பாலகன்
17-12-2010, 08:09 AM
மகாபிரபுவின் தமிழ்ச்சங்கம்
அன்புள்ளங்கொண்ட பெரியோர்களே! மன்ற நண்பர்களே!
நமது மன்றத்தில் துவங்கப்படும் திரிகளிலும், பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் எண்ணற்ற (என்னற்ற = இந்த பிழையை சரிசெய்த ஜானகிக்கு நன்றி) எழுத்துப்பிழைகளை காணமுடிகிறது. எனக்கும் நூறுசதவிகிதம் எழுத்துப்பிழையின்றி எழுத முடியவில்லை. ஒருசில ஒற்றுப்பிழைகள் ஏற்படுகின்றது. அதனால் இந்த தமிழ்ச்சங்கத்தில் இணையும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களது பதிப்புகளில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும்.
தமிழை தவறின்றி கற்க வெட்கமோ கூச்சமோ படத்தேவையில்லை என்பதே எனது கருத்தாகும். இதற்கு உடன்படும் நண்பர்கள் மட்டும் இந்த திரியிலேயே ஒரு பின்னூட்டம் வாயிலாக
"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"
என்ற குறைந்தபட்சம் உத்திரவாதத்தை தரவேண்டும். ஏனெனில் பின்னாளில் நண்பர்களுக்கிடையே புரியாமை ஏற்படாமல் இருக்க இது வழிவகுக்கும். பிழைகளைக் களைவோர் மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் இருத்தல் அவசியம்.
ஆங்கிலத்தில் ஒரு spelling mistake செய்தாலே நம்மை மேலேயும் கீழேயும் :D பார்க்கும் உலகமிது.
தமிழ்ப்பிழைகளை பற்றிய கவலையில்லா மாந்தர்களாக நாம் வாழாமல்
கூச்சம், அச்சம், தாழ்வு மனப்பாங்கு, இவற்றை
களைந்து அன்னைத்தமிழை பாழாக்கும் பிழைகளைக் களைவோம்
வாருங்கள் வீறுகொண்டு!!
இதோ எனது உறுதிமொழி:
"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"
அன்புடன்
மகாபிரபு
அன்புள்ளங்கொண்ட பெரியோர்களே! மன்ற நண்பர்களே!
நமது மன்றத்தில் துவங்கப்படும் திரிகளிலும், பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் எண்ணற்ற (என்னற்ற = இந்த பிழையை சரிசெய்த ஜானகிக்கு நன்றி) எழுத்துப்பிழைகளை காணமுடிகிறது. எனக்கும் நூறுசதவிகிதம் எழுத்துப்பிழையின்றி எழுத முடியவில்லை. ஒருசில ஒற்றுப்பிழைகள் ஏற்படுகின்றது. அதனால் இந்த தமிழ்ச்சங்கத்தில் இணையும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களது பதிப்புகளில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும்.
தமிழை தவறின்றி கற்க வெட்கமோ கூச்சமோ படத்தேவையில்லை என்பதே எனது கருத்தாகும். இதற்கு உடன்படும் நண்பர்கள் மட்டும் இந்த திரியிலேயே ஒரு பின்னூட்டம் வாயிலாக
"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"
என்ற குறைந்தபட்சம் உத்திரவாதத்தை தரவேண்டும். ஏனெனில் பின்னாளில் நண்பர்களுக்கிடையே புரியாமை ஏற்படாமல் இருக்க இது வழிவகுக்கும். பிழைகளைக் களைவோர் மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் இருத்தல் அவசியம்.
ஆங்கிலத்தில் ஒரு spelling mistake செய்தாலே நம்மை மேலேயும் கீழேயும் :D பார்க்கும் உலகமிது.
தமிழ்ப்பிழைகளை பற்றிய கவலையில்லா மாந்தர்களாக நாம் வாழாமல்
கூச்சம், அச்சம், தாழ்வு மனப்பாங்கு, இவற்றை
களைந்து அன்னைத்தமிழை பாழாக்கும் பிழைகளைக் களைவோம்
வாருங்கள் வீறுகொண்டு!!
இதோ எனது உறுதிமொழி:
"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"
அன்புடன்
மகாபிரபு