rambal
06-04-2003, 04:50 PM
அதிகாலையில்,
ஏதொ ஒரு திசையில் இருந்து
ஒலிக்கும் பாட்டு போல
உன் நினைவுகள்
அவ்வப் பொழுது
மனசின் ஏதோ ஒரு மூலையிலிருந்து....
குப்பைக்காரனின் கோணிப்பையாய்
இதயம்...
குப்பைகளாய் உன்
நினைவுகள்...
பைக்குள் அடங்க மறுத்து
அவ்வப்பொழுது....
காலில் அடிபட்ட நாயாய் மனசு...
உன் நினைவுகளைத்
தூக்கிக் கொண்டு அல்லாடுகிறேன்....
தொண்டையில் சிக்கிய முள்ளாய்
உன் நினைவுகள்...
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தினம்
அல்லாடுகிறேன்....
இந்த சித்திரவதை போதும்...
பேசாமல்
என்னைக் கொன்று விடு.....
ஏதொ ஒரு திசையில் இருந்து
ஒலிக்கும் பாட்டு போல
உன் நினைவுகள்
அவ்வப் பொழுது
மனசின் ஏதோ ஒரு மூலையிலிருந்து....
குப்பைக்காரனின் கோணிப்பையாய்
இதயம்...
குப்பைகளாய் உன்
நினைவுகள்...
பைக்குள் அடங்க மறுத்து
அவ்வப்பொழுது....
காலில் அடிபட்ட நாயாய் மனசு...
உன் நினைவுகளைத்
தூக்கிக் கொண்டு அல்லாடுகிறேன்....
தொண்டையில் சிக்கிய முள்ளாய்
உன் நினைவுகள்...
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தினம்
அல்லாடுகிறேன்....
இந்த சித்திரவதை போதும்...
பேசாமல்
என்னைக் கொன்று விடு.....