PDA

View Full Version : மன்றத்தில் உலா வருகையில்



நாஞ்சில் த.க.ஜெய்
15-12-2010, 12:54 PM
நான் மன்றத்தில் உலா வருகையில் நமது பழம் மன்ற நண்பர்களின் பதிவுகளை காண நேர்ந்தது .இந்த பதிவுகளில் பல இன்னும் முடிவடையாத நிலையிலும் மீண்டும் தொடர இயலாத நிலையிலும் உள்ளன..இந்த பதிவுகள் தொடர்ந்தால் இன்னும் நன்றாயிருக்கும் .....இந்த முடிவுறாத பதிவுக்கு தீர்வு என்ன நண்பர்களே ?
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

பாலகன்
15-12-2010, 01:12 PM
பழம் மன்ற நண்பர்கள் என்றால்? அவர்களின் தொடர் கதைகளா?

Hega
15-12-2010, 01:34 PM
இந்த மாதிரி தொடராத தொடர்கள் இணைய உலகில் சகஜம்தானே ஜெய்.

அறிஞர்
15-12-2010, 02:01 PM
இணைய ஆர்வத்தில் ஆரம்பத்தில் அநேக பதிவுகளை கொடுப்பர்.... சிறிது காலத்தில் தொய்வு ஏற்படுகிறது.

நீங்கள் குறிப்பிடும் பதிவுகளை பதிந்தவர்... மன்றத்திற்கு வருகிறார்கள் என்றால் தனிமடல் கொடுங்கள்.

வராதவர்களின் பதிவுகளை தொகுத்து கொடுங்கள். அவர்களின் தனி மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தி வரவழைக்கிறோம்.

நாஞ்சில் த.க.ஜெய்
15-12-2010, 02:43 PM
பின்னூட்டத்திற்கு பதிவிட்ட மகாபிரபு ஹேகா மற்றும் அறிஞர் அவர்களுக்கு நன்றிகள் .
நான் நினைத்தது என்னவென்றால் இந்த முடிவுறா பதிவுகளை பதிவினை தொடர்ந்தவர் தான் தொடர வேண்டும் என்றில்லை..அந்த பதிவுக்கு பதில் தெரிந்தவர் யாராயினும் தொடரலாம் என்பது தான் .இதற்கு நம் மன்ற நண்பர்கள் முன் வர வேண்டும் நமது மன்ற நிவாகம் ஒத்துழைக்குமா என்பது தான் .மேலும் பதிவுகள் பதிவிடும் போது சந்தேகம் கேட்கும் நண்பர்கள் தங்கள் சந்தேகம் தீர்ந்தவுடன் அது எவ்வாறு என்று பதிவிடல் புதியவருக்கு சந்தேகம் வருவதை நிவர்த்தி செய்யும்.. .அது பழைய பதிவென்றாலும் இதன் உதவி நம் மன்ற நண்பர்களுக்கு உதவும் என்பதில் ஐயமேதும் இல்லை ...புதிய வழிமுறைகள் தேடும் போது பல தகவல்கள் கிடைக்கும்.. நமக்கும் உதவும்


பழம் மன்ற நண்பர்கள் என்றால்? அவர்களின் தொடர் கதைகளா?
இல்லை நண்பரே கணினி ,அலைபேசி சந்தேகங்கள் போன்ற பழைய பதிவுகள் என்பதை தான் அவ்வாறு கூறினேன்

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

Hega
15-12-2010, 03:25 PM
தங்கள் கருத்தும் சரிதான் ஜெய்.

ஆன்டனி ஜானி
15-12-2010, 03:54 PM
உங்களுடய கருத்து ரெம்ப ஒரு சிறப்பான ஒரு கருத்து தான்
நண்பரே ........ஏன் நீங்களே ஒரு லிங் கொடுத்து அதை தொடரலாமே

தொடருங்கள் நாங்களும் அதில் எங்களுடய கருத்துகளை பதிவு செய்கிறோம் ...

வாழ்த்துக்கள் ........

அமரன்
15-12-2010, 04:16 PM
ஜெய்..

ஏதாவது ஒரு திரியை எடுத்துக் காட்டி விளக்கினீர்களேயானால் ஆலோசனைகள் பல கிடைக்கக் கூடும்.

நாஞ்சில் த.க.ஜெய்
16-12-2010, 03:13 AM
அமரன் அவர்கள் கேட்டதற்கு இணங்க ஒரு சுட்டியை இணைத்துள்ள்ளேன்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8324

இந்த சுட்டியில் சூநிஷி அவர்களால் சந்தேகம் எழுப்பப்பட்டு நமது மன்ற அன்றைய இன்றைய நண்பர்களால் தீர்வுகள் கொடுக்கபட்டு உள்ளன ஆனால் அந்த சந்தேகம் சூநிஷி அவர்களுக்கு தீர்ந்ததா இல்லை தொடர்ந்ததா? என்று தெரியவில்லை அவ்வாறு தீர்ந்தது எனில் எவ்வாறு என்று கூறியிருந்தால் இது போன்ற சந்தேகங்கள் நமது நண்பர்களுக்கு வராது அல்லவா? மேலும் சில பதிவுகளில் நமது மன்ற நண்பர்களின் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறோம் என்றும் உள்ளது இது போன்று தொடர்பு கொண்டு சந்தேகங்கள் தீரும் பட்சத்தில் அது எவ்வாறு தீர்ந்தது என்றும் கூறினால் நன்றாக இருக்கும்

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

அமரன்
16-12-2010, 06:04 PM
என் கருத்தை கருத்தில் எடுத்தமைக்கு நன்றி நண்பரே!

இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கொடுக்கப்படாமல் இருந்தால் தெரிந்தவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம்.

கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வை நடைமுறைப்படுத்திப் பார்த்து சரியானது என்றால் அதையும் தெரிவிக்கலாம்..

மன்ற ஒழுங்குக்குக் கட்டுப்பட்டிருக்கும் எதற்கும் மன்றத்தின் ஆதரவு உண்டு.

நாஞ்சில் த.க.ஜெய்
17-12-2010, 08:17 AM
பதிவுக்கு பதிவிட்ட அமரன் ,ஆண்டனி ஜானி ,ஹேஹா மற்றும் அறிஞர் மகாபிரபு அவர்களுக்கு நன்றிகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
20-12-2010, 02:32 PM
எதாவது ஒரு திரியயை எடுத்து தொடருங்கள் நண்பரே

உங்களுக்காக காத்திருக்கிறோம் ......

என்றும் .........

அன்புடன்
ஜானி