PDA

View Full Version : ஒரு பாக்யராஜ் ரசிகனின் கதை



உமாமீனா
01-02-2011, 11:38 AM
நன்றி :- மின்னஞ்சல் அனுப்பிய தோழருக்கு

"கன்னி பருவத்திலே" என்னோட நண்பன் கனகராஜ் "தாவணி கனவுகள்" கண்டு கொண்டு இருந்த சில பொண்ணுங்க கிட்டே "டார்லிங் டார்லிங் டார்லிங்" சொல்லி, அவங்களை முதல்ல "வீட்ல விசேஷங்க"-ன்னு சொல்ல வச்சு பிறகு "ஆராரோ ஆரிராரோ" பாட வைக்கலாம்னு ஆசைப்பட்டு பல தடவ "வேட்டிய மடிச்சு கட்டி"க்கிட்டு போயிருந்தாலும், எப்போதும் அவனுக்கு முதல்ல கிடக்கிற பதில் "விடியும் வரை காத்திரு", அப்புறம் "இன்று போய் நாளை வா".

காலேஜில NSS கேம்ப்-ன் கடைசி “அந்த 7 நாட்களில்” கனக்ஸ் யாரு கிட்டயோ காதல்ல “புதிய வார்ப்புகள்” உருவாக்க முயற்சி பண்ணி அதுக்கு அவங்க குடுத்த டோஸ்-ல அவனோட ஜொள்ளு “தூறல் நின்னு போச்சு". கொஞ்சம் "பொய் சாட்சி" செட்டப் பண்ணியும் பிரயோஜனம் இல்ல. இதுல நொந்து போன கனக்ஸ் "சுவரில்லா சித்திரங்கள்" எப்படி போடறது, "ஒரு கை ஓசை" -ல எவ்வளவு நாள்தான் ஓட்டறது, நமக்கு "சுந்தர காண்டம் " சரிப்படாதுன்னு முடிவுக்கு வந்துட்டான். அத எல்லாம் நெனச்சு அப்பப்போ "மௌன கீதங்கள்" பாடுவான்.

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி"- யை "முந்தானை முடிச்சு" பண்ணின பிறகு "இது நம்ம ஆளு"ன்னு பேசாம சௌதியில "ராசுக்குட்டி" போல இருக்கான் "எங்க சின்ன ராசா". அங்கே "சின்ன வீடு" தேடி "பாமா ருக்மணி" வீட்டுக்கு போனா "அவசர போலீஸ் 100 " கூப்பிட்டு உள்ளே தள்ளிருவாங்கல்லே. கல்யாணத்தப்போ என்னதான் "பவனு பவுனுதான்" எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் அவன் ஒரு "ஞான பழம்"னு யாரும் நெனச்சிராதீங்க.

முரளிராஜா
01-02-2011, 11:46 AM
அட படத்தின் பெயரை வைத்தே கதை எழுதிட்டாரே உங்கள் நண்பர். அருமையாக உள்ளது.எல்லாரும் கதை எழுதி தலைப்பு வைப்பாங்க இவரு படத்தின் தலைப்பை வைத்து கதை எழுதி இருக்கிறார்.
:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

CEN Mark
01-02-2011, 01:12 PM
[QUOTE=umameena;511279]நன்றி :- மின்னஞ்சல் அனுப்பிய தோழருக்கு



காலேஜில NSS கேம்ப்-ன் கடைசி “அந்த 7 நாட்களில்” கனக்ஸ் யாரு கிட்டயோ காதல்ல “புதிய வார்ப்புகள்” உருவாக்க முயற்சி பண்ணி அதுக்கு அவங்க குடுத்த டோஸ்-ல அவனோட ஜொள்ளு “தூறல் நின்னு போச்சு". கொஞ்சம் "பொய் சாட்சி" செட்டப் பண்ணியும் பிரயோஜனம் இல்ல. இதுல நொந்து போன கனக்ஸ் "சுவரில்லா சித்திரங்கள்" எப்படி போடறது, "ஒரு கை ஓசை" -ல எவ்வளவு நாள்தான் ஓட்டறது, நமக்கு "சுந்தர காண்டம் " சரிப்படாதுன்னு முடிவுக்கு வந்துட்டான். அத எல்லாம் நெனச்சு அப்பப்போ "மௌன கீதங்கள்" பாடுவான்.

கொஞ்சம் விரசம் கலந்த கதை. பாக்யராஜ் என்றாலே அது இல்லாமல் இல்லை. தலைப்பை வைத்து கதை சொன்னாலும் தூக்கல் அள்ளுகிறது. நீங்கள் ஆணா? பெண்ணா? மினஞ்சல் அனுப்பியவரின் ரசனை உங்களுக்கு இணக்கமானதுதான் ஆச்சரியம் தருகிறது.

கௌதமன்
01-02-2011, 01:17 PM
பாரி ஜாதம், சித்து +2, சொக்கத் தங்கம் படங்கள் என்ன பாவம் பண்ணுச்சி. அதை விட்டுட்டீங்களே ?