CEN Mark
14-01-2011, 01:11 PM
பூவினில் அமரும் நோக்கில்
வண்டுகள் அலையும் பாங்கு
பறப்பதில் சிதறும் சத்தம்
நிலைப்பதில் அடங்கிப்போகும்
கண்கள்.
தீவண்ண வாயிற் கதவும்
வெண்பனியாய் சுற்றுச்சுவரும்
எண்ணைக்கடல் அகழியதில்
விநோதமாய் சலம்பும்
நாக்கு....
மலைக்குகை வாயில் இரண்டு
உள்வெளி சலனம் உண்டு
இழுப்பினுள் நுரைப்பை கண்டு
வெளிச்சலனம் காக்கும்
மூக்கு...
கேள்வியின் நாயகனாய்
அதிர்வுக்கெல்லாம் அடைக்கலமாய்
நேர் நடை துடுப்புகளாய்
சமரசம் காக்கும்
காது.....
பதிவேற்றம் விறக்கம் கண்டு
படிமக் காப்பகமாய் இருந்து
சலனம் கண்டறியும் தொண்டு
தர்க்க ஞான ஊற்றாய்
மூளை...
வண்டுகள் அலையும் பாங்கு
பறப்பதில் சிதறும் சத்தம்
நிலைப்பதில் அடங்கிப்போகும்
கண்கள்.
தீவண்ண வாயிற் கதவும்
வெண்பனியாய் சுற்றுச்சுவரும்
எண்ணைக்கடல் அகழியதில்
விநோதமாய் சலம்பும்
நாக்கு....
மலைக்குகை வாயில் இரண்டு
உள்வெளி சலனம் உண்டு
இழுப்பினுள் நுரைப்பை கண்டு
வெளிச்சலனம் காக்கும்
மூக்கு...
கேள்வியின் நாயகனாய்
அதிர்வுக்கெல்லாம் அடைக்கலமாய்
நேர் நடை துடுப்புகளாய்
சமரசம் காக்கும்
காது.....
பதிவேற்றம் விறக்கம் கண்டு
படிமக் காப்பகமாய் இருந்து
சலனம் கண்டறியும் தொண்டு
தர்க்க ஞான ஊற்றாய்
மூளை...