ராஜாராம்
03-02-2011, 06:26 AM
(திருமணம் என்பது ஒரு மனிதனது வாழ்வை அர்த்தமுடையதாக்கும் மங்களகாரியம்.அதை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படைப்பை நான் சித்தரிக்கவில்லை.அப்படி யாரேனும் கருதினால் ,அதற்கு என்னை மன்னிக்கவும்.)
(ஒரே இடத்தில் நடைபெறும்,இரண்டு தனித்தனி சம்பவங்களை,ஒன்றாக இணைத்து,கூறும்வண்ணம்,இந்த படைப்பை அமைத்திருக்கிறேன்)
(சம்பவம்1:-தனது நண்பர் ஒருவரின் மாமியார் இறந்துவிட்டதை அறிந்து,அதை ,ஒரு பொதுதொலைபேசியில் சம்மந்தப்பட்ட நண்பரிடம்,துக்கம் விசாரிக்கிறார்...ஒருவர். அவரது பெயர் "முரளிராஜா".
சம்பவம்2:-தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை,தனது நண்பர் ஒருவருக்கு,அதே பொதுதொலைபேசி மையத்தில் இருந்து,,மற்றொரு தொலைபேசியில் பேசுகிறார் மற்றொருவர்.அவரது பெயர் "ராஜாராம்".
இவர்கள் இருவரும் தனித்தனியே பேசுவதை,ஒன்றாய் ஒருங்கிணைத்து,......இது சித்தரிக்கப்பட்டுள்ளது)
ராஜாராம்:- "மாப்ளே....எனக்கு இன்னைக்கு,நிச்சயதார்த்தம்....டா..."
முரளிராஜா:- "அடப்பாவமே.....கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா மச்சான்...இப்படி திடீருன்னு ஒரு அசம்பாவிதம்,அதுவும் உனக்கு நடந்திருக்க கூடாது..".
ராஜாராம்:- "பொண்ணோட அப்பா, அதான்!!...என் மாமனாரு....பெரிய டாக்டர் ....".
முரளிராஜா:- "பாவம் டா.....உன் மாமனாரு. இனிமே தான் ரொம்ப கஷ்ட்டபடப் போராரு....பாவம்".
ராஜாராம்:- "பொண்ணுக்கும்,அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாருக்கும், என்னை ரொம்ப புடிச்சுபோச்சாம்...மாப்ளே!!!".
முரளிராஜா:- "கெட்டநேரம் வந்துட்டா,ஒட்டகத்துமேல ஏறி நின்னாலும் நாய் கடிக்கும்னு,சொல்லுவாங்க.அது உன் விஷயத்துல சரியாத்தான் டா இருக்கு..".
ராஜாராம்:- "நம்ம நண்பர்கள்,சுரேஷ்,கணேஷ்,எல்லாருக்கும் இதை சொல்லாப்போறேன்டா ...".
முரளிராஜா:- "மச்சான்....இது எங்க வீட்டு துக்ககாரியம் போலடா.அதனால,நானே நம்ம நண்பர்களுக்கெல்லாம் தகவல் தந்திடுறேன்.நீ அங்க ஆகவேண்டிய காரியத்தைப் பாரு மச்சான்..".
ராஜாராம்:- "அடுத்த மாசம்,10ம் தேதி,கல்யாணம்...".
முரளிராஜா:- "10க்கு, கண்டிப்பா நான் ,அங்க உன்கூட இருப்பேன்...".
ராஜாராம்:- "மாப்ளே,,...நீ,நம்ம நண்பர்கள் எல்லாரும்,கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்து,என்கூடவே இருக்கணும்...".
முரளிராஜா:- "உனக்கு ஒரு கஷ்டம்னா....உன்ன தனியாதவிக்க விடமாட்டோம்டா....கண்டிப்பா உனக்கு ஆறுதாலா உன்கூடவே இருப்போம்...நண்பேன்டா!!..."
ராஜாராம்:- "ஓக்கே....நான் போனனைக் கட் பன்னிடுறேன் டா மாப்ளே,...அப்பறம் நேரில பக்கும்போது விவரமா பேசிப்போம்..".
முரளிராஜா:- "ஓக்கே டா.நான் போனனை வெச்சுடுறேன்....நீ..அதயே நெனச்சு கவலப்பட்டு,உடம்ப கெடுத்துக்கொள்ளாத..தைரியமா இரு..."
(ஒரே இடத்தில் நடைபெறும்,இரண்டு தனித்தனி சம்பவங்களை,ஒன்றாக இணைத்து,கூறும்வண்ணம்,இந்த படைப்பை அமைத்திருக்கிறேன்)
(சம்பவம்1:-தனது நண்பர் ஒருவரின் மாமியார் இறந்துவிட்டதை அறிந்து,அதை ,ஒரு பொதுதொலைபேசியில் சம்மந்தப்பட்ட நண்பரிடம்,துக்கம் விசாரிக்கிறார்...ஒருவர். அவரது பெயர் "முரளிராஜா".
சம்பவம்2:-தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை,தனது நண்பர் ஒருவருக்கு,அதே பொதுதொலைபேசி மையத்தில் இருந்து,,மற்றொரு தொலைபேசியில் பேசுகிறார் மற்றொருவர்.அவரது பெயர் "ராஜாராம்".
இவர்கள் இருவரும் தனித்தனியே பேசுவதை,ஒன்றாய் ஒருங்கிணைத்து,......இது சித்தரிக்கப்பட்டுள்ளது)
ராஜாராம்:- "மாப்ளே....எனக்கு இன்னைக்கு,நிச்சயதார்த்தம்....டா..."
முரளிராஜா:- "அடப்பாவமே.....கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா மச்சான்...இப்படி திடீருன்னு ஒரு அசம்பாவிதம்,அதுவும் உனக்கு நடந்திருக்க கூடாது..".
ராஜாராம்:- "பொண்ணோட அப்பா, அதான்!!...என் மாமனாரு....பெரிய டாக்டர் ....".
முரளிராஜா:- "பாவம் டா.....உன் மாமனாரு. இனிமே தான் ரொம்ப கஷ்ட்டபடப் போராரு....பாவம்".
ராஜாராம்:- "பொண்ணுக்கும்,அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாருக்கும், என்னை ரொம்ப புடிச்சுபோச்சாம்...மாப்ளே!!!".
முரளிராஜா:- "கெட்டநேரம் வந்துட்டா,ஒட்டகத்துமேல ஏறி நின்னாலும் நாய் கடிக்கும்னு,சொல்லுவாங்க.அது உன் விஷயத்துல சரியாத்தான் டா இருக்கு..".
ராஜாராம்:- "நம்ம நண்பர்கள்,சுரேஷ்,கணேஷ்,எல்லாருக்கும் இதை சொல்லாப்போறேன்டா ...".
முரளிராஜா:- "மச்சான்....இது எங்க வீட்டு துக்ககாரியம் போலடா.அதனால,நானே நம்ம நண்பர்களுக்கெல்லாம் தகவல் தந்திடுறேன்.நீ அங்க ஆகவேண்டிய காரியத்தைப் பாரு மச்சான்..".
ராஜாராம்:- "அடுத்த மாசம்,10ம் தேதி,கல்யாணம்...".
முரளிராஜா:- "10க்கு, கண்டிப்பா நான் ,அங்க உன்கூட இருப்பேன்...".
ராஜாராம்:- "மாப்ளே,,...நீ,நம்ம நண்பர்கள் எல்லாரும்,கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்து,என்கூடவே இருக்கணும்...".
முரளிராஜா:- "உனக்கு ஒரு கஷ்டம்னா....உன்ன தனியாதவிக்க விடமாட்டோம்டா....கண்டிப்பா உனக்கு ஆறுதாலா உன்கூடவே இருப்போம்...நண்பேன்டா!!..."
ராஜாராம்:- "ஓக்கே....நான் போனனைக் கட் பன்னிடுறேன் டா மாப்ளே,...அப்பறம் நேரில பக்கும்போது விவரமா பேசிப்போம்..".
முரளிராஜா:- "ஓக்கே டா.நான் போனனை வெச்சுடுறேன்....நீ..அதயே நெனச்சு கவலப்பட்டு,உடம்ப கெடுத்துக்கொள்ளாத..தைரியமா இரு..."