View Full Version : விமோசனம்.........
Nanban
02-12-2003, 01:27 PM
விமோசனம்.........
நீ பாதம் வைத்த
இடமெல்லாம்
பூப்பூப்பதாய்
சொன்னார்கள்.....
தேடிப்பார்த்த
இடமெல்லாம்
முட்கள் தான்
கிடந்தன.....
பூக்களெல்லாம்
விமோசனம்
பெற்றுப் போய்விட்டன -
உன் பாதம் பட்டு.......
பாரதி
02-12-2003, 03:50 PM
முட்களும் பூக்களாகும்
முடிவுக்காக காத்திருக்கிறேன்.
Nanban
02-12-2003, 03:54 PM
முட்களும் பூக்களாகும்
முடிவுக்காக காத்திருக்கிறேன்.
முட்களைப் பொறுக்கி
புத்தகத்தினுள்
வைத்திருக்கிறேன்
இன்றுவரையிலும்......
முட்கள்
உருமாறி
கவிதைப் பூக்களாகி
இருந்தன......
பழைய
குத்தும்
பண்பை இழந்து.......
பாரதி
02-12-2003, 03:58 PM
புத்தகத்தில் வைத்ததால் அல்ல
பூக்களாய் முட்களை மாற்றியதால்...
புரியாமல் சொல்லவில்லை
புதுவித ராமன் நீங்கள்.
Nanban
02-12-2003, 04:16 PM
புத்தகத்தில் வைத்ததால் அல்ல
பூக்களாய் முட்களை மாற்றியதால்...
புரியாமல் சொல்லவில்லை
புதுவித ராமன் நீங்கள்.
வாழ்க்கை
வாழ்வதற்கே
உணர்வு இருப்பதால்
முட்களும்
பூக்களாக
மலர்ந்து
விடுகின்றன -
வியப்பென்ன-
நீ
விட்டுச் சென்ற
முட்கள்
மலர்ந்ததில்?
சேரன்கயல்
02-12-2003, 04:35 PM
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில்
முள்ளும் மலர்கிறது...
காதலால்...
இங்கே நண்பன் - சேரன்
இருவர் கலந்து கவிதையாடல்...
கற்கண்டும் காய்ச்சிய பாலும் போல்...
முள்ளும் மலரும் படித்ததில்
எனக்குள்ளும் மலரும் நினைவுகள்..
Nanban
03-12-2003, 04:39 AM
மலரும் நினைவுகளை கவிதையில் படிப்பதே ஒரு சுகம்......
குறுகிய வரிகளில் காட்சியைக் காட்டி விட்டு, கற்பனைக்கு இடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும்...........
அமரன்
24-11-2007, 07:29 AM
எப்படியோ முளைத்து
பரிமாற்றங்கள செய்து
வகிடுகொண்டு
சுந்தரமாக முடிந்து....
சூடப்பட்ட பூச்சரமாய்....
உள்ளம்
கொள்ளை போகின்றது..