dellas
08-02-2011, 08:11 AM
தமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு.
முன்னுரை
“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு”
நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.
கி.மு. 278 முதல் 232 வரையிலான நாட்களில் இந்தியாவின் தென்மண்டல சக்கரவர்த்தியாக திகழ்ந்த அசோகரின் சம காலத்தில், தருமபுரியை தனது தலைமை இடமாகக் கொண்டு அதியமான் என்னும் மன்னன் கொங்கு தேசத்தையும் தன் குடையின் கீழ் ஆண்டு வந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அவன் வழித் தோன்றலான, இளங்கக்கோசன் சேரன் செங்குட்டுவனின் உற்ற நண்பனாக விளங்கினான். இவரகளின் நட்பைக் கண்டு ராஜேந்திர சோழன் தன் வரலாற்றில் இவர்களை மேற்கோள் காட்டுவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு. மூன்று முறை தோல்வியை தழுவிய சோழர்கள். நான்காவது முறை மிகப்பெரிய தாக்குதலை சேர நாட்டின்மீது நடத்தும் போது, தோழ் சேர்ந்து நண்பனுக்காக கொங்கு அரசன் இளங்கக்கோசன் போரிட்டதாக உள்ள வரலாற்றில் , ஒற்றர்களாகப் பெண்களும் செயல்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இனி இந்த காலத்தில் நாமும் பிரயாணம் செய்வோம்.
அத்தியாயம் ஓன்று - விசாரணை
இது "பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் " என்ற தலைப்பில் ஏற்கனவே வந்துள்ளது. அன்புகூர்ந்து அதற்குப்பின் இந்த அத்தியாயத்தை படிக்கவும்.
அத்தியாயம் இரண்டு - எங்கே நாட்டியக்காரி ?
மூன்றாம் சாமம். பிணியாளர்களும் உறக்கம் கொள்ளும் நேரம். கோட்டான்களும் பயங்கொள்ளும் அமாவாசை இருட்டு.அதோ அந்த பாழடைந்த கோவிலில் மட்டும் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிகிறதே. நரிகள் ஊளையிடும் இந்த பயங்கரமான நடுக்காட்டில் யார் வரக்கூடும்.? உற்றுப் பார்த்தால் அது ஒரு தீவட்டி போல் தெரிகிறது. அந்த தீவட்டி வெளிச்சம் இடை இடையே மறைந்து பின் தெரிகிறது. யாரோ நடமாடுகிறார்கள். யாராக இருக்ககக் கூடும். இந்நேரத்தில் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக இரும்பு நெஞ்சம் உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். நடுங்க வைக்கும் குளிரில் யாராவது குளிர்காய தீமூட்டுகிறார்களா? இங்கே வந்து குளிர்காய வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன? சற்றே அருகில் சென்று பார்க்கலாம்.
நம்மால் எளிதில் நெருங்கமுடியாதபடி கரடு முரடான இடம். உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள் நடக்கும் போது சப்தம் உண்டாக்கலாம். அதனால் உள்ளே இருப்பவர்கள் கலவரமடைய ஏதுவாகலாம். எனவே கவனமாகப் பின்தொடருங்கள். நாம் அந்த கோவிலை நெருங்கிவிட்டோம். ஏதோ சப்தம் கேட்கிறதே. சற்று பொறுக்கலாம். சருகுகள் மிதிபடும் ஓசை. உன்னிப்பகாக் கவனித்தால் அது இரண்டிற்கும் மேற்பட்ட கால்கள் நடக்கும் ஓசை என்பது புரியும். காட்டு மிருகம் எதாவது வருகிறதா? இல்லை இரண்டு உருவங்கள் , கண்களை கூர்மயாக்கிப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது.அது முக்காடிட்ட மனிதர்கள் தான். மிகவும் பழக்கப்பட்ட பாதைபோன்று அவர்கள் நடை வேகமாக இருக்கிறது. அவர்கள் பின்னால் போவதுதான் நமக்கும் உகந்தது.
சிதிலமடைந்த கோவிலானாலும், மேற்கூரை முழுவதும் உடையவில்லை. நுழைவாயில் போன்றதொரு இடத்தை அடைந்தவுடன் இருவரும் சுற்றிலும் ஒரு பார்வை வீசியபடி கதவை தள்ளுகிறார்கள். பல காலமாக மனிதர்கள் சஞ்சாரமே இல்லாத இடத்தில உள்ள கதவு ஒருவிதமான ஓசையுடன் மெல்லத் திறக்கிறது. உள்ளே நுழைகிறார்கள். தீவட்டி வெளிச்சம் இப்போது நன்றாகத் தெரிகிறது. நம் பார்வை நமக்கு அச்சத்தை உண்டாகுகிறது. காளியின் ஆளுயரச்சிலை .உக்கிரமான அதன் தோற்றமும், இருட்டில் தெரியும் அதன் கரிய உருவமும் குலைநடுங்க வைக்கிறது. அதன் வலப்புறத்தில் சுவரிலுள்ள ஒரு பொந்தில் தீவட்டி சொருகப்பட்டுள்ளது. வந்தவர்கள் காளி சிலையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள். அங்கே ஒரு உருவம் திரும்பி அமர்ந்திருக்கிறது. அப்படியானால் தீவட்டி ஏற்றி இவர்களுக்காக காத்திருப்பது இந்த உருவம்தனோ?. இவர்கள் காலடியோசைக் கேட்டவுடன் அது திரும்புகிறது. உடனே அருகே சென்றவர்களில் ஒரு உருவம்,
" ஆ " என்றவாறே அதிர்ச்சியில் பின்வாங்குகிறது. இது பெண்குரல். வந்தவர்களில் ஒரு உருவம் பெண், புதியவள் எனத் தெரிகிறது.
பின்வாங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த உருவத்திடம்.
தீவட்டி ஒளியில் நாமும் காணலாம். அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து காளி சிலையின் முன்னால் வருகிறான். அவன் முகம் இப்போது முழுமையாகத் தெரிகிறது.
'ஐயோ ' என மனம் பயம்கொள்கிறது. என்ன ஒரு விகாரமான முகம். தீப்பந்தங்களைப்போல் சிவப்பேறிய கண்கள். தலைநிறைய அழுக்கான சுருண்ட தலைமுடி. வலது கன்னங்களில் தீக்காயம் பட்டதுபோல் பெரியவடு. தடித்த உதடுகள் .பல மாதங்களாக சவரம் செய்யப்படாத முகம். நெடிய, கரிய உருவம் என ஒரு ராட்சதனைபோல் இருந்தான்.
" இவள்தான் மாதங்கியா?" என கரகரத்த குரலில் கேட்டான்.
"இல்லை இவள் அமுதவல்லி" என உடனிருந்தவன் பதிலுரைத்தான்.
"இப்படி பயப்படுகிறாளே இவளை எப்படி தெரிந்தாய்?" என வினவினான்.
" நான் பயந்தவள் அல்ல. இருட்டில் உங்கள் முகம் அதிர்ச்சியை உண்டாக்கியது அவ்வளவே" என முன்னுரைத்தாள்.
"நல்லது பெண்ணே. நாம் முடிந்து கொண்டிருக்கின்ற வேலைக்குப் பயம்கொள்ளலாகாது. அப்படியானால் நாட்டியக்காரி மாதங்கி எங்கே?"
" அவள் சேரன் அரண்மனையிலிருந்து புறப்பட்டு இந்நேரம் அவளும் அவள் பல்லக்குத் தூக்கியாக சோமநாதனும் வந்து சேர்ந்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்." என்றான் வந்தவன்.
" அவர்கள் வரும்போது வரட்டும். நீங்கள் கொங்கு தேசத்திலிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்.?"
" கொங்கு நாட்டு இளவல் எங்கோ தனியாக தூரதேச பிரயாணம் சென்றிருக்கிறார். மாறுவேடத்தில் பிரயாணம் செய்வதாகக் கேள்வி. கடந்த வருடமும் போதிய மழை இல்லாததால் தண்ணீர் பகுமானத்தில் விவசாயிகள் மத்தியில் அவ்வப்போது பூசல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. நெசவாளர்களுக்கு போதிய கச்சாப் பொருட்களை விளைவிப்பதில் இந்த முறையும் அரசு பின்தங்கியே இருக்கிறது. தூர தேசங்களிலிருந்து இறக்குமதி செய்ய, கஜானாவில் போதிய பொருள் இல்லாததால் வரியை உயர்த்துவது பற்றி ஆலோசனைகள் நடக்கிறது. இது நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. மக்கள் வெளிப்படையாகவே இதுபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்." என்றாள் அமுதவல்லி.
" இது நல்ல செய்திதான். படைக்கலங்கள் வாங்கப்போவதாக கிடைத்த செய்தி உண்மையா இரும்பொறை?"
" இல்லை. ஆயுதப் பட்டறையில் புதிதாக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். சேர நாட்டிலிருந்து ஒரு அனுபவமிக்கவரை தருவித்து புதியரக ஆயுதங்களையும் அதைப் பயன்படுத்துவது பற்றியும் பயிற்சி அளிக்கப் போவதாகவும் என் நண்பன் சொன்னான்."
" நல்லது இரும்பொறை. நீங்கள் சோழ நாட்டை சார்ந்தவர்கள் என்பது கடுகளவும் வெளியில் தெரியாதவாறு கவனமோடு இருங்கள்"
இப்போது மீண்டும் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது.
மூன்றுபேரும் இடுப்பிலுள்ள கத்தியில் கைவைத்தவாறே இருளில் மெல்ல மறைகிறார்கள். இப்போது உள்ளே நுழைவது ஒரு பெண். சுற்றிலும் பார்க்கிறாள். ஒருவேளை இவள்தான் நாட்டியக்காரி மாதங்கியோ? இருக்கலாம். அவள் முகம் நமக்கு தெரியாதவாறு திரும்பி நிற்கிறாள்.
" என்ன மாதங்கி ? ஏன் இவ்வளவு தாமதம்.?" என்றவாறே இரும்பொறை வெளியில் வருகிறான்.
" அழகான பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்று உனக்குத் தெரியாதா இரும்பொறை?" என்றவாறே தன் முக்காடை விலக்குகிறாள். பேச்சில் என்ன ஒரு கர்வம். அவள் முகம் சரியாக புலப்படவில்லை
மற்ற இருவரும் இருளிலிருந்து வெளியே வருகிறார்கள்.
" ஒ ..நீங்கள்தான் வாள்வீரன் காளியப்பன் என்பதா?" என்று கேட்கிறாள் வந்தவள்.
" முதல் முறை பார்த்ததுமே அடையாளம் சொல்கிறாயே.. நீ புத்திசாலிதான் மாதங்கி"
" உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியாக நடந்த போரில் உங்கள் வலது கன்னத்தில் பெரிய காயம் ஒன்றை பெற்றீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்"
யாரிந்த பெண் என்று காண நமக்கும் ஆவல் உண்டாகிறது. அவள் திரும்பும் வரை பொறுத்திருக்க வேண்டாம் முன்னால் சென்று பார்க்கலாம்.
நமக்கு பலத்த ஆச்சர்யம். காட்டிலிருந்து கொங்கு இளவலால் காப்பாற்றப்பட்ட நாட்டியக்காரி. இவளுக்கு இங்கே என்ன வேலை?. எப்படி இந்த காட்டில் வந்து சேர்ந்தாள்.? தனியாக வருவதற்கு ஆண்களே அச்சப்படும் இந்த காட்டில் தனியாக வந்திருக்கும் அவள் தைரியத்தை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
" சொல் மாதங்கி என்ன நடந்தது.?" என்று கேட்டான் இரும்பொறை.
" நான் நாட்டியத்தை சேரன் அரண்மனையிலே முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அரசினர் விருந்து மாளிகையில் தங்கினேன். அரண்மனைக்குள் பிரவேசிக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டேன் நடக்கவில்லை. இறுதியில் பாதுகாப்பு வீரனுக்கு வலைவீசினேன். பணத்திற்கு வீழாதவனும் மங்கையரின் காதல் பார்வைக்கு அடிமைதான். அவன் வழியாக அரண்மனை செய்திகளை கேட்டறிந்தேன். சேரனின் சித்தப்பா வில்லாண்ட சேரன் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவரின் மகன் சிருங்கார சேரன்தான் அடுத்த அரசு வாரிசாக வேண்டியவன். ஆனால் செங்குட்டுவனின் மனைவி கோமளவல்லி இப்போது ஒரு ஆண் பிள்ளையை பெற்றிருப்பது அவனுக்கு பெரும் கலக்கத்தை உண்டு பண்ணி உள்ளது. ஒரு கூட்டத்தை அவன் ரகசியமாக சேர்த்து வருகிறான் என்பது கூடுதல் தகவல்" என்று கூறி நிறுத்தினாள்.
" உன்னுடன் வந்த சோமநாதன் எங்கே?"
" சொல்கிறேன், என்னை யாரோ உளவு பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது எனவே பல்லக்கு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதைத் தூக்கிவரும் நால்வரில் ஒருவராக அவனையும் பணித்தேன். சேர நாட்டு எல்லையைக் கடந்தபின், எல்லைத் தளபதி செங்கோடனின் ஆட்கள் என்னைப் பிடித்து விட்டார்கள். உண்மையான பல்லக்குத் தூக்கிகள் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு தோற்றனர். என்னிடம் அவர்கள் அதட்டி விசாரித்துக் கொண்டிருந்தபோது. எங்கிருந்தோ வந்த ஒரு முகமூடி வீரன் மின்னல்போல் வாள்சண்டையிட்டு என்னைக் காப்பாற்றி மீண்டும் என்னை சேர நாட்டிற்கே அழைத்துப் போனான். அங்கு போனபின்தான் தெரிந்தது அது கொங்கு நாட்டு இளவல் இளங்கோ என்பது'"
" ஆ" என மற்ற மூவரும் வியந்தனர்.
" சண்டையின் முடிவில் சோமனாதனைக் காணவில்லை. அவன் எங்கு போனான் என்பது தெரியவில்லை. என்மீது எந்த சந்தேகமும் கொள்ளாத சேரன், தளபதியின் உடைவாளை பறித்து ஒருவருட பணிநீக்கம் செய்துள்ளார். என்னை அடித்தவனுக்கும் மற்றவர்களுக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சேர வீரர்களே நாட்டின் எல்லைகடந்து என்னை கொண்டு வந்து விட்டுப் போனார்கள் " என பெருமித்ததோடு கூறினாள்.
" உன்னை சந்தேகப் படாதவரைக்கும் சரிதான். ஆனால் தளபதியின் பணிநீக்கம் என்பது சாதாரணமில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்ககூடும் என்றே என்மனம் சொல்கிறது. அவர்கள் நம்மை பின்தொடரக் கூடும்.கவனமாக இருங்கள். நல்லது நண்பர்களே, பொழுது புலர்வதற்கு இன்னும் இரண்டு நாழிகைகளே உள்ளது. இன்னும் இங்கிருப்பது சரியல்ல. நான் வீடு விட்டு வந்து பல மாதங்கள் ஆகிறது. நான் சோழ நாடு செல்ல வேண்டும் இன்றிலிருந்து இரண்டாவது அமாவாசை நாம் சோழ நாட்டின் எல்லையூரிலுள்ள சத்திரத்தில் கூடலாம். மாதங்கி என்னோடு வரட்டும். வாழ்க சோழ நாடு." என்று கூறி புறப்படத் தயாரானான்.
"வாழ்க சோழ நாடு" என்றவாறே அமுதவல்லியும், இரும்பொறையும் பிரிந்து சென்றனர்.
நேரம் விடிவதற்கு முன் நாம் சேர நாட்டில் இருந்தாக வேண்டும். நாமும் புறப்படுவோம்.
தொடரும்...
முன்னுரை
“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு”
நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.
கி.மு. 278 முதல் 232 வரையிலான நாட்களில் இந்தியாவின் தென்மண்டல சக்கரவர்த்தியாக திகழ்ந்த அசோகரின் சம காலத்தில், தருமபுரியை தனது தலைமை இடமாகக் கொண்டு அதியமான் என்னும் மன்னன் கொங்கு தேசத்தையும் தன் குடையின் கீழ் ஆண்டு வந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அவன் வழித் தோன்றலான, இளங்கக்கோசன் சேரன் செங்குட்டுவனின் உற்ற நண்பனாக விளங்கினான். இவரகளின் நட்பைக் கண்டு ராஜேந்திர சோழன் தன் வரலாற்றில் இவர்களை மேற்கோள் காட்டுவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு. மூன்று முறை தோல்வியை தழுவிய சோழர்கள். நான்காவது முறை மிகப்பெரிய தாக்குதலை சேர நாட்டின்மீது நடத்தும் போது, தோழ் சேர்ந்து நண்பனுக்காக கொங்கு அரசன் இளங்கக்கோசன் போரிட்டதாக உள்ள வரலாற்றில் , ஒற்றர்களாகப் பெண்களும் செயல்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இனி இந்த காலத்தில் நாமும் பிரயாணம் செய்வோம்.
அத்தியாயம் ஓன்று - விசாரணை
இது "பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் " என்ற தலைப்பில் ஏற்கனவே வந்துள்ளது. அன்புகூர்ந்து அதற்குப்பின் இந்த அத்தியாயத்தை படிக்கவும்.
அத்தியாயம் இரண்டு - எங்கே நாட்டியக்காரி ?
மூன்றாம் சாமம். பிணியாளர்களும் உறக்கம் கொள்ளும் நேரம். கோட்டான்களும் பயங்கொள்ளும் அமாவாசை இருட்டு.அதோ அந்த பாழடைந்த கோவிலில் மட்டும் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிகிறதே. நரிகள் ஊளையிடும் இந்த பயங்கரமான நடுக்காட்டில் யார் வரக்கூடும்.? உற்றுப் பார்த்தால் அது ஒரு தீவட்டி போல் தெரிகிறது. அந்த தீவட்டி வெளிச்சம் இடை இடையே மறைந்து பின் தெரிகிறது. யாரோ நடமாடுகிறார்கள். யாராக இருக்ககக் கூடும். இந்நேரத்தில் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக இரும்பு நெஞ்சம் உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். நடுங்க வைக்கும் குளிரில் யாராவது குளிர்காய தீமூட்டுகிறார்களா? இங்கே வந்து குளிர்காய வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன? சற்றே அருகில் சென்று பார்க்கலாம்.
நம்மால் எளிதில் நெருங்கமுடியாதபடி கரடு முரடான இடம். உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள் நடக்கும் போது சப்தம் உண்டாக்கலாம். அதனால் உள்ளே இருப்பவர்கள் கலவரமடைய ஏதுவாகலாம். எனவே கவனமாகப் பின்தொடருங்கள். நாம் அந்த கோவிலை நெருங்கிவிட்டோம். ஏதோ சப்தம் கேட்கிறதே. சற்று பொறுக்கலாம். சருகுகள் மிதிபடும் ஓசை. உன்னிப்பகாக் கவனித்தால் அது இரண்டிற்கும் மேற்பட்ட கால்கள் நடக்கும் ஓசை என்பது புரியும். காட்டு மிருகம் எதாவது வருகிறதா? இல்லை இரண்டு உருவங்கள் , கண்களை கூர்மயாக்கிப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது.அது முக்காடிட்ட மனிதர்கள் தான். மிகவும் பழக்கப்பட்ட பாதைபோன்று அவர்கள் நடை வேகமாக இருக்கிறது. அவர்கள் பின்னால் போவதுதான் நமக்கும் உகந்தது.
சிதிலமடைந்த கோவிலானாலும், மேற்கூரை முழுவதும் உடையவில்லை. நுழைவாயில் போன்றதொரு இடத்தை அடைந்தவுடன் இருவரும் சுற்றிலும் ஒரு பார்வை வீசியபடி கதவை தள்ளுகிறார்கள். பல காலமாக மனிதர்கள் சஞ்சாரமே இல்லாத இடத்தில உள்ள கதவு ஒருவிதமான ஓசையுடன் மெல்லத் திறக்கிறது. உள்ளே நுழைகிறார்கள். தீவட்டி வெளிச்சம் இப்போது நன்றாகத் தெரிகிறது. நம் பார்வை நமக்கு அச்சத்தை உண்டாகுகிறது. காளியின் ஆளுயரச்சிலை .உக்கிரமான அதன் தோற்றமும், இருட்டில் தெரியும் அதன் கரிய உருவமும் குலைநடுங்க வைக்கிறது. அதன் வலப்புறத்தில் சுவரிலுள்ள ஒரு பொந்தில் தீவட்டி சொருகப்பட்டுள்ளது. வந்தவர்கள் காளி சிலையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள். அங்கே ஒரு உருவம் திரும்பி அமர்ந்திருக்கிறது. அப்படியானால் தீவட்டி ஏற்றி இவர்களுக்காக காத்திருப்பது இந்த உருவம்தனோ?. இவர்கள் காலடியோசைக் கேட்டவுடன் அது திரும்புகிறது. உடனே அருகே சென்றவர்களில் ஒரு உருவம்,
" ஆ " என்றவாறே அதிர்ச்சியில் பின்வாங்குகிறது. இது பெண்குரல். வந்தவர்களில் ஒரு உருவம் பெண், புதியவள் எனத் தெரிகிறது.
பின்வாங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த உருவத்திடம்.
தீவட்டி ஒளியில் நாமும் காணலாம். அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து காளி சிலையின் முன்னால் வருகிறான். அவன் முகம் இப்போது முழுமையாகத் தெரிகிறது.
'ஐயோ ' என மனம் பயம்கொள்கிறது. என்ன ஒரு விகாரமான முகம். தீப்பந்தங்களைப்போல் சிவப்பேறிய கண்கள். தலைநிறைய அழுக்கான சுருண்ட தலைமுடி. வலது கன்னங்களில் தீக்காயம் பட்டதுபோல் பெரியவடு. தடித்த உதடுகள் .பல மாதங்களாக சவரம் செய்யப்படாத முகம். நெடிய, கரிய உருவம் என ஒரு ராட்சதனைபோல் இருந்தான்.
" இவள்தான் மாதங்கியா?" என கரகரத்த குரலில் கேட்டான்.
"இல்லை இவள் அமுதவல்லி" என உடனிருந்தவன் பதிலுரைத்தான்.
"இப்படி பயப்படுகிறாளே இவளை எப்படி தெரிந்தாய்?" என வினவினான்.
" நான் பயந்தவள் அல்ல. இருட்டில் உங்கள் முகம் அதிர்ச்சியை உண்டாக்கியது அவ்வளவே" என முன்னுரைத்தாள்.
"நல்லது பெண்ணே. நாம் முடிந்து கொண்டிருக்கின்ற வேலைக்குப் பயம்கொள்ளலாகாது. அப்படியானால் நாட்டியக்காரி மாதங்கி எங்கே?"
" அவள் சேரன் அரண்மனையிலிருந்து புறப்பட்டு இந்நேரம் அவளும் அவள் பல்லக்குத் தூக்கியாக சோமநாதனும் வந்து சேர்ந்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்." என்றான் வந்தவன்.
" அவர்கள் வரும்போது வரட்டும். நீங்கள் கொங்கு தேசத்திலிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்.?"
" கொங்கு நாட்டு இளவல் எங்கோ தனியாக தூரதேச பிரயாணம் சென்றிருக்கிறார். மாறுவேடத்தில் பிரயாணம் செய்வதாகக் கேள்வி. கடந்த வருடமும் போதிய மழை இல்லாததால் தண்ணீர் பகுமானத்தில் விவசாயிகள் மத்தியில் அவ்வப்போது பூசல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. நெசவாளர்களுக்கு போதிய கச்சாப் பொருட்களை விளைவிப்பதில் இந்த முறையும் அரசு பின்தங்கியே இருக்கிறது. தூர தேசங்களிலிருந்து இறக்குமதி செய்ய, கஜானாவில் போதிய பொருள் இல்லாததால் வரியை உயர்த்துவது பற்றி ஆலோசனைகள் நடக்கிறது. இது நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. மக்கள் வெளிப்படையாகவே இதுபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்." என்றாள் அமுதவல்லி.
" இது நல்ல செய்திதான். படைக்கலங்கள் வாங்கப்போவதாக கிடைத்த செய்தி உண்மையா இரும்பொறை?"
" இல்லை. ஆயுதப் பட்டறையில் புதிதாக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். சேர நாட்டிலிருந்து ஒரு அனுபவமிக்கவரை தருவித்து புதியரக ஆயுதங்களையும் அதைப் பயன்படுத்துவது பற்றியும் பயிற்சி அளிக்கப் போவதாகவும் என் நண்பன் சொன்னான்."
" நல்லது இரும்பொறை. நீங்கள் சோழ நாட்டை சார்ந்தவர்கள் என்பது கடுகளவும் வெளியில் தெரியாதவாறு கவனமோடு இருங்கள்"
இப்போது மீண்டும் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது.
மூன்றுபேரும் இடுப்பிலுள்ள கத்தியில் கைவைத்தவாறே இருளில் மெல்ல மறைகிறார்கள். இப்போது உள்ளே நுழைவது ஒரு பெண். சுற்றிலும் பார்க்கிறாள். ஒருவேளை இவள்தான் நாட்டியக்காரி மாதங்கியோ? இருக்கலாம். அவள் முகம் நமக்கு தெரியாதவாறு திரும்பி நிற்கிறாள்.
" என்ன மாதங்கி ? ஏன் இவ்வளவு தாமதம்.?" என்றவாறே இரும்பொறை வெளியில் வருகிறான்.
" அழகான பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்று உனக்குத் தெரியாதா இரும்பொறை?" என்றவாறே தன் முக்காடை விலக்குகிறாள். பேச்சில் என்ன ஒரு கர்வம். அவள் முகம் சரியாக புலப்படவில்லை
மற்ற இருவரும் இருளிலிருந்து வெளியே வருகிறார்கள்.
" ஒ ..நீங்கள்தான் வாள்வீரன் காளியப்பன் என்பதா?" என்று கேட்கிறாள் வந்தவள்.
" முதல் முறை பார்த்ததுமே அடையாளம் சொல்கிறாயே.. நீ புத்திசாலிதான் மாதங்கி"
" உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியாக நடந்த போரில் உங்கள் வலது கன்னத்தில் பெரிய காயம் ஒன்றை பெற்றீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்"
யாரிந்த பெண் என்று காண நமக்கும் ஆவல் உண்டாகிறது. அவள் திரும்பும் வரை பொறுத்திருக்க வேண்டாம் முன்னால் சென்று பார்க்கலாம்.
நமக்கு பலத்த ஆச்சர்யம். காட்டிலிருந்து கொங்கு இளவலால் காப்பாற்றப்பட்ட நாட்டியக்காரி. இவளுக்கு இங்கே என்ன வேலை?. எப்படி இந்த காட்டில் வந்து சேர்ந்தாள்.? தனியாக வருவதற்கு ஆண்களே அச்சப்படும் இந்த காட்டில் தனியாக வந்திருக்கும் அவள் தைரியத்தை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
" சொல் மாதங்கி என்ன நடந்தது.?" என்று கேட்டான் இரும்பொறை.
" நான் நாட்டியத்தை சேரன் அரண்மனையிலே முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அரசினர் விருந்து மாளிகையில் தங்கினேன். அரண்மனைக்குள் பிரவேசிக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டேன் நடக்கவில்லை. இறுதியில் பாதுகாப்பு வீரனுக்கு வலைவீசினேன். பணத்திற்கு வீழாதவனும் மங்கையரின் காதல் பார்வைக்கு அடிமைதான். அவன் வழியாக அரண்மனை செய்திகளை கேட்டறிந்தேன். சேரனின் சித்தப்பா வில்லாண்ட சேரன் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவரின் மகன் சிருங்கார சேரன்தான் அடுத்த அரசு வாரிசாக வேண்டியவன். ஆனால் செங்குட்டுவனின் மனைவி கோமளவல்லி இப்போது ஒரு ஆண் பிள்ளையை பெற்றிருப்பது அவனுக்கு பெரும் கலக்கத்தை உண்டு பண்ணி உள்ளது. ஒரு கூட்டத்தை அவன் ரகசியமாக சேர்த்து வருகிறான் என்பது கூடுதல் தகவல்" என்று கூறி நிறுத்தினாள்.
" உன்னுடன் வந்த சோமநாதன் எங்கே?"
" சொல்கிறேன், என்னை யாரோ உளவு பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது எனவே பல்லக்கு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதைத் தூக்கிவரும் நால்வரில் ஒருவராக அவனையும் பணித்தேன். சேர நாட்டு எல்லையைக் கடந்தபின், எல்லைத் தளபதி செங்கோடனின் ஆட்கள் என்னைப் பிடித்து விட்டார்கள். உண்மையான பல்லக்குத் தூக்கிகள் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு தோற்றனர். என்னிடம் அவர்கள் அதட்டி விசாரித்துக் கொண்டிருந்தபோது. எங்கிருந்தோ வந்த ஒரு முகமூடி வீரன் மின்னல்போல் வாள்சண்டையிட்டு என்னைக் காப்பாற்றி மீண்டும் என்னை சேர நாட்டிற்கே அழைத்துப் போனான். அங்கு போனபின்தான் தெரிந்தது அது கொங்கு நாட்டு இளவல் இளங்கோ என்பது'"
" ஆ" என மற்ற மூவரும் வியந்தனர்.
" சண்டையின் முடிவில் சோமனாதனைக் காணவில்லை. அவன் எங்கு போனான் என்பது தெரியவில்லை. என்மீது எந்த சந்தேகமும் கொள்ளாத சேரன், தளபதியின் உடைவாளை பறித்து ஒருவருட பணிநீக்கம் செய்துள்ளார். என்னை அடித்தவனுக்கும் மற்றவர்களுக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சேர வீரர்களே நாட்டின் எல்லைகடந்து என்னை கொண்டு வந்து விட்டுப் போனார்கள் " என பெருமித்ததோடு கூறினாள்.
" உன்னை சந்தேகப் படாதவரைக்கும் சரிதான். ஆனால் தளபதியின் பணிநீக்கம் என்பது சாதாரணமில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்ககூடும் என்றே என்மனம் சொல்கிறது. அவர்கள் நம்மை பின்தொடரக் கூடும்.கவனமாக இருங்கள். நல்லது நண்பர்களே, பொழுது புலர்வதற்கு இன்னும் இரண்டு நாழிகைகளே உள்ளது. இன்னும் இங்கிருப்பது சரியல்ல. நான் வீடு விட்டு வந்து பல மாதங்கள் ஆகிறது. நான் சோழ நாடு செல்ல வேண்டும் இன்றிலிருந்து இரண்டாவது அமாவாசை நாம் சோழ நாட்டின் எல்லையூரிலுள்ள சத்திரத்தில் கூடலாம். மாதங்கி என்னோடு வரட்டும். வாழ்க சோழ நாடு." என்று கூறி புறப்படத் தயாரானான்.
"வாழ்க சோழ நாடு" என்றவாறே அமுதவல்லியும், இரும்பொறையும் பிரிந்து சென்றனர்.
நேரம் விடிவதற்கு முன் நாம் சேர நாட்டில் இருந்தாக வேண்டும். நாமும் புறப்படுவோம்.
தொடரும்...