ஆதவா
16-11-2010, 05:03 AM
அந்த அறை மிகவும் இருட்டானது
திறக்கவியலா பூட்டுக்கள் நிறைந்த
பல கதவுகளால் நிறைந்தது
ஒவ்வொரு அறைக்குள்ளும் நீ
நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தாய்
வாசிப்பதற்காக சில சாவிகளைக் கொடுத்து
நீயே கதவுகளைத் திறந்து வைத்து
மெழுகுவர்த்திகளைக் கொடுத்தனுப்பினாய்
உன் புத்தகங்கள் ஒவ்வொன்றும்
ஆழமான கருத்துள்ளவை
படிப்பதற்குக் கடினமான மொழியாளுமையைக்
கொண்டிருப்பவை
பல புத்தகங்களைப் படித்த பின்னே
என் அந்திமமும் நெருங்கிவிட்டது
படிப்பதற்கே இத்தனை காலமெனில்
எத்தனை நாட்களாய் அமர்ந்து எழுதினாய்?
இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை
ஏனெனில்
திறக்கவியலாத சாவிகளைத்தானே
என்னிடம் கொடுத்தனுப்பினாய்!!??
திறக்கவியலா பூட்டுக்கள் நிறைந்த
பல கதவுகளால் நிறைந்தது
ஒவ்வொரு அறைக்குள்ளும் நீ
நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தாய்
வாசிப்பதற்காக சில சாவிகளைக் கொடுத்து
நீயே கதவுகளைத் திறந்து வைத்து
மெழுகுவர்த்திகளைக் கொடுத்தனுப்பினாய்
உன் புத்தகங்கள் ஒவ்வொன்றும்
ஆழமான கருத்துள்ளவை
படிப்பதற்குக் கடினமான மொழியாளுமையைக்
கொண்டிருப்பவை
பல புத்தகங்களைப் படித்த பின்னே
என் அந்திமமும் நெருங்கிவிட்டது
படிப்பதற்கே இத்தனை காலமெனில்
எத்தனை நாட்களாய் அமர்ந்து எழுதினாய்?
இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை
ஏனெனில்
திறக்கவியலாத சாவிகளைத்தானே
என்னிடம் கொடுத்தனுப்பினாய்!!??