ராஜாராம்
11-02-2011, 12:39 PM
இது ஒரு உண்மைச் சம்பவம்.சம்மந்தப்பட்ட,நபர்களது பெயர்களும்,ஊரின் பெயரும்,மாற்றம் செய்யப்பட்டுள்ளது.யாரையும் புண்பத்தவேண்டும் என்ற நோக்கில்,இப்படைப்பு, படைக்கப்படவில்லை.
கதைவடிவில் சித்தரிப்பதற்காக நேரிடை வசனங்களும்,நடையும் மாற்றப்பட்டுள்ளது))
(21.4.2003...சிதம்பரம் ,அருகே, பரங்கிப்பேட்டை..)
மங்களத்தின் ஒரே மகன் செல்வக்குமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தான்.கனவனை இழந்த மங்களத்திற்கு,அவளது மகன்,மருமகள்,அவளது பேரன் சக்தி,இவர்கள் மூவர்தான் ஆதரவாக அவள் எண்ணிய உறவுகள்.நாளடைவில்.....மங்களத்திற்கும்,அவளது மகனுக்கும்,ஒற்றுவராமல் போனது.
"வயசான காலத்தில,,...போட்டதை சாப்பிட்டுவிட்டு...ஒரு மூலையிலே படுத்து தூங்கவேண்டியதுதானே",..என்று அவளது மகன் கூற,
அதற்கு மங்களமோ
"மூலையிலே கிடக்க நான் என்ன?உன் வீட்டு நாயா?என் சொத்தெல்லாம் உனக்குத்தானேடா எழுதி வேச்சேன்..அப்படி இருந்தும் இப்படி பேசுறியே...நன்றி கெட்ட நாயே",என்று மங்களம் கண்ணீருன் சப்தமிட,
"இந்தே...என்ன ஓவரா பேசுரே.....நாயி...கீயினுல்லாம்...என் புருஷனை என் எதிர்லேயே திட்டுறியே...கெழ முண்டம்"என்று அவளது மருமகள் பதிலுக்கு காரசாரமாய் கூச்சளிட்டாள்.
அப்பா அம்மா பாட்டி போடும் சண்டையினைக் கண்டு ,10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த,மங்களத்தின் பேரன் சக்தி...திறுதிறுவென விழித்துக்கொண்டு ஒரு மூலையில் நின்றான்.
(29.05.2003.காலை 11மணி)
வழக்கம்போல,மங்களத்திற்கும் அவளது மகனுக்கும்,மருமகளுக்கும்,இடையே ஏற்பட்டக் கலவரம்,அத்துமீறி ஒருவருக்கு ஒருவர் ,வார்த்தைகள் தடிக்கும்வன்னம்,ஆனது.
ஒருக்கட்டத்தில்,இறுதியில் மங்களத்தின் மகன்,அவளை கண்மூடித்தனமாக அடித்து,அவளை வீட்டு வாசலின் வெளியேத்தள்ளினான்.
"டேய்...நீ நாசமாத்தான்டா போவே....உன் குடும்பம்மே மண்ணோட மண்ணாப் போயிடும்பாரு.....ஐயோ ஐயோ...என் வயிறு எரியுதேடா....சண்டாளா...நாசமாப்போடா....",என்று வாய்க்கு வந்தப்படி தன் மகனை சபித்துவிட்டு,...கைநிறைய மண்ணை வாரிவாரி இரைத்தாள்.
அதற்குப்பின் ....மங்களத்திற்கு ஆதரவு அளித்தது...பாண்டிச்சேரி தீபஒளி முதியோர் இல்லம்.
(22.2.2005..பாண்டிச்சேரி..தீபஒளி முதியோர் இல்லம்...)
ஆதரவற்ற குழந்தைகள்,சிலரை அந்த முதியோர் இல்லத்திற்கு தஞ்சமாக அழைத்துவந்தார்...அந்த இல்லத்தின் நிறுவனர் சுந்தரமூர்த்தி.ஆம்...சுனாமியால் குடும்பங்களை இழந்தவர்கள்,..அந்த சிறுவர்கள்.அந்த சிறுவர்களைக் கண்ட ,முதியோர்கள்,சந்தோஷமாய் அவர்களை வரவேற்று,கொஞ்சி மகிழ்ந்தனர்.
அந்த சிறுவர்கள் கூட்டத்தில் இருந்து, ஓடோடி வந்த மங்களத்தின் பேரன்
"பாட்டி...!!!!",என்று கதறிஅழுதவன்னம்,...அவளை கட்டிஅனைத்தான்..
அவனைக்கணட,மங்களம்,ஒருநிமிடம் அதிர்ச்சியில் உறைந்தேப் போனாள்.
"பாட்டி...!!!!,போன வருஷம் வந்த சுனாமியில்...அப்பா அம்மா...ரெண்டுபேரும் கடலில் மூழ்கி செத்துப்போயிட்டாங்க,...நம்ம வீடு வாசல் எல்லாம் அழிஞ்சிப்போச்சு",...என்று அவன் கூறியதுதான் தாமதம்....
"ஐயையோ....செல்வக்குமாரு...என்னை விட்டு போயிட்டியேடா,,,...நான் சபித்தது...என் புள்ளைக்கு பலித்துவிட்டதே...ஐயையோ,...என் புள்ளைய நானே சபித்துக் கொன்னுட்டேனே...நான் பாவி நான் பாவி...புள்ளையக் கொன்னப் பாவி",...என்று தலையில் அடித்துக் கொண்டு,
"உன் குடும்பம் மண்ணா போகனும்னு சொன்னேன் அது நடந்துப்போச்சே,....நான்தான்டா பாவி..",கதறி அழுதவன்னம் மயங்கி விழுந்தாள்.
இன்று
(11.02.2011...பெங்களூர்)
தான் கோபத்தில் திட்டிய வார்த்தைகள்,மகனுக்கு நடந்துவிட்டதை எண்ணி வருந்திய மங்களம்,அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியேறினாள்.தன் மகனது வசம்சம் தழைக்கவேண்டும்.அது மண்ணோடு மண்ணாக ஆனது என்று ஆகக்கூடாது என்று எண்ணினாள்..
தனது பேரனுக்காக,புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.அடுக்குமாடி குடுயிருப்பில் வசிப்பவர்கள்.,,வீடுகளில் வீட்டு வேலை செய்துக் கொண்டு இருக்கிறாள்.மற்ற நேரங்களில்,அப்பளம்,வடகம்,செய்து,அதை கடைகளுக்கு விற்பனையும் செய்கிறாள்.
அவளதுப்பேரன்,தனியார் நிறுவனத்தில்,கணினித்துறையில் கைநிறைய சம்பாதிக்கின்றான்.
தன் பேரன் சக்திக்கு,நல்ல இடத்தில்திருமணம் செய்து,அவன் பெற்றெடுக்கும் பிள்ளையைப்(தன் மகனது வம்சத்தை),.. பார்த்த பிறகே....தான் கண்மூடவேண்டும்,என்று கடவுளிடம் தினம் வேண்டிக்கொள்கிறாள்.
கதைவடிவில் சித்தரிப்பதற்காக நேரிடை வசனங்களும்,நடையும் மாற்றப்பட்டுள்ளது))
(21.4.2003...சிதம்பரம் ,அருகே, பரங்கிப்பேட்டை..)
மங்களத்தின் ஒரே மகன் செல்வக்குமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தான்.கனவனை இழந்த மங்களத்திற்கு,அவளது மகன்,மருமகள்,அவளது பேரன் சக்தி,இவர்கள் மூவர்தான் ஆதரவாக அவள் எண்ணிய உறவுகள்.நாளடைவில்.....மங்களத்திற்கும்,அவளது மகனுக்கும்,ஒற்றுவராமல் போனது.
"வயசான காலத்தில,,...போட்டதை சாப்பிட்டுவிட்டு...ஒரு மூலையிலே படுத்து தூங்கவேண்டியதுதானே",..என்று அவளது மகன் கூற,
அதற்கு மங்களமோ
"மூலையிலே கிடக்க நான் என்ன?உன் வீட்டு நாயா?என் சொத்தெல்லாம் உனக்குத்தானேடா எழுதி வேச்சேன்..அப்படி இருந்தும் இப்படி பேசுறியே...நன்றி கெட்ட நாயே",என்று மங்களம் கண்ணீருன் சப்தமிட,
"இந்தே...என்ன ஓவரா பேசுரே.....நாயி...கீயினுல்லாம்...என் புருஷனை என் எதிர்லேயே திட்டுறியே...கெழ முண்டம்"என்று அவளது மருமகள் பதிலுக்கு காரசாரமாய் கூச்சளிட்டாள்.
அப்பா அம்மா பாட்டி போடும் சண்டையினைக் கண்டு ,10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த,மங்களத்தின் பேரன் சக்தி...திறுதிறுவென விழித்துக்கொண்டு ஒரு மூலையில் நின்றான்.
(29.05.2003.காலை 11மணி)
வழக்கம்போல,மங்களத்திற்கும் அவளது மகனுக்கும்,மருமகளுக்கும்,இடையே ஏற்பட்டக் கலவரம்,அத்துமீறி ஒருவருக்கு ஒருவர் ,வார்த்தைகள் தடிக்கும்வன்னம்,ஆனது.
ஒருக்கட்டத்தில்,இறுதியில் மங்களத்தின் மகன்,அவளை கண்மூடித்தனமாக அடித்து,அவளை வீட்டு வாசலின் வெளியேத்தள்ளினான்.
"டேய்...நீ நாசமாத்தான்டா போவே....உன் குடும்பம்மே மண்ணோட மண்ணாப் போயிடும்பாரு.....ஐயோ ஐயோ...என் வயிறு எரியுதேடா....சண்டாளா...நாசமாப்போடா....",என்று வாய்க்கு வந்தப்படி தன் மகனை சபித்துவிட்டு,...கைநிறைய மண்ணை வாரிவாரி இரைத்தாள்.
அதற்குப்பின் ....மங்களத்திற்கு ஆதரவு அளித்தது...பாண்டிச்சேரி தீபஒளி முதியோர் இல்லம்.
(22.2.2005..பாண்டிச்சேரி..தீபஒளி முதியோர் இல்லம்...)
ஆதரவற்ற குழந்தைகள்,சிலரை அந்த முதியோர் இல்லத்திற்கு தஞ்சமாக அழைத்துவந்தார்...அந்த இல்லத்தின் நிறுவனர் சுந்தரமூர்த்தி.ஆம்...சுனாமியால் குடும்பங்களை இழந்தவர்கள்,..அந்த சிறுவர்கள்.அந்த சிறுவர்களைக் கண்ட ,முதியோர்கள்,சந்தோஷமாய் அவர்களை வரவேற்று,கொஞ்சி மகிழ்ந்தனர்.
அந்த சிறுவர்கள் கூட்டத்தில் இருந்து, ஓடோடி வந்த மங்களத்தின் பேரன்
"பாட்டி...!!!!",என்று கதறிஅழுதவன்னம்,...அவளை கட்டிஅனைத்தான்..
அவனைக்கணட,மங்களம்,ஒருநிமிடம் அதிர்ச்சியில் உறைந்தேப் போனாள்.
"பாட்டி...!!!!,போன வருஷம் வந்த சுனாமியில்...அப்பா அம்மா...ரெண்டுபேரும் கடலில் மூழ்கி செத்துப்போயிட்டாங்க,...நம்ம வீடு வாசல் எல்லாம் அழிஞ்சிப்போச்சு",...என்று அவன் கூறியதுதான் தாமதம்....
"ஐயையோ....செல்வக்குமாரு...என்னை விட்டு போயிட்டியேடா,,,...நான் சபித்தது...என் புள்ளைக்கு பலித்துவிட்டதே...ஐயையோ,...என் புள்ளைய நானே சபித்துக் கொன்னுட்டேனே...நான் பாவி நான் பாவி...புள்ளையக் கொன்னப் பாவி",...என்று தலையில் அடித்துக் கொண்டு,
"உன் குடும்பம் மண்ணா போகனும்னு சொன்னேன் அது நடந்துப்போச்சே,....நான்தான்டா பாவி..",கதறி அழுதவன்னம் மயங்கி விழுந்தாள்.
இன்று
(11.02.2011...பெங்களூர்)
தான் கோபத்தில் திட்டிய வார்த்தைகள்,மகனுக்கு நடந்துவிட்டதை எண்ணி வருந்திய மங்களம்,அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியேறினாள்.தன் மகனது வசம்சம் தழைக்கவேண்டும்.அது மண்ணோடு மண்ணாக ஆனது என்று ஆகக்கூடாது என்று எண்ணினாள்..
தனது பேரனுக்காக,புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.அடுக்குமாடி குடுயிருப்பில் வசிப்பவர்கள்.,,வீடுகளில் வீட்டு வேலை செய்துக் கொண்டு இருக்கிறாள்.மற்ற நேரங்களில்,அப்பளம்,வடகம்,செய்து,அதை கடைகளுக்கு விற்பனையும் செய்கிறாள்.
அவளதுப்பேரன்,தனியார் நிறுவனத்தில்,கணினித்துறையில் கைநிறைய சம்பாதிக்கின்றான்.
தன் பேரன் சக்திக்கு,நல்ல இடத்தில்திருமணம் செய்து,அவன் பெற்றெடுக்கும் பிள்ளையைப்(தன் மகனது வம்சத்தை),.. பார்த்த பிறகே....தான் கண்மூடவேண்டும்,என்று கடவுளிடம் தினம் வேண்டிக்கொள்கிறாள்.