M.Jagadeesan
23-11-2010, 11:10 AM
கற்பனைப் பெண்ணே ! கற்பனைப் பெண்ணே !
நீ
கம்பனுக்கு மட்டும்தான் சொந்தமோ?
அவன்
பத்தாயிரம் பாடல் கொண்ட இராமாயணம்
என்னும் பெரிய
சொத்துக்கு சொந்தக்காரன்
நானோ அன்றாடங்காய்ச்சி
அதனால்தான்
என்போலும்
ஏழைப்புலவனின்
எழுத்துக்களை நீ
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கவலையில்லை!
எனக்குச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் என்னும் கற்களினால்
கவிதை மாளிகை
கட்டிக்கொள்வேன்.
வெண்பாவே ! வெண்பாவே !
புகழேந்தியின் வீடு உன் புகுந்தவீடோ?
புகழேந்தியின் வாயிலிருந்து
புயலாகப் புறப்பட்டு வரும் நீ !
என்னுடைய
எழுத்தாணியின்
எழுத்துக்களைக் கண்டு
ஏளனம் செய்கிறாய்.
கவலையில்லை !
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
"புதுக் கவிதை" என்னும் புதுமையான காதலி
நீ விதிக்கும்
கடுமையான சட்ட திட்டங்களை
என் காதலி கண்டு கொள்வதில்லை
அவள்தான் என் இல்லத்தரசி
அவளே எனக்கு "உலக அழகி"
நீ
கம்பனுக்கு மட்டும்தான் சொந்தமோ?
அவன்
பத்தாயிரம் பாடல் கொண்ட இராமாயணம்
என்னும் பெரிய
சொத்துக்கு சொந்தக்காரன்
நானோ அன்றாடங்காய்ச்சி
அதனால்தான்
என்போலும்
ஏழைப்புலவனின்
எழுத்துக்களை நீ
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கவலையில்லை!
எனக்குச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் என்னும் கற்களினால்
கவிதை மாளிகை
கட்டிக்கொள்வேன்.
வெண்பாவே ! வெண்பாவே !
புகழேந்தியின் வீடு உன் புகுந்தவீடோ?
புகழேந்தியின் வாயிலிருந்து
புயலாகப் புறப்பட்டு வரும் நீ !
என்னுடைய
எழுத்தாணியின்
எழுத்துக்களைக் கண்டு
ஏளனம் செய்கிறாய்.
கவலையில்லை !
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
"புதுக் கவிதை" என்னும் புதுமையான காதலி
நீ விதிக்கும்
கடுமையான சட்ட திட்டங்களை
என் காதலி கண்டு கொள்வதில்லை
அவள்தான் என் இல்லத்தரசி
அவளே எனக்கு "உலக அழகி"