கீதம்
09-12-2010, 10:35 PM
தற்செயலாய்ப் படிக்கநேர்ந்த இருபாடல்களின் கருத்தொற்றுமை என்னை வெகுவாக வியக்கவைத்தது. அவை...
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.
இப்பாடல் விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகையில் உள்ளதாகும்.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.
இப்பாடல் ஒளவையார் எழுதிய மூதுரையில் ஒன்றாகும்.
இருபாடல்களும் பொதுவாக உரைக்கும் அறவுரைகளாவன:
தருமமல்லாத காரியங்களைச் செய்பவர்களுக்கு அந்தத் தருமமே எமனாக அமையும்; மெல்லிய வாழைமரத்துக்கு அது காய் ஈனும் காரணத்தாலேயே அழிவு நேரிடும்; ஒரு பெண் நல்ல மனையாளாக விளங்காதபட்சத்தில் உண்டாகும் தீங்கு அக்குடும்பத்துக்கே எமனாகும்.
முரண்பட்டு நிற்கும் ஒரே கருத்து முதலாவதாகும்.
நான்மணிக்கடிகையில் கூறப்படுவதாவது,
கல்லாத ஒருவனுக்கு அழிவு அவன் வாயிலிருந்து புறப்படும் சொற்களே என்பது. இது எளிதில் புரியும்படி உள்ளது. இதையே 'நுணலும் தன் வாயால் கெடும்' என்னும் பழமொழி உணர்த்துகிறது.
ஆனால் மூதுரையில் சொல்லப்படுவதாவது,
கல்லாத ஒருவனுடைய அழிவு கற்று உணர்ந்தவர்களின் சொல்லால் உண்டாகும் என்பது. இந்தக்கருத்து எனக்கு விளங்கவில்லை. அறிந்தவர்கள், உதாரணம் சொல்லி விளக்க இயலுமா?
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.
இப்பாடல் விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகையில் உள்ளதாகும்.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.
இப்பாடல் ஒளவையார் எழுதிய மூதுரையில் ஒன்றாகும்.
இருபாடல்களும் பொதுவாக உரைக்கும் அறவுரைகளாவன:
தருமமல்லாத காரியங்களைச் செய்பவர்களுக்கு அந்தத் தருமமே எமனாக அமையும்; மெல்லிய வாழைமரத்துக்கு அது காய் ஈனும் காரணத்தாலேயே அழிவு நேரிடும்; ஒரு பெண் நல்ல மனையாளாக விளங்காதபட்சத்தில் உண்டாகும் தீங்கு அக்குடும்பத்துக்கே எமனாகும்.
முரண்பட்டு நிற்கும் ஒரே கருத்து முதலாவதாகும்.
நான்மணிக்கடிகையில் கூறப்படுவதாவது,
கல்லாத ஒருவனுக்கு அழிவு அவன் வாயிலிருந்து புறப்படும் சொற்களே என்பது. இது எளிதில் புரியும்படி உள்ளது. இதையே 'நுணலும் தன் வாயால் கெடும்' என்னும் பழமொழி உணர்த்துகிறது.
ஆனால் மூதுரையில் சொல்லப்படுவதாவது,
கல்லாத ஒருவனுடைய அழிவு கற்று உணர்ந்தவர்களின் சொல்லால் உண்டாகும் என்பது. இந்தக்கருத்து எனக்கு விளங்கவில்லை. அறிந்தவர்கள், உதாரணம் சொல்லி விளக்க இயலுமா?