குணமதி
04-01-2011, 04:26 AM
எச்சில் என்று இகழப்படாதவை எவை,எவை?
தனிப்பாடல் திரட்டில் உள்ள ஆசிரியர் பெயர் தெரியாத இப்பாடல் எச்சிலாகக் கருதப்படாதவை எவையெவை எனப் பட்டியலிடுகிறது. எளிய பாடலே. எளிதில் பொருள் விளங்கும். அருஞ்சொற் பொருளும் கீழே காண்க. இனி, படித்து மகிழ்க!
கன்றினி தூட்டிக் கறந்த தீம்பாலும்
கலவியின் மகளிரும் பறவை
தின்றதீங் கனியும் வேட்டையின் ஞமலி
கறித்திடு கின்றமென் தசையு
மொன்றையு மெச்சி லெனவிகழ்ந் துரையார்
உணர்ந்துளோ ருறுகடன் பொருட்டும்
நன்றுடன் வேள்வி வேட்டிடும் பொருட்டு
நனிபொருள் வழங்கநன் றாமால்.
தீம் = இனிய
ஞமலி = நாய்
கறித்திடுகின்ற மென்தசை = பற்றிக் கடித்து வீழ்த்திய விலங்குகளின் மென்மையான ஊன்(இறைச்சி)
தனிப்பாடல் திரட்டில் உள்ள ஆசிரியர் பெயர் தெரியாத இப்பாடல் எச்சிலாகக் கருதப்படாதவை எவையெவை எனப் பட்டியலிடுகிறது. எளிய பாடலே. எளிதில் பொருள் விளங்கும். அருஞ்சொற் பொருளும் கீழே காண்க. இனி, படித்து மகிழ்க!
கன்றினி தூட்டிக் கறந்த தீம்பாலும்
கலவியின் மகளிரும் பறவை
தின்றதீங் கனியும் வேட்டையின் ஞமலி
கறித்திடு கின்றமென் தசையு
மொன்றையு மெச்சி லெனவிகழ்ந் துரையார்
உணர்ந்துளோ ருறுகடன் பொருட்டும்
நன்றுடன் வேள்வி வேட்டிடும் பொருட்டு
நனிபொருள் வழங்கநன் றாமால்.
தீம் = இனிய
ஞமலி = நாய்
கறித்திடுகின்ற மென்தசை = பற்றிக் கடித்து வீழ்த்திய விலங்குகளின் மென்மையான ஊன்(இறைச்சி)