கீதம்
22-11-2010, 01:38 AM
என் சொற்களைக் காணவில்லை
என்றொரு அறிவிப்பை
மன்றப்பலகையில் காண்பீராயின்
தயவுசெய்து தேடும் முயற்சியில்
தீவிரமாயிறங்கிடல் வேண்டா!
சொல்வது யாரென யோசியாதீர்!
நாங்கள் நாங்கள்தான்!
அன்புடையீர்!
அவனிடம் சொல்லிவிடாதீர்
எங்கள் அஞ்ஞாத இருப்பை!
அறிகிறானில்லை அஞ்ஞானி
எங்கள் ஆழ்மனக்கிடப்பை!
அவன் கனவுகளே எங்கள் கருப்பை;
கவிப்பசி தோன்றுந்தோறும்
குருதி வழிய எம்மைக் குதறித் தின்று
நிறைக்கிறானவன் இரைப்பை!
அன்றொருநாள் இதுபோலவே
அள்ளியெடுத்தக் கரங்களினூடே,
அரைத்து விழுங்கும் பற்களினூடே
அகப்பட்ட இடத்திலெல்லாம்
அகப்படாது தப்பினோம்,
குற்றுயிரும் குலையுயிருமாய்!
எனினும் கண்டுபிடித்துவிட்டான்
சாமர்த்தியக்காரன்!
சாகசக்காரனும் கூட!
இல்லையெனில் எழுத்துக்களைக் கொல்ல
காதலை ஏவுவதும்,
காதலியைக் கொலைசெய்ய
எழுத்துக்களைக் கூர்தீட்டுவதும்
ஒரேநேரத்தில் சாத்தியப்படுமா?
இருவரையும் மோதவிட்டு
ஒற்றைப் பார்வையாளனாய்
ஒய்யாரமாய் அமர்ந்து ரசிக்கத்தான் இயலுமா?
மீனைக்கொண்டு மீனைப்பிடித்தல் போல,
யானை கொண்டு யானை பிடித்தல் போல
கைவசமிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு
காணாமற்போன எங்களுக்கு
கண்ணி வைத்துக் காத்திருக்கவும் கூடுமோ?
இத்தனை சொல்லியும் அவனோடு
இணக்கமாகிப் போவீராயின்...
எச்சரிக்கை!
இயன்றவரை உம் சொற்களை
அவனிடமிருந்து மறைத்தே வையுங்கள்!
என்றொரு அறிவிப்பை
மன்றப்பலகையில் காண்பீராயின்
தயவுசெய்து தேடும் முயற்சியில்
தீவிரமாயிறங்கிடல் வேண்டா!
சொல்வது யாரென யோசியாதீர்!
நாங்கள் நாங்கள்தான்!
அன்புடையீர்!
அவனிடம் சொல்லிவிடாதீர்
எங்கள் அஞ்ஞாத இருப்பை!
அறிகிறானில்லை அஞ்ஞானி
எங்கள் ஆழ்மனக்கிடப்பை!
அவன் கனவுகளே எங்கள் கருப்பை;
கவிப்பசி தோன்றுந்தோறும்
குருதி வழிய எம்மைக் குதறித் தின்று
நிறைக்கிறானவன் இரைப்பை!
அன்றொருநாள் இதுபோலவே
அள்ளியெடுத்தக் கரங்களினூடே,
அரைத்து விழுங்கும் பற்களினூடே
அகப்பட்ட இடத்திலெல்லாம்
அகப்படாது தப்பினோம்,
குற்றுயிரும் குலையுயிருமாய்!
எனினும் கண்டுபிடித்துவிட்டான்
சாமர்த்தியக்காரன்!
சாகசக்காரனும் கூட!
இல்லையெனில் எழுத்துக்களைக் கொல்ல
காதலை ஏவுவதும்,
காதலியைக் கொலைசெய்ய
எழுத்துக்களைக் கூர்தீட்டுவதும்
ஒரேநேரத்தில் சாத்தியப்படுமா?
இருவரையும் மோதவிட்டு
ஒற்றைப் பார்வையாளனாய்
ஒய்யாரமாய் அமர்ந்து ரசிக்கத்தான் இயலுமா?
மீனைக்கொண்டு மீனைப்பிடித்தல் போல,
யானை கொண்டு யானை பிடித்தல் போல
கைவசமிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு
காணாமற்போன எங்களுக்கு
கண்ணி வைத்துக் காத்திருக்கவும் கூடுமோ?
இத்தனை சொல்லியும் அவனோடு
இணக்கமாகிப் போவீராயின்...
எச்சரிக்கை!
இயன்றவரை உம் சொற்களை
அவனிடமிருந்து மறைத்தே வையுங்கள்!