சசிதரன்
28-11-2010, 03:40 PM
எதைப் பற்றி என தெரியாமலே
தொடங்குகிறேன் ஒரு கவிதையை
ஒரு காதலோ
ஒரு மரணமோ
ஒரு புன்னகையோ
சிறு கண்ணீரோ
எதுவுமே இல்லை இப்பொழுது
இன்று
மொட்டைமாடி பூனைக்குட்டிகளில்
ஒன்று தொலைந்து போயிருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு
நண்பன் ஒருவன் தொலைபேசினான்
உணவகத்தில் பார்த்தவள்
அவசியமின்றி புன்னகைத்தாள்
இரண்டு மாதம் முன்பு நடுவீதியில்
வெட்டுப்பட்டு இறந்த சம்பத் சித்தப்பாவை பற்றி
ஏதோ ஒரு பழைய கதை சொன்னாள் அம்மா
தொடர்பில்லாத சம்பவங்களை
தொடர்புபடுத்தவும் முடியாததால்
எதைப் பற்றி என தெரியாமல்
தொடங்கிய கவிதையை
எதைப் பற்றி என தெரியாமலே முடிக்கிறேன்.
தொடங்குகிறேன் ஒரு கவிதையை
ஒரு காதலோ
ஒரு மரணமோ
ஒரு புன்னகையோ
சிறு கண்ணீரோ
எதுவுமே இல்லை இப்பொழுது
இன்று
மொட்டைமாடி பூனைக்குட்டிகளில்
ஒன்று தொலைந்து போயிருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு
நண்பன் ஒருவன் தொலைபேசினான்
உணவகத்தில் பார்த்தவள்
அவசியமின்றி புன்னகைத்தாள்
இரண்டு மாதம் முன்பு நடுவீதியில்
வெட்டுப்பட்டு இறந்த சம்பத் சித்தப்பாவை பற்றி
ஏதோ ஒரு பழைய கதை சொன்னாள் அம்மா
தொடர்பில்லாத சம்பவங்களை
தொடர்புபடுத்தவும் முடியாததால்
எதைப் பற்றி என தெரியாமல்
தொடங்கிய கவிதையை
எதைப் பற்றி என தெரியாமலே முடிக்கிறேன்.