lenram80
10-02-2011, 12:04 PM
ஆல மர நிழலில் தொட்டிலில்
அழுது தொங்கி இருப்பான்!
வயல் வெளி வெயிலில் களைத்தவள்
வற்றிய நெஞ்சோடு வருவாள் !
இல்லாத பாலை பொய்யாகச் சப்பி
பசி மயக்கத்தில் பகல் மறப்பான்!
அவனுக்கு பால் என்பதே வாளாகிக் கொன்றது!
வாழ்வென்பது பாழாகிப் போனது!
எப்படியோ ஈரப்பதம் கொண்டு
ஏழு வரை வளர்ந்து விட்டான்!
அரவணைத்த அம்மாவும் போய்விட
பசி என்ற மிருகம்
வயிற்றில் வயலின் வாசிக்க
நாடே எரிமலையாய் தீய்க்க
பஞ்சம் தத்து எடுத்தது!
வஞ்சகம் நட்பு கொடுத்தது!
அடுத்தவன் தூக்கம்
இவனுக்கு துவக்கம்!
தெரியாமல் எடுத்தவன்
தெரிந்தே அடிக்க ஆரம்பித்தான்!
கேட்ட போது வராதவை
பறித்த போது பயந்து வந்தது!
பாசறை நிரம்பிற்று!
பொன்னாலும் புகழாலும்!
எனக்கும் கொஞ்சம் கொடு
எனப் புறட்டவன் இப்போது
எவனுக்கும் எதையும் கொடுப்பதில்லை!
இதோ அடுத்த குழந்தை
அதே ஆல மர நிழலில் தொட்டிலில்
அழுது கொண்டிருக்கிறது!
அழுது தொங்கி இருப்பான்!
வயல் வெளி வெயிலில் களைத்தவள்
வற்றிய நெஞ்சோடு வருவாள் !
இல்லாத பாலை பொய்யாகச் சப்பி
பசி மயக்கத்தில் பகல் மறப்பான்!
அவனுக்கு பால் என்பதே வாளாகிக் கொன்றது!
வாழ்வென்பது பாழாகிப் போனது!
எப்படியோ ஈரப்பதம் கொண்டு
ஏழு வரை வளர்ந்து விட்டான்!
அரவணைத்த அம்மாவும் போய்விட
பசி என்ற மிருகம்
வயிற்றில் வயலின் வாசிக்க
நாடே எரிமலையாய் தீய்க்க
பஞ்சம் தத்து எடுத்தது!
வஞ்சகம் நட்பு கொடுத்தது!
அடுத்தவன் தூக்கம்
இவனுக்கு துவக்கம்!
தெரியாமல் எடுத்தவன்
தெரிந்தே அடிக்க ஆரம்பித்தான்!
கேட்ட போது வராதவை
பறித்த போது பயந்து வந்தது!
பாசறை நிரம்பிற்று!
பொன்னாலும் புகழாலும்!
எனக்கும் கொஞ்சம் கொடு
எனப் புறட்டவன் இப்போது
எவனுக்கும் எதையும் கொடுப்பதில்லை!
இதோ அடுத்த குழந்தை
அதே ஆல மர நிழலில் தொட்டிலில்
அழுது கொண்டிருக்கிறது!