அந்த ஆடிக்காற்றில்
அனாதையான
உன் கூந்தல் முடிகளில்
முத்துக்களை சேகரித்திருக்கிறேன்
உன்னோடு பேச வந்து
முகம் நோக்கா போனதுண்டு,
உன்னை தொட வந்து
நிழலேனும் தீண்டியதில்லை
முதலில் முரடன் என்றாய்,
பிறகு கோழை என்றாய்,
இப்போதோ
பைத்தியமென்கிறாய்...
கட்டுப்பாடுகளும் சமூகமும்
கைவிலங்காக
சிறை கூடமாய்
உன் நினைவுகள்
போகட்டும்!
எல்லாம் போகட்டும்!!
என்மரிப்பிலாவது
சிதையோடு
உன் நினைவுகளும்
புதைந்து போகட்டும் .