PDA

View Full Version : வேண்டாம் நீ வெண்பனி



கேசுவர்
30-11-2010, 11:11 AM
வந்திறங்கிய வெண்தேவதை.
பிரிவு 377யை உடைக்கப்புறப்பட்ட பெண்கள்.
முழுவதுமாக அவளின் ஆகிரமிப்பு.
என்னை தன்பால் உறையவைக்க திட்டம்.
இரண்டுநாள் முன்பே சொல்விட்டேன்.
நான் மணமானவன் என்று.
மறுபடியும் எட்டிப்பார்க்கிறாள் என்னை.
இந்த முறை கண்டிப்பாக சொல்லிவிடப்போகிறேன் அவளிடம்.
என் இனியவளின் நினைவுகளில் மட்டுமே நான் உறைவேன் என்று.
போ போ வேற இடம் பார்த்து.

கீதம்
05-12-2010, 12:02 AM
இல்லாள் இவனுடன் இல்லாள்
என்பதால் இறங்கிவந்தாளோ
வெள்ளுடைத் தேவதை
வெண்பனி வடிவாய்!
இதமாய்த் தீண்டினாலும்
இறுகத் தழுவினாலும்
இல்லாள் உறையும் இதயம்
இவளால் உறையாதெந்நாளும்
என்றே இனிதே இயம்பும்
கவிதைக்கும் கர்த்தாவுக்கும்
கனிவான பாராட்டுகள் பல!

கேசுவர்
05-12-2010, 04:32 PM
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கீதம்.

பாலகன்
05-12-2010, 04:47 PM
ஐய்யோ வழிதவறிய அந்த குருத்தை வேறு எந்த ஓநாயாவது குதறிவிடப்போகிறது. அதனால் நல்ல வழிமுறை காட்டுங்கள் அண்ணலாய் இருந்து

கவிதையும் உமது எண்ணமும் நன்று பாராட்டுகள்

சிறப்பான இந்த கவிதைக்கு 100 இணைய காசுகள் அன்பளிப்பு

அன்புடன்
மகாபிரபு

கேசுவர்
05-12-2010, 05:09 PM
நன்றி மகாபிரபு 100 இணைய காசுகள் கொடுத்து கொளரவித்த உங்களுக்கு மீண்டும் எனது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்