ஜானகி
15-12-2010, 03:06 PM
சென்னையில் நடக்கும் இசைவிழாவில் இன்று அருண் அவர்கள் பாரதியின் பாடல் ஒன்றை உணர்ச்சிபூர்வமாகப் பாடினார் - மழை பற்றிய பாடல் அது. இன்னிசை மழையுடன், நிஜமான மழையும் சேர்ந்து, ரசிகர்களை வேறு ஓர் உலகுக்கே கொண்டு சென்றுவிட்டார். உடனே வீட்டிற்கு வந்து, பாரதியின் அந்தப் பாடலைத் தேடிப் படித்தேன். நீங்களும் மழையில் நனைய வாருங்கள்:
திக்குக்கள் எட்டும் சிதறி - தக்கத் தீம் தரிகிட, தீம் தரிகிட தீம் தரிகிட - தீம் தரிகிட
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது, பாயுது, பாயுது -தாம் தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம் சாயுது, சாயுது, சாயுது - பேய்கொண்டு,
தக்கையடிக்குது காற்று - தக்கத் தாம்தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டியடிக்குது மின்னல் - கடல், வீரத் திரைகொண்டு, விண்ணை இடிக்குது,
கொட்டி யிடிக்குது மேகம், கூ--கூ--வென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட, சட்டச்சட, டட்ட - என்று தாளங்கொட்டிக் கனைக்குது வானம்,
எட்டுத் திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்ததடா, தம்பி !
அண்டம் குலுங்குது தம்பி ! - தலை ஆயிரம் தூக்கியே சேடனும் பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான், -திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார், - என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம் !
கண்டோம் ! கண்டோம் ! கண்டோம் ! இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம் !
என்ன...என்னைப் போலவே மிரண்டு விட்டீர்களா ? என்னே பாரதியின் சொல்வளம் ?
திக்குக்கள் எட்டும் சிதறி - தக்கத் தீம் தரிகிட, தீம் தரிகிட தீம் தரிகிட - தீம் தரிகிட
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது, பாயுது, பாயுது -தாம் தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம் சாயுது, சாயுது, சாயுது - பேய்கொண்டு,
தக்கையடிக்குது காற்று - தக்கத் தாம்தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டியடிக்குது மின்னல் - கடல், வீரத் திரைகொண்டு, விண்ணை இடிக்குது,
கொட்டி யிடிக்குது மேகம், கூ--கூ--வென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட, சட்டச்சட, டட்ட - என்று தாளங்கொட்டிக் கனைக்குது வானம்,
எட்டுத் திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்ததடா, தம்பி !
அண்டம் குலுங்குது தம்பி ! - தலை ஆயிரம் தூக்கியே சேடனும் பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான், -திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார், - என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம் !
கண்டோம் ! கண்டோம் ! கண்டோம் ! இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம் !
என்ன...என்னைப் போலவே மிரண்டு விட்டீர்களா ? என்னே பாரதியின் சொல்வளம் ?