M.Jagadeesan
17-11-2010, 09:45 AM
காதலிக்காகக்
கால்கடுக்கக்
காத்திருக்கும்
காதலனுக்கு
நேரம் போகவில்லையே என்ற கவலையால்
ஒவ்வொரு நிமிடமும்
ஒரு யுகமாகக் கழிகிறது.
தூக்கமின்றித் தவிக்கும்
தூக்குத் தண்டனைக் கைதிக்கோ
நாட்கள் நகர்கிறதே என்ற கவலையால்
ஒவ்வொரு நாளும்
ஒரு நிமிடமாகக் கழிகிறது.
லஞ்சங்களில் புரளும்
லட்சாதிபதிக்கு
நூறு ரூபாய் எல்லாம்
ஒரு ரூபாய்,
பஞ்சத்தில் அடிபட்ட
பரதேசிக்கோ
ஒரு ரூபாய் எல்லாம்
நூறு ரூபாய்.
பல நாள்
பட்டினிக்காரனுக்குப்
பாகற்காய் எல்லாம்
பஞ்சாமிர்தம்.
பசியைத் தேடும்
பணக்காரனுக்கோ
பஞ்சாமிர்தம் எல்லாம்
பாகற்காய்.
மண்டை பிளக்கும் வெயிலில்
மாடுபோல் உழைப்பவனுக்கு
மலையெல்லாம் கடுகாகும்
வாழைப்பழம் உரிக்கவும்
ஆளைத்தேடும் சோம்பேறிகளுக்குக்
கடுகெல்லாம் மலையாகும்.
கால்கடுக்கக்
காத்திருக்கும்
காதலனுக்கு
நேரம் போகவில்லையே என்ற கவலையால்
ஒவ்வொரு நிமிடமும்
ஒரு யுகமாகக் கழிகிறது.
தூக்கமின்றித் தவிக்கும்
தூக்குத் தண்டனைக் கைதிக்கோ
நாட்கள் நகர்கிறதே என்ற கவலையால்
ஒவ்வொரு நாளும்
ஒரு நிமிடமாகக் கழிகிறது.
லஞ்சங்களில் புரளும்
லட்சாதிபதிக்கு
நூறு ரூபாய் எல்லாம்
ஒரு ரூபாய்,
பஞ்சத்தில் அடிபட்ட
பரதேசிக்கோ
ஒரு ரூபாய் எல்லாம்
நூறு ரூபாய்.
பல நாள்
பட்டினிக்காரனுக்குப்
பாகற்காய் எல்லாம்
பஞ்சாமிர்தம்.
பசியைத் தேடும்
பணக்காரனுக்கோ
பஞ்சாமிர்தம் எல்லாம்
பாகற்காய்.
மண்டை பிளக்கும் வெயிலில்
மாடுபோல் உழைப்பவனுக்கு
மலையெல்லாம் கடுகாகும்
வாழைப்பழம் உரிக்கவும்
ஆளைத்தேடும் சோம்பேறிகளுக்குக்
கடுகெல்லாம் மலையாகும்.