PDA

View Full Version : வியப்பில்லை காதலா...



dellas
29-01-2011, 03:27 PM
வியப்பில்லை காதலா...

எட்டும் கனி நானாவேன்-உனை
சுற்றும் காற்றும் நானாவேன்

தோழில் சுமக்கும் சதியாவேன்.
உனக்குள் உறையும் உயிராவேன்.

நீயுமாவேன்...

நீ

காதலன் துறந்து
என் பதியாகி காதல்கொள்...

ஜனகன்
29-01-2011, 05:57 PM
காதல் கவிதை அருமை

ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் பதிந்துவிட்டது.

dellas
30-01-2011, 05:16 AM
ரசிக்கும் ஜனகன் அவர்களுக்கு நன்றி.

உமாமீனா
09-02-2011, 09:31 AM
எவ்வளவு நாசூக்க என்னை கல்யாணம் பண்றா பரதேசின்னு சொல்ல்ரா

dellas
09-02-2011, 03:04 PM
ஆஹா .. சிரிக்க வைத்து விட்டீர்களே umameena .நன்றி

அக்னி
09-02-2011, 03:59 PM
நீயும் காதலனைத் துறக்கத்
தயாராகிவிட்டதை
இதுவரைக்கும்
உன் காதலன்
உணராததேனோ...

உண்ணாத தேனோ
இதுவரைக்கும்
அவன் சிந்தை
மயக்கியிருந்தது...

உண்டுவிட்டாலோ
அவன்
உன்னை விடுவானோ...

வித்தியாசமாக ஒரு தாபக்கவிதை... பாரட்டு...


தோழில் சுமக்கும் சதியாவேன்.
இதுமட்டும் எனக்குப் புரியவில்லை...

dellas
16-02-2011, 08:07 AM
வேண்டுமென்று கேட்கிறீர்களா அக்னி ..சதி என்றால் மனைவி. நன்றி.