M.Jagadeesan
27-11-2010, 11:25 PM
திருக்குறளில் அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில்
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
என்பது ஒரு குறள்.பெரும்பாலான குறட்பாக்களில் இரண்டு வரிகளிலும் முதல் சீரில் எதுகை, மோனை போன்ற தொடைகள் இயல்பாகவே அமைந்து இன்பம் பயக்கின்றன.ஆனால் இக்குறட்பாவில் அவ்வாறு அமையவில்லை.ஆனால் அமைய வழி உள்ளது.
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.
என்று குறள் இருக்குமேயானால் முதல் இரண்டு சீர்களில்,அதாவது "தீயினால்", "வாயினால்" ஆகிய இரண்டு சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றி எதுகை இன்பம் பயத்தலைக் காண்கிறோம்.இரண்டாவது வரியில் "வாயினால்"மற்றும் "வடு" ஆகிய சொற்களில் முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தலைக் காண்கிறோம்.
மேலும் "வாய்" என்ற சொல்லைத் திருவள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்தக் காண்கிறோம்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மேலேகண்ட மூன்று குறட்பாக்களிலும் "வாய்"என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்து கிறார்.ஆகவே குறட்பா
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.
என்று இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.ஏடுஎடுத்து எழுதியோர் செய்த பிழையோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
கப்பலோட்டிய தமிழர் வ.வு.சி அவர்களும் தம்முடைய "திருக்குறள் அறப்பால்"விருத்தி உரையில் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
என்பது ஒரு குறள்.பெரும்பாலான குறட்பாக்களில் இரண்டு வரிகளிலும் முதல் சீரில் எதுகை, மோனை போன்ற தொடைகள் இயல்பாகவே அமைந்து இன்பம் பயக்கின்றன.ஆனால் இக்குறட்பாவில் அவ்வாறு அமையவில்லை.ஆனால் அமைய வழி உள்ளது.
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.
என்று குறள் இருக்குமேயானால் முதல் இரண்டு சீர்களில்,அதாவது "தீயினால்", "வாயினால்" ஆகிய இரண்டு சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றி எதுகை இன்பம் பயத்தலைக் காண்கிறோம்.இரண்டாவது வரியில் "வாயினால்"மற்றும் "வடு" ஆகிய சொற்களில் முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தலைக் காண்கிறோம்.
மேலும் "வாய்" என்ற சொல்லைத் திருவள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்தக் காண்கிறோம்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மேலேகண்ட மூன்று குறட்பாக்களிலும் "வாய்"என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்து கிறார்.ஆகவே குறட்பா
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.
என்று இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.ஏடுஎடுத்து எழுதியோர் செய்த பிழையோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
கப்பலோட்டிய தமிழர் வ.வு.சி அவர்களும் தம்முடைய "திருக்குறள் அறப்பால்"விருத்தி உரையில் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.