PDA

View Full Version : தாபம்



inban
18-12-2010, 02:06 PM
நீர் திவளைப் பட்டு
பூவான உன் முகத்தைக்கேள்

பின்தொடை தொட்டு
நடனம் கொள்ளும்
உன் சடையினைக்கேள்

இருட்டினை சிதறடித்து
பௌர்ணமிக்கு பாலமிடும்
உன் புன்னகையைக்கேள்

உணர்வுக்குவிலங்கிட்டு
உயிருக்கு தூண்டிலிடும்
உன் கண்களைக் கேள்

கேள்!
உனக்குள் இருக்கும்
உன்னையே கேள்!!

அவை சொல்லும்
நான் ஏன்
உன் பின்னால்
இப்படிஅலைகிறேன் என்று........

முரளிராஜா
18-12-2010, 03:16 PM
காதலியை பின் தொடர்வதும் ஒரு சந்தோசமே

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:25 PM
உண்மையான காதலன் தன் காதலியின்
ஞாபகமாக காதலியின் சடைமுடியை கூட
வெட்டி தனது அறைக்குள் பூட்டி வைக்கிறான்

இது நான் இல்லப்பா ஆட்டோகிராப் படத்துல