inban
27-11-2010, 11:07 PM
இப்போதும் ஒன்றும்
கெட்டுப்போய் விடவில்லை
உன் ஒருதுளி
வியர்வைகொடு போதும்
என் ரத்தத்தைஎல்லாம் மையாக்கி
ஓராயிரம் கவிதை தருகிறேன்.
உதைபட்ட
கடை வாயிலிருந்து
இரத்தம் ஒழுகியபடியே
மீண்டும் மீண்டும்
தாயிடமே தயவுநாடி வருகிறது கன்று
பூக்களை
ஒளிக்கத் தெரிந்திருந்த இந்தப்பாவிக்கு
அதன் வாசத்தை
மறைக்கத் தெரியாதுபோனது
வேதனைதான்.
எதிர்பார்ப்பிலும்
ஏமாற்றத்திலும்
இழுபறியில் கிடந்த ஒருகவிஞன்
நேற்றைய அந்திதொடங்கி
சாகத் துணிந்துவிட்டான்
அணுக்கள் எங்கிலும்
நீ அலர்த்திய அணிச்சங்கள்
அக்னியாகி அராஜகம் புரிகின்றன
தைலக்காடு தீபிடித்தபோது
நாசி சொல்லிற்று
ஆகா என்ன மணம்?!
அடியே!
எரிவதற்குஅல்லவா தெரியும்
அதன் ரணம்?
நீ எடுத்து வைத்திடும்
ஒவ்வொரு அடியிலும்
ஓங்கி மிதிபடுகிறது
உள்ளம்
குளிர் முகம் வைத்த கொள்ளியில்
குமைந்து எரிகிறது
கோலம்
உனது வதனப்புயல்
என் கரைகடந்திடும் போதெலாம்
பேசாமல் செத்துப் போய்விடலாமா
எனக்கூட எண்ணம் எழுகிறது.
அடியே!
சாகவும்
உன் மடியல்லவா வேண்டி இருக்கிறது !?
கெட்டுப்போய் விடவில்லை
உன் ஒருதுளி
வியர்வைகொடு போதும்
என் ரத்தத்தைஎல்லாம் மையாக்கி
ஓராயிரம் கவிதை தருகிறேன்.
உதைபட்ட
கடை வாயிலிருந்து
இரத்தம் ஒழுகியபடியே
மீண்டும் மீண்டும்
தாயிடமே தயவுநாடி வருகிறது கன்று
பூக்களை
ஒளிக்கத் தெரிந்திருந்த இந்தப்பாவிக்கு
அதன் வாசத்தை
மறைக்கத் தெரியாதுபோனது
வேதனைதான்.
எதிர்பார்ப்பிலும்
ஏமாற்றத்திலும்
இழுபறியில் கிடந்த ஒருகவிஞன்
நேற்றைய அந்திதொடங்கி
சாகத் துணிந்துவிட்டான்
அணுக்கள் எங்கிலும்
நீ அலர்த்திய அணிச்சங்கள்
அக்னியாகி அராஜகம் புரிகின்றன
தைலக்காடு தீபிடித்தபோது
நாசி சொல்லிற்று
ஆகா என்ன மணம்?!
அடியே!
எரிவதற்குஅல்லவா தெரியும்
அதன் ரணம்?
நீ எடுத்து வைத்திடும்
ஒவ்வொரு அடியிலும்
ஓங்கி மிதிபடுகிறது
உள்ளம்
குளிர் முகம் வைத்த கொள்ளியில்
குமைந்து எரிகிறது
கோலம்
உனது வதனப்புயல்
என் கரைகடந்திடும் போதெலாம்
பேசாமல் செத்துப் போய்விடலாமா
எனக்கூட எண்ணம் எழுகிறது.
அடியே!
சாகவும்
உன் மடியல்லவா வேண்டி இருக்கிறது !?