PDA

View Full Version : தவிப்பு



திவ்யா
30-12-2010, 11:48 AM
நாம் காதலிப்பதாக*
எல்லோரும் எண்ணிய காலத்தில்...

உன் நண்பர்கள் குரல் கேட்டாலே
உன் முகம் தேடி அலையும் தவிப்பிலும்,
உன்னை எதிர்கொள்ளும் போதெல்லாம்
ஏற்படும் வெட்கச் சிரிப்பிலும்,

நான் சொல்லாமலே உணர்த்திய காதலை
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்....

பாலகன்
30-12-2010, 11:50 AM
நீங்க கொடுத்த சமிஞ்சைகளை அவர் கவனிக்க தவறிட்டாருன்னு நினைக்கிறேன்.
உங்க தவிப்பு அவருக்கு எப்போது புரியும்.

அழகான கவிதை உங்கள் பெயர் போலவே

CEN Mark
22-01-2011, 12:58 PM
நீங்க கொடுத்த சமிஞ்சைகளை அவர் கவனிக்க தவறிட்டாருன்னு நினைக்கிறேன்.
உங்க தவிப்பு அவருக்கு எப்போது எப்படி? புரியும்.

அழகான கவிதை உங்கள் பெயர் போலவே

ஒன்னுல அவர் வேற யார்கிட்டேயோ சிக்கி இருக்கணும் அல்லது அந்த சமிங்சைகள் கூட்டதிலிரு ப்பவர் யாருக்கொவென்றிருக்க வேண்டும்.

CEN Mark
22-01-2011, 12:59 PM
நாம் காதலிப்பதாக*
எல்லோரும் எண்ணிய காலத்தில்...

உன் நண்பர்கள் குரல் கேட்டாலே
உன் முகம் தேடி அலையும் தவிப்பிலும்,
உன்னை எதிர்கொள்ளும் போதெல்லாம்
ஏற்படும் வெட்கச் சிரிப்பிலும்,

நான் சொல்லாமலே உணர்த்திய காதலை
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்....

தவிப்பு நன்று.
தயங்காமல் நின்று
காதல் சொல் இன்று

கௌதமன்
22-01-2011, 02:48 PM
சொல்ல முடியாத தவிப்பு இருவருக்கும் உண்டு.
வேண்டாத வெட்கம் வந்து ஒருவரைத் தடுத்தால்,
பாழும் பயம் வந்து மற்றவரைத் தடுக்கும்.
வெட்கத்தை கொஞ்ச நேரம் மறந்து விட்டு,
விழிகளால் உன் விருப்பத்தை சொல்லிவிடு.
பயம் உடைத்து, படபடப்பு நீங்கி, பக்கம் வருவான்
பார்வையிலேயே பதில் கிடைக்கும்.

உங்கள் கவிதைகள் மீண்டும் என்னைக் கல்லூரிக்கு அழைத்து செல்கிறது.

நன்றி திவ்யா!

CEN Mark
23-01-2011, 09:06 AM
சொல்ல முடியாத தவிப்பு இருவருக்கும் உண்டு.
வேண்டாத வெட்கம் வந்து ஒருவரைத் தடுத்தால்,
பாழும் பயம் வந்து மற்றவரைத் தடுக்கும்.
வெட்கத்தை கொஞ்ச நேரம் மறந்து விட்டு,
விழிகளால் உன் விருப்பத்தை சொல்லிவிடு.
பயம் உடைத்து, படபடப்பு நீங்கி, பக்கம் வருவான்
பார்வையிலேயே பதில் கிடைக்கும்.

உங்கள் கவிதைகள் மீண்டும் என்னைக் கல்லூரிக்கு அழைத்து செல்கிறது.

நன்றி திவ்யா!

ஆஹா! இது எப்போ?

கௌதமன்
23-01-2011, 12:12 PM
ஆஹா! இது எப்போ?

எல்லாரும் அதைத் தாண்டித்தானே வந்திருக்கிறோம் தலைவா!

காதல் நோய் வந்துவிட்டால் கவிதை அதுவாகவே வெளிவருமே!!

M.Jagadeesan
23-01-2011, 12:37 PM
"சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை
இன்று வரும், நாளை வரும், சென்றாலும்
திரும்பி வரும் செல்வம்!
இளமை சென்று முதுமை வந்தால்
காதலிசை பாடாது உள்ளம்"

ஆகவே உங்கள் காதலை உடனடியாக
தெரிவித்து விடுங்கள்.வெட்கம் தடுத்தால்
காதலைக் கடிதத்தில் வடித்துப்
புறாவின் காலில் கட்டி தூது விடுங்கள்!

உமாமீனா
09-02-2011, 09:38 AM
சுப்ரமனிய புரம் படத்தின் காதல் நான்கு வரி கவிதையில்