கௌதமன்
28-01-2011, 05:23 PM
கவிதை எண்.13
கவிழ்ந்துக் கிடக்கிறேன் நான்; பார்வை தெளிவில்லை;
வலது கை இருப்பதாக உணர்வில்லை;
இடது கையினால் தடவிப் பார்த்தேன், ஒரே இரத்தம்
வாயிலிருந்தா மூக்கிலிருந்தா தெரியவில்லை;
கால்கள் இன்னுமிருப்பதாக நம்புகிறேன்
பூட்ஸ் கால்களின் உதைமட்டும் நின்றபாடில்லை
ஒன்று நிச்சயம் எப்படியும் இறந்து விடுவேன்
சற்றே தலையுயர்த்திப் பார்க்கிறேன்
இப்போதாவது சொல் என்கிறார்கள்
’வந்தே மாதரம்’; தலையில் விழுந்தது கடைசி அடி
-- கௌதமன்
[கவிதையின் விமர்சனங்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது]
கவிழ்ந்துக் கிடக்கிறேன் நான்; பார்வை தெளிவில்லை;
வலது கை இருப்பதாக உணர்வில்லை;
இடது கையினால் தடவிப் பார்த்தேன், ஒரே இரத்தம்
வாயிலிருந்தா மூக்கிலிருந்தா தெரியவில்லை;
கால்கள் இன்னுமிருப்பதாக நம்புகிறேன்
பூட்ஸ் கால்களின் உதைமட்டும் நின்றபாடில்லை
ஒன்று நிச்சயம் எப்படியும் இறந்து விடுவேன்
சற்றே தலையுயர்த்திப் பார்க்கிறேன்
இப்போதாவது சொல் என்கிறார்கள்
’வந்தே மாதரம்’; தலையில் விழுந்தது கடைசி அடி
-- கௌதமன்
[கவிதையின் விமர்சனங்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது]