M.Jagadeesan
08-02-2011, 11:58 AM
சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னன் தொண்டியைத் தலை நகராகக்
கொண்டு சேர நாட்டை ஆண்டுவந்தான்.இம்மன்னனுக்கும்,சோழமன்னன் செங்கணான்
என்பவனுக்கும் கழுமலத்தை அடுத்த திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் போர் நடந்
தது.அதில் இரும்பொறை தோற்றான்.செங்கணான் இவனைக் குணவாயிற்கோட்டம்
என்ற இடத்தில் சிறை வைத்தான்.ஒரு நாள் இவனுக்கு நீர் வேட்கை மிகுந்தது.
சிறைக் காவலனை அழைத்து நீர் தருமாறு கேட்டான்.அவன் அலட்சியமாக மிகவும்
காலம் தாழ்ந்து நீரைக் கொண்டுவந்தான்.இரும்பொறை அவமானத்தினால் குன்றிப்
போனான்.அந்நீரை உண்ணாது உயிர் நீத்தான்.உயிரை நீப்பதற்கு முன்பாகத் தன்
எண்ண ஓட்டங்களை ஒரு கவிதையாக எழுதி வைத்தான்.
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் உலகத் தானே?
தெளிஉரை:பண்டைக்காலத்தில் மன்னர்கள்,தம் மரபில்,குழந்தை இறந்து பிறந்தாலும்
அல்லது தசைப் பிண்டம் பிறந்தாலும், அதை வாளால் வெட்டிப் பிளந்து அடக்கம்
செய்வார்கள்.போரில் வாளால் வெட்டுண்டு மடியாத என்னை சங்கிலியால் கட்டப்
பட்ட நாய்போலத் துன்புறுத்தி சிறையிலே அடைத்துள்ளனர்.வயிற்றில் ஏற்பட்ட
தீயைத் தணிக்கவேண்டி நீரை யாசித்து உண்ணும் இயல்புடையவரை அம்மன்னர்கள்
இவ்வுலகத்தில் பெற்றெடுப்பாரோ?
நய உரை:ஞமலி= நாய் ஊன் தடி=உயிரற்ற தசைப்பிண்டம்.
மகா அலெக்ஸாண்டர். தன்னால் சிறை பிடிக்கப்பட்ட போரஸ் மன்னனை ஒரு
மன்னனுக்கு உரிய மரியாதையோடு நடத்தினான். ஆனால் செங்கணான், இரும்பொ
றையை அவ்வாறு நடத்தவில்லை.ஒரு சிறைக் கைதியைவிடக் கேவலமாக
நடத்தினான்.எனவேதான் மானம் இழந்து மன்னன் இரும்பொறை உயிர்வாழ விரும்
பவில்லை.
மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
கொண்டு சேர நாட்டை ஆண்டுவந்தான்.இம்மன்னனுக்கும்,சோழமன்னன் செங்கணான்
என்பவனுக்கும் கழுமலத்தை அடுத்த திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் போர் நடந்
தது.அதில் இரும்பொறை தோற்றான்.செங்கணான் இவனைக் குணவாயிற்கோட்டம்
என்ற இடத்தில் சிறை வைத்தான்.ஒரு நாள் இவனுக்கு நீர் வேட்கை மிகுந்தது.
சிறைக் காவலனை அழைத்து நீர் தருமாறு கேட்டான்.அவன் அலட்சியமாக மிகவும்
காலம் தாழ்ந்து நீரைக் கொண்டுவந்தான்.இரும்பொறை அவமானத்தினால் குன்றிப்
போனான்.அந்நீரை உண்ணாது உயிர் நீத்தான்.உயிரை நீப்பதற்கு முன்பாகத் தன்
எண்ண ஓட்டங்களை ஒரு கவிதையாக எழுதி வைத்தான்.
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் உலகத் தானே?
தெளிஉரை:பண்டைக்காலத்தில் மன்னர்கள்,தம் மரபில்,குழந்தை இறந்து பிறந்தாலும்
அல்லது தசைப் பிண்டம் பிறந்தாலும், அதை வாளால் வெட்டிப் பிளந்து அடக்கம்
செய்வார்கள்.போரில் வாளால் வெட்டுண்டு மடியாத என்னை சங்கிலியால் கட்டப்
பட்ட நாய்போலத் துன்புறுத்தி சிறையிலே அடைத்துள்ளனர்.வயிற்றில் ஏற்பட்ட
தீயைத் தணிக்கவேண்டி நீரை யாசித்து உண்ணும் இயல்புடையவரை அம்மன்னர்கள்
இவ்வுலகத்தில் பெற்றெடுப்பாரோ?
நய உரை:ஞமலி= நாய் ஊன் தடி=உயிரற்ற தசைப்பிண்டம்.
மகா அலெக்ஸாண்டர். தன்னால் சிறை பிடிக்கப்பட்ட போரஸ் மன்னனை ஒரு
மன்னனுக்கு உரிய மரியாதையோடு நடத்தினான். ஆனால் செங்கணான், இரும்பொ
றையை அவ்வாறு நடத்தவில்லை.ஒரு சிறைக் கைதியைவிடக் கேவலமாக
நடத்தினான்.எனவேதான் மானம் இழந்து மன்னன் இரும்பொறை உயிர்வாழ விரும்
பவில்லை.
மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.