PDA

View Full Version : செருப்படி



நாஞ்சில் த.க.ஜெய்
18-12-2010, 12:05 PM
எனக்கு மின் தந்தியில் வந்த ஒரு தகவல் இதனை நமது மன்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

செருப்படி

புதுக்கோட்டைமாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ணா அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ணா அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம்.

எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும்,மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர்
இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ணா அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.
என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை,நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா
கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப

அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும்,வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பாசிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக்கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே
கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில்
அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

ஆன்டனி ஜானி
18-12-2010, 02:18 PM
நண்பரே உண்மையாகவே இப்படி எல்லாம்

நடக்குதா ????

கேட்கவே அருவையாக இருக்கு ......

மக்களின் பணத்தை இப்படி எல்லாம் சுரண்டுகிறார்களே என்று தான்

இப்படி மக்கள் பணத்தை சுரண்டுபவர்களுக்கு என்ன தண்டனைகள் சரியாயிருக்கும் நண்பா ??

சொல்லுடா ?

'' தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நடடா ''....

கீதம்
18-12-2010, 11:17 PM
விவசாயி விஜயகுமாரின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் இதன் பிறகு அவர் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களை நினைத்தால் அவரை நினைத்து பரிதாபம்தான் மேலிடுகிறது.

பிரேம்
18-12-2010, 11:29 PM
ஆமாம்..உண்மைதான்.. ஒரு விவசாயிக்கு இருக்கும் துணிச்சல் எல்லாருக்கும் வரணும்..
அருமையான பதிவு கீதம் மேடம்..
(அதைத்தான் DMK -கட்சியனரே.. 'அடுத்து எங்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு முக்கிய காரணம் மின்வெட்டாகத்தான் இருக்கும்' என்று ஒத்துகொண்டார்களே..)

நாஞ்சில் த.க.ஜெய்
20-12-2010, 09:14 AM
இந்த தமிழகத்தில் இது போன்ற ஒரு முற்போக்கான நிகழ்வு என்றோ வரவேண்டியது .இது போன்று மக்கள் எனும் நமது பணத்தை திருடி நமக்கே இலவசம் எனும் பெயரில் ஓட்டுக்கு கொடுக்கும் விலையாக இதனை தருகிறார்கள் இதனை பற்றிய உண்மை மக்களுக்கு தெரிந்தாலும் இது போன்று சிந்தனை மக்கள் மனதில் எழுமா என்பது சந்தேகமே...ஒரு விவசாயியின் உண்மை மேடையில் உரைத்த தமிழர் விஜய குமார் அவருடைய நிலையை அவர் கூறி விட்டார் தமிழகத்தில் இதுபோன்று நிகழும் நிலையை எவ்விதம் நமது தமழக நண்பர்கள் கையாளபோகிறார்கள்....

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
20-12-2010, 02:04 PM
ஒவ்வொருவருக்கும் ஓட்டு போடும் உரிமை இருக்கிறது

ஆனால் அதை தல கீழாக இந்தகாலம் மாற்றி கட்டாய ஓட்டாக மாற்றி கொண்டு
ரூபாய்க்கும்,போதைக்கும் ஓட்டு போட வைக்கிறார்கள்
இந்த காலம் மாறுமா? இப்படியே ஏமாறுபவர்கள் இருக்கும் போது
அரசியல் வாதிகள் உயர்ந்து கொண்டே தான் போவார்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
21-12-2010, 08:42 AM
உண்மையான கருத்து... பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே !
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

பிரேம்
21-12-2010, 08:43 AM
வரும் தேர்தலுக்கு தங்க காசுகள் ரெடியாகிகிட்டு இருப்பதாக கேள்வி..(யாருக்கும் தெரியுமா..?)

விகடன்
22-12-2010, 08:33 AM
மேற்படி விடயம் முதல்வர் கருணாநிதியை சென்றடைந்திருந்தாலே, இடை முகவர்களால், மக்கள் முதல்வரிற்கு செய்தி அனுப்புவதில் தடங்கள் இல்லை எனலாம். அதுவே, முதல்வர் உணர்ந்து உரிய முறையில் செயற்படுவாராகில் விவசாயியின் முயற்சி வெற்றியில் முடிந்ததாகத்தான் கருதவேண்டும்.

நாஞ்சில் த.க.ஜெய்
24-12-2010, 01:39 PM
மேற்படி விடயம் முதல்வர் கருணாநிதியை சென்றடைந்திருந்தாலே, இடை முகவர்களால், மக்கள் முதல்வருக்கு செய்தி அனுப்புவதில் தடங்கல் இல்லை எனலாம். அதுவே, முதல்வர் உணர்ந்து உரிய முறையில் செயற்படுவாராகில் விவசாயியின் முயற்சி வெற்றியில் முடிந்ததாகத்தான் கருதவேண்டும்.

இந்த விடயம் கூட முதலவருக்கு தெரியாதிருக்கும் என்று கூறினால் எவரும் நம்பமாட்டார்கள் முதல்வரின் சதூர்யத்திற்க்கும் ஞாபகத்திறமைக்கும் நீங்கள் கூறும் வார்த்தைகள் களங்கம் கற்பிப்பது போல் உள்ளது ..பின்னூட்டத்திற்கு நன்றி
என்றும் அன்புடன்
த.க.ஜெய்