View Full Version : எதைப்பற்றி நான் கவிதை சொல்ல.?
dellas
26-01-2011, 04:19 PM
கையில் எழுதுகோல்
முன்னால் காகிதம்.
கவிதை எழுத உத்தேசம்
எதைப்பற்றி?
நிலா -
அது நல்கவிஞர்களின் சொத்து.
மலர் -
வண்டுகளின் சொந்தம்
இசை-
ரசிகனின் ரசனை.
காதல்-
வீரர்களின் மறுபுறம்
அன்பு-
தாய்மையின் பிரதிபலிப்பு
அழகு-
உள்ளன்பின் வெளிப்பாடு.
விவேகம்-
புத்திசாலிகளின் நண்பன்.
பின் எதைப்பற்றி நான் கவிதை சொல்ல.???
"என் காதலி"-
ஆம் இவை எல்லாம் அந்த
ஒற்றை சொல்லில் அடக்கம்.
கௌதமன்
26-01-2011, 04:24 PM
எதைப் பற்றி எழுதினாலும்
தமிழின் கைப் பற்றி எழுதினால்
காதலை கைப்பற்றி விடலாம்.
dellas
26-01-2011, 04:26 PM
நன்றி கெளதம்
கீதம்
26-01-2011, 10:23 PM
காதலி இருக்கும்போது வேறு எதைப்பற்றிதான் கவிதை வரும்? நெஞ்சமெங்கும் அவள் நினைவு மட்டும்தானே நிறைந்திருக்கும்? பின் எப்படி இத்தனை மனப்போராட்டம் சாத்தியம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் களமிறக்கிய கவி நன்று. பாராட்டுகள் டெல்லாஸ் அவர்களே.
பிரேம்
26-01-2011, 11:57 PM
கவிதை அருமை..
காதலியின் தங்கையைப் பற்றி எழுதுங்களேன்..புதுசா இருக்கும்ல..:cool:
சுடர்விழி
27-01-2011, 12:06 AM
மனதில் காதல் நிறைந்திருக்கும்போது எதைப் பார்த்தாலும் கவிதை எழுதத் தோன்றுமே !! கவிதை அருமை நண்பரே !!
dellas
27-01-2011, 07:20 AM
என் கவிதையை விட தங்கள் ரசனை அருமை கீதம் அவர்களே. நன்றிகள்.
என் காதலிக்கு (மனைவிதான்) தங்கைகள் இல்லை பிரேம் .
நன்றி சுடர்.
அமரன்
27-01-2011, 06:51 PM
நீ
எழுதிய கவிதைகளை விட
நீ
வாசித்த நான் அழகான கவிதை..
பாராட்டுகள் டெல்லாஸ்.
dellas
29-01-2011, 03:42 PM
அழகு அமரன்.. நன்றி..
ஜனகன்
29-01-2011, 06:09 PM
கவிதை அருமை,
ஒவ்வொரு கோணத்தில் கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றன.பாராட்டுக்கள்
dellas
30-01-2011, 05:26 AM
நன்றி ஜனகன்
உமாமீனா
02-02-2011, 07:52 AM
எதை எழுதினாலும் கவிதையாகும் என் மொழியில் மட்டுமே
dellas
09-02-2011, 02:47 PM
ஒரு வரிக்கவிதை . நன்றி.