dellas
13-12-2010, 07:54 AM
அது ஒரு காலைப்பொழுது, வாரத்தின் முதல்நாள். ஒரு பரபரப்பான பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றுகொண்டிருகிறேன். இருவழிசாலையில் பேருந்துகள் விரைந்து கொண்டிருகின்றன. சற்று நீளமான பயணிகள் நிழற்குடை. ஆண்களும் பெண்களும் தனித்தனியாக இடம்விட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து கடைகள் வரிசையாக இருக்கின்றன.
இவைகளைத்தாண்டி ஒரு இளைஞர் பட்டாளம் தனியாக, தங்களுக்குள் பேசிக்கொண்டும், கைதட்டி சிரித்துக்கொண்டும் நிற்கிறார்கள். அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது பார்த்தவுடன் புரிகிறது. அவர்களின் பார்வை நொடிக்கொருதரம் பயணிகள் நிழற்குடை பெண்கள் பகுதியை தழுவிச்செல்கிறது. யாரையோ அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் தெரிகிறது. நான் பக்கத்து கடைக்காரரிடம் எனது பேருந்து வழித்தட எண்ணை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.
பள்ளிக்கூட சிறார்கள் சீருடையில் எங்களைக் கடந்து சென்றது மனதிற்கு இதமாக இருந்தது.
வேலைக்குச் செல்பவர்கள் அவசரகதியில் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். இல்லத்தரசிகள் தங்கள் இல்லப்பணிகளை முடித்துக்கொண்டு, எப்படி இவ்வளவு விரைவாக வேலைக்கு செல்ல முடிகிறது என்பதை வியந்துகொண்டேன். காலைப்பொழுதின் சுறுசுறுப்பை ரசித்தபடி , என் பேருந்தை எதிர்பார்த்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இளைஞர் பட்டாளம் திடீரென்று பிரகாசமாகிறது. அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரும்பி ஒரே திசையில் பார்க்கிறார்கள் நானும் அந்த திசையில் பார்க்கிறேன். ஒரு இளம்பெண் அலைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய ஆடைகள் தற்கால உடைகளாகவும். அவள் வனப்பை வெளிக்காட்டுவதாகவும் உள்ளது. கையை அசைத்தும் தூக்கியும் அவள் பேசும்போது கண்டிப்பாக அவள் உடல் பாகங்கள் வெளியே தெரியும் அபாயம் உள்ளது கண்டிப்பாகஅவளுக்கும் தெரிந்திருக்கும்.
அதை அப்பெண் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதும், இளைஞர்கள் தன்னைப் பார்ப்பது அவளுக்கு கிடைத்த அங்கீகாரமென அவள் நினைப்பதும், அவளின் நடையழைகிலே தெரிகிறது. அவள் அவர்களைக் கடந்து பெண்கள் நின்றுகொண்டிருக்கும் பகுதிக்கு வருகிறாள். அங்கே சாதாரணமாக நிற்கும் ஒரு இளம்பெண்ணை அலட்சியமாக பார்த்து, சற்று எட்டப்போய் நிற்கிறாள்.
நகரத்தில் இவை எல்லாம் சாதாரணம் என்று நானும் என் பார்வையை சாலையை நோக்கித் திருப்புகிறேன். எட்ட நின்ற இளைஞர்கள் இப்போது அவள் பக்கமாக மெதுவாக நகர்ந்து வந்து நிற்கிறார்கள். கண்டிப்பாக அவர்களின் வர்ணனைகள் அவள் காதில் விழுகிறது. அவள் மெல்லிய சிரிப்பை அதற்கு பதிலாக தந்து, தன் முன் நெற்றியில் விழும் கூந்தலை தன் இடக்கரத்தால் பின்தள்ளுகிறாள். அந்த பேருந்து நிறுத்தத்தின் மொத்த கண்களும் அவர்களையே மொய்க்கிறது.
எனக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. தற்கால இளைஞர்கள் ஆடைகளைத்தான் நாகரீகமென நினைக்கிறார்களா?? உடைகள் உடல்களை மறைப்பதற்குத்தான் என்பது மறந்துவிட்டதா?? உடல் தெரிய ஆடை கட்டுபவர்களை எந்த கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்கிறார்கள்??
இதோ நான் போகவேண்டிய வழித்தட பேருந்து வந்து விட்டது. நான் அதை நோக்கிச் செல்கிறேன். அந்த இரு இளம்பெண்களும் அதே பேருந்தை நோக்கிதான் வருகிறார்கள். சாதாரண உடையணிந்த பெண் இவளுக்கு வழி விட்டு பின்னே வருகிறாள். நான் அவர்கள் பின்னால் செல்கிறேன்.
இளைஞர்களில் ஒருவன் வேகமாக அவர்களை நோக்கி வருகிறான். வந்தவன் தன் கைகளால் முன்னால் செல்லும் பெண்ணைத்தொட முயற்சிக்கிறான். இதைப்பார்த்த இரண்டாவதாக வந்தவள் அவன் கையை எட்டிப் பிடிக்கிறாள். பிடித்தவள் அவனை ஒரு சுழற்று சுழற்றி தரையிலே தள்ளுகிறாள். கீழே விழுந்தவனைக் கடந்து செல்லுகிறாள். எழுந்துகொண்ட அவன் அப்பெண்ணைப் பார்த்து,
'விலைமாதுவின் மகளே' என்று திட்டுகிறான்.
அவள் சாதாரணமாகத் திரும்பி,
'நண்பா, விலை மாதுவிற்கும் ஒருவிலை உண்டு, ஒரு அடையாளம் உண்டு. உங்களைப்போல் நாகரீகப் போர்வையில் சாக்கடைப் புழுவாய்த் திரிபவர்களுக்கு என்ன விலை, என்ன அடையாளம்.??உங்களைவிட விலைமாது உயர்ந்தவள்தான்.' என்கிறாள்.
சாட்டையடியாக வருகிறது பதில். நிலைகுலைந்துபோகிறான் அவன்.
தவறு யாருடையது ?? அப்பெண் யாரைச் சொன்னாள் ?? சிந்தனையில் நான். பேருந்தில் என் பயணம் தொடர்கிறது.
இவைகளைத்தாண்டி ஒரு இளைஞர் பட்டாளம் தனியாக, தங்களுக்குள் பேசிக்கொண்டும், கைதட்டி சிரித்துக்கொண்டும் நிற்கிறார்கள். அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது பார்த்தவுடன் புரிகிறது. அவர்களின் பார்வை நொடிக்கொருதரம் பயணிகள் நிழற்குடை பெண்கள் பகுதியை தழுவிச்செல்கிறது. யாரையோ அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் தெரிகிறது. நான் பக்கத்து கடைக்காரரிடம் எனது பேருந்து வழித்தட எண்ணை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.
பள்ளிக்கூட சிறார்கள் சீருடையில் எங்களைக் கடந்து சென்றது மனதிற்கு இதமாக இருந்தது.
வேலைக்குச் செல்பவர்கள் அவசரகதியில் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். இல்லத்தரசிகள் தங்கள் இல்லப்பணிகளை முடித்துக்கொண்டு, எப்படி இவ்வளவு விரைவாக வேலைக்கு செல்ல முடிகிறது என்பதை வியந்துகொண்டேன். காலைப்பொழுதின் சுறுசுறுப்பை ரசித்தபடி , என் பேருந்தை எதிர்பார்த்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இளைஞர் பட்டாளம் திடீரென்று பிரகாசமாகிறது. அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரும்பி ஒரே திசையில் பார்க்கிறார்கள் நானும் அந்த திசையில் பார்க்கிறேன். ஒரு இளம்பெண் அலைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய ஆடைகள் தற்கால உடைகளாகவும். அவள் வனப்பை வெளிக்காட்டுவதாகவும் உள்ளது. கையை அசைத்தும் தூக்கியும் அவள் பேசும்போது கண்டிப்பாக அவள் உடல் பாகங்கள் வெளியே தெரியும் அபாயம் உள்ளது கண்டிப்பாகஅவளுக்கும் தெரிந்திருக்கும்.
அதை அப்பெண் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதும், இளைஞர்கள் தன்னைப் பார்ப்பது அவளுக்கு கிடைத்த அங்கீகாரமென அவள் நினைப்பதும், அவளின் நடையழைகிலே தெரிகிறது. அவள் அவர்களைக் கடந்து பெண்கள் நின்றுகொண்டிருக்கும் பகுதிக்கு வருகிறாள். அங்கே சாதாரணமாக நிற்கும் ஒரு இளம்பெண்ணை அலட்சியமாக பார்த்து, சற்று எட்டப்போய் நிற்கிறாள்.
நகரத்தில் இவை எல்லாம் சாதாரணம் என்று நானும் என் பார்வையை சாலையை நோக்கித் திருப்புகிறேன். எட்ட நின்ற இளைஞர்கள் இப்போது அவள் பக்கமாக மெதுவாக நகர்ந்து வந்து நிற்கிறார்கள். கண்டிப்பாக அவர்களின் வர்ணனைகள் அவள் காதில் விழுகிறது. அவள் மெல்லிய சிரிப்பை அதற்கு பதிலாக தந்து, தன் முன் நெற்றியில் விழும் கூந்தலை தன் இடக்கரத்தால் பின்தள்ளுகிறாள். அந்த பேருந்து நிறுத்தத்தின் மொத்த கண்களும் அவர்களையே மொய்க்கிறது.
எனக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. தற்கால இளைஞர்கள் ஆடைகளைத்தான் நாகரீகமென நினைக்கிறார்களா?? உடைகள் உடல்களை மறைப்பதற்குத்தான் என்பது மறந்துவிட்டதா?? உடல் தெரிய ஆடை கட்டுபவர்களை எந்த கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்கிறார்கள்??
இதோ நான் போகவேண்டிய வழித்தட பேருந்து வந்து விட்டது. நான் அதை நோக்கிச் செல்கிறேன். அந்த இரு இளம்பெண்களும் அதே பேருந்தை நோக்கிதான் வருகிறார்கள். சாதாரண உடையணிந்த பெண் இவளுக்கு வழி விட்டு பின்னே வருகிறாள். நான் அவர்கள் பின்னால் செல்கிறேன்.
இளைஞர்களில் ஒருவன் வேகமாக அவர்களை நோக்கி வருகிறான். வந்தவன் தன் கைகளால் முன்னால் செல்லும் பெண்ணைத்தொட முயற்சிக்கிறான். இதைப்பார்த்த இரண்டாவதாக வந்தவள் அவன் கையை எட்டிப் பிடிக்கிறாள். பிடித்தவள் அவனை ஒரு சுழற்று சுழற்றி தரையிலே தள்ளுகிறாள். கீழே விழுந்தவனைக் கடந்து செல்லுகிறாள். எழுந்துகொண்ட அவன் அப்பெண்ணைப் பார்த்து,
'விலைமாதுவின் மகளே' என்று திட்டுகிறான்.
அவள் சாதாரணமாகத் திரும்பி,
'நண்பா, விலை மாதுவிற்கும் ஒருவிலை உண்டு, ஒரு அடையாளம் உண்டு. உங்களைப்போல் நாகரீகப் போர்வையில் சாக்கடைப் புழுவாய்த் திரிபவர்களுக்கு என்ன விலை, என்ன அடையாளம்.??உங்களைவிட விலைமாது உயர்ந்தவள்தான்.' என்கிறாள்.
சாட்டையடியாக வருகிறது பதில். நிலைகுலைந்துபோகிறான் அவன்.
தவறு யாருடையது ?? அப்பெண் யாரைச் சொன்னாள் ?? சிந்தனையில் நான். பேருந்தில் என் பயணம் தொடர்கிறது.