PDA

View Full Version : இலவசம் - மின்னஞ்சல் செய்தி!



குணமதி
06-01-2011, 12:40 PM
எனக்கு மின்னஞ்சல் வழி கிடைத்த செய்தியை மன்றத்தில் அனைவரும் அறியும் பொருட்டுக் கீழே தந்துள்ளேன்:


இலவசம் - மின்னஞ்சல் செய்தி!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் என்ற சிற்றூரில் வசிக்கும் உழவர் விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23 தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பெரியண்ண அரசு தலமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்சேர்ந்த விஜயகுமார் என்ற உழவர் மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர், தொ.கா.பெட்டியைப் பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார். ஏதோ கோரிக்கை மனுகொடுக்கிறார் என்று அரசுவும் இயல்பாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு தொலைக்காட்சி என்பது பொழுதுபோக்குக் கருவி தான். ஆனால் வாழ அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, உழவர்களைப் பெரிதும் தாக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த தொ.கா.பெட்டியை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான உழவர்கள்க ள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். தொலைக்காட்சி வழஙகும் பணத்தைவைத்து உழவர்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒருமாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து தொ,கா.முதல் மகிழ்வுந்து வரை அனைத்தையும் வாங்கிக்கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே நிறைவு செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்பற்றாக்குறை, கையூட்டு, ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒருநடமாடும் பிணமாக நான் எப்படி தொ.கா. பார்க்க முடியும்? எனவே எனக்கு இநத தொ.கா. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே, இந்த தொ.கா.வை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் துன்பப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாட வில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் தொ.கா.வையும் வாங்கிவைத்துக் கொண்டும மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமார் கூறியவை:

“நான் ஒரு சாதாரண உழவன். உழவர்கள் எல்லாம் மின் வெட்டால் பெரிதும் வருந்தி விளைநிலத்தை 'ரியல் எஸ்டேட்'காரன் கிட்ட வித்துட்டு நகரத்துலபோய் கூலி வேலைக்கும் சாப்பாட்டுக்கடை வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கிறானுங்க. இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. இரவில் படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது. சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் கூட்டம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப எளிதா கணக்குப் போட்டாலும் ஒரு தொ.கா. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்ப அட்டைக்கும் தொ.கா. கொடுத்தால் இருபது லச்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த நெஞ்சோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு தொ.கா.? அவன் பொழப்பே சிரிப்பாசிரிக்கும்போது அவன் தொ.கா.பாத்துவேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் தொ.கா.வைத் திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

தொ.கா.வைத் திருப்பிக் கொடுத்தகையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த தொ.கா.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்’ என்று குறிப்பிட்டு அதைச் செய்தியாக அனுப்பியுள்ளார்.


மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் கையூட்டுதான் இலவசங்கள் என்பதை உழவர் விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களைச் சோம்பேறிகளாக்ககும் இலவசத்துக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கும் அவரைப் பாராட்டத்தான் சொற்ககளே கிடைக்கவில்லை!

பாலகன்
06-01-2011, 01:25 PM
நல்ல தகவல்

இதை மன்றத்தில் ஏற்கெனவே படித்தாக நினைவு

கௌதமன்
06-01-2011, 01:26 PM
நல்ல தகவல்

இதை மன்றத்தில் ஏற்கெனவே படித்தாக நினைவு

நானும்தான்!

கீதம்
06-01-2011, 10:39 PM
முன்பே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25668) இருக்கிறது, எனினும் பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே.

அனுராகவன்
07-01-2011, 06:10 AM
நன்றி குணமதி....

goldseenu
17-01-2011, 12:14 PM
ஒரு விஜயகுமார் திருப்பித் தந்தால் போதாது
சிந்திக்க வேண்டும் :smilie_abcfra: அனைவரும் ,,,,,,
நன்றி தகவலை வெளியிட்டமைக்கு