govindh
15-11-2010, 05:29 PM
கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக...அனைத்துத் துறை மாணவர்களும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அவ் விழாவிற்காக..ஒரு நாடகம் தயார் செய்து
கொண்டிருப்பதாகவும்..,அதற்கான கதை அமைப்பும், ஒத்திகையும் நடக்கிறது.அதில் நீயும் கலந்து கொள்ளலாம் என எனை அன்போடு அழைத்தான் என் நண்பன். (தமிழ் துறை மாணவன்)
நானும் ஆர்வத்துடன் சென்றேன்.
நாடக அமைப்புக் குழுத் தலைமை மாணவர், நாடகத்தின் கதைச் சுருக்கத்தை தன் குழுவினருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.
என்ன இது..வணிகவியலுக்கும் தமிழ் மேல் ஆர்வமா...?!
எனக் கேட்டார்...
ஆம், என்று அமைதியாகப் பதில் சொன்னேன்.
அவர் தொடர்ந்தார்....'கல்லூரி காதல் கதை...அதுவம் ஒரு சோகக் கதை...ஆனால் ஆரம்பமெல்லாம் கேலி..கிண்டல்...எல்லாம் அமர்க்களப்படும்...
நீங்களும் உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு
இக் கதையினை உயிர்ப்பிக்க வேண்டுமென்றார்.
நான் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்காமல் ..நாடகத்தின் தலைப்பு என்னவென்று கேட்டேன். நாலைந்து தலைப்புக்கள் மனதில் இருப்பதாகவும்...இன்னும் முடிவு செய்யவில்லை...நீயும் சொல்லலாம் என அனுமதி தந்தார்.
கதை சுருக்கத்தை மனதிற் கொண்டு.., "வா...குயிலழகே...வா..." பொருத்தம் தானா என்றேன்...
பரவாயில்லையே....வணிகவியலுக்கும் நல்ல ரசனை இருக்குதே...எனத் தட்டிக் கொடுத்தார்.
தடுமாறி விழப் போவதை அப்போது நான் உணரவில்லை..!
கல்லூரி வருகையில் வரவேற்பாக..., மாணவிகளைக் கிண்டல் செய்யும் விதமாக (மனம் புண்படாமல் தான்)....நிறைய வசனங்களை சொன்னார்...அடேயப்பா...நமக்கேத் தெரியாமல் இவ்வளவு இருக்குதா...?! என அனைவரும் ஆச்சர்யப்பட்டு.., தங்கள் பங்குக்கும் அனைவரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
ஆர்வம் தாளாமல், நானும் என் பங்குக்கு ஏதேதோ சொன்னேன்.
'மதனா...இன்னைக்கு என்ன கிழமை...புதனா..?'
'பிருந்தா, நேத்து ஏம்மா கல்லூரிக்கு வரலை....உங்க வீட்ல விருந்தா...?'
இதெல்லாம் பிடித்திருப்பதாக குறித்துக் கொண்டார்.
காதலன்....காதலி....சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது...
தன்னை அண்ணன் பார்த்து விட்டதாகவும்.., உடனே இங்கிருந்து சென்று விடு...இடத்தைக் காலி செய்...' என அவசரப்படுத்துகிறாள் காதலி. ஆனால் காதலன் மறுக்கிறான்.
'புஷ்பலதா...நீ எனக்கு கிஸ் பல தா...' அப்பத் தான் இங்கிருந்து கிளம்புவேன்....என வசனம் சொன்னேன்.
அதுவும் அவருக்கு பிடித்து விட்டதால், கதை அமைப்பிலும், வசனத்திலும் என் கருத்துகளைப் பதிவு செய்து கொண்டார்.
ஒருவாறாக, மாற்றங்கள்..., திருத்தங்கள்...என ஒரு முழு வடிவம் அவருக்கு திருப்தியாகப் பட்டது. நாடகக் குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டு 'வசன உதவி'...
என்று உன் பெயரை அறிவிப்பேன் என்றார்.
நான், வேண்டவே வேண்டாம்...என் பெயரை சொல்லவேக் கூடாது...என பதட்டத்துடன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்...அவர் கேட்பதாக இல்லை.
ஏன்..? எனக் காரணம் கேட்டார்.
(நான் பின் விளைவுகளை எண்ணி....வீட்டில் எனக்கு
நடக்கப் போகும்..,திருவிழா, பூஜைகளை...
நினைத்து பயந்து கொண்டிருந்ததால் ....வார்த்தைகள் வரவில்லை..)
என் நண்பன் தான் எடுத்து சொன்னான்...
காரணம் இது தான் :
அதே கல்லூரியில் தான் என் அக்காளும் முதுநிலை...படிக்கிறாள்...
அதே ஊர் பள்ளியில் என் அப்பா தலைமையாசிரியர்....
என் அப்பாவும்...அக் கல்லூரி முதல்வரும் நண்பர்கள்...)
அதனால் தான்....என்று....இழுத்தவுடன் ..சத்தம் போட்டு சிரித்தார்.
'இது நாடகம் தானே...!?' உன்னைப் பாராட்டத் தான் செய்வார்கள்...உனக்கு எந்தப் பாதிப்பும் வராது...
பயப்பட வேண்டாம்...நான் பார்த்துக் கொள்கிறேன்..'என்றார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
ஏன் இங்கு வந்தோம் என்று நொந்து கொண்டேன்.
அவரிடம் மிகவும் பணிவாக கெஞ்சிக் கேட்டேன்...
சரி...உனக்கு பயமாக இருப்பதால் விட்டு விடுகிறேன்...
ஆனால் உன் பெயரை புறக்கணிக்க மனமில்லை....
யார் கேட்டாலும்...உன் பெயரை சொல்ல மாட்டேன்...'
என உறுதி அளித்தார்....
அப்போது தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
ஆனால் அவ் விழாவில்...நாடகத்தின் முடிவில்....
வசன உதவி கோவி என அறிவித்து விட்டார்...
(மன்றத்தில் குணமதி என்னை 'கோவி' என குறிப்பிடுவார்...)
நாடகம் சிறப்பாக இருந்தது என்று அனைத்து துறை
பேராசிரியர்களும்...மாணவர்களும்....பாராட்டி புகழ்ந்து
பேசினார்கள்.
அக் குழுவில் அனைவரையும் பாராட்டி விட்டு...
யார் அந்த வசன உதவி...?! என்று ஆளாளுக்கு
கேள்வி எழுப்பி......,பேசிக் கொண்டார்கள்.
அப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது...
'நான் தான்' என சொல்லி விடலாம் என நினைத்த போது....
(அடுத்து நடந்தது தான்....எனக்கு மனசு வலித்தது...
இன்னும் வலிக்கிறது..)
தமிழ் துறை மாணவன் கோபியை எல்லோரும் பாராட்டினார்கள்.
கை குலுக்கித் தோள் தட்டினார்கள்...
அவனும் ஹி...ஹி...என இளித்துக் கொண்டே...
அனைவருடைய பாராட்டையும் வாங்கிக் கொண்டான்...
(என் வயிற்றெரிச்சலையும் சேர்த்து...!)
அவ் விழாவிற்காக..ஒரு நாடகம் தயார் செய்து
கொண்டிருப்பதாகவும்..,அதற்கான கதை அமைப்பும், ஒத்திகையும் நடக்கிறது.அதில் நீயும் கலந்து கொள்ளலாம் என எனை அன்போடு அழைத்தான் என் நண்பன். (தமிழ் துறை மாணவன்)
நானும் ஆர்வத்துடன் சென்றேன்.
நாடக அமைப்புக் குழுத் தலைமை மாணவர், நாடகத்தின் கதைச் சுருக்கத்தை தன் குழுவினருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.
என்ன இது..வணிகவியலுக்கும் தமிழ் மேல் ஆர்வமா...?!
எனக் கேட்டார்...
ஆம், என்று அமைதியாகப் பதில் சொன்னேன்.
அவர் தொடர்ந்தார்....'கல்லூரி காதல் கதை...அதுவம் ஒரு சோகக் கதை...ஆனால் ஆரம்பமெல்லாம் கேலி..கிண்டல்...எல்லாம் அமர்க்களப்படும்...
நீங்களும் உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு
இக் கதையினை உயிர்ப்பிக்க வேண்டுமென்றார்.
நான் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்காமல் ..நாடகத்தின் தலைப்பு என்னவென்று கேட்டேன். நாலைந்து தலைப்புக்கள் மனதில் இருப்பதாகவும்...இன்னும் முடிவு செய்யவில்லை...நீயும் சொல்லலாம் என அனுமதி தந்தார்.
கதை சுருக்கத்தை மனதிற் கொண்டு.., "வா...குயிலழகே...வா..." பொருத்தம் தானா என்றேன்...
பரவாயில்லையே....வணிகவியலுக்கும் நல்ல ரசனை இருக்குதே...எனத் தட்டிக் கொடுத்தார்.
தடுமாறி விழப் போவதை அப்போது நான் உணரவில்லை..!
கல்லூரி வருகையில் வரவேற்பாக..., மாணவிகளைக் கிண்டல் செய்யும் விதமாக (மனம் புண்படாமல் தான்)....நிறைய வசனங்களை சொன்னார்...அடேயப்பா...நமக்கேத் தெரியாமல் இவ்வளவு இருக்குதா...?! என அனைவரும் ஆச்சர்யப்பட்டு.., தங்கள் பங்குக்கும் அனைவரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
ஆர்வம் தாளாமல், நானும் என் பங்குக்கு ஏதேதோ சொன்னேன்.
'மதனா...இன்னைக்கு என்ன கிழமை...புதனா..?'
'பிருந்தா, நேத்து ஏம்மா கல்லூரிக்கு வரலை....உங்க வீட்ல விருந்தா...?'
இதெல்லாம் பிடித்திருப்பதாக குறித்துக் கொண்டார்.
காதலன்....காதலி....சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது...
தன்னை அண்ணன் பார்த்து விட்டதாகவும்.., உடனே இங்கிருந்து சென்று விடு...இடத்தைக் காலி செய்...' என அவசரப்படுத்துகிறாள் காதலி. ஆனால் காதலன் மறுக்கிறான்.
'புஷ்பலதா...நீ எனக்கு கிஸ் பல தா...' அப்பத் தான் இங்கிருந்து கிளம்புவேன்....என வசனம் சொன்னேன்.
அதுவும் அவருக்கு பிடித்து விட்டதால், கதை அமைப்பிலும், வசனத்திலும் என் கருத்துகளைப் பதிவு செய்து கொண்டார்.
ஒருவாறாக, மாற்றங்கள்..., திருத்தங்கள்...என ஒரு முழு வடிவம் அவருக்கு திருப்தியாகப் பட்டது. நாடகக் குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டு 'வசன உதவி'...
என்று உன் பெயரை அறிவிப்பேன் என்றார்.
நான், வேண்டவே வேண்டாம்...என் பெயரை சொல்லவேக் கூடாது...என பதட்டத்துடன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்...அவர் கேட்பதாக இல்லை.
ஏன்..? எனக் காரணம் கேட்டார்.
(நான் பின் விளைவுகளை எண்ணி....வீட்டில் எனக்கு
நடக்கப் போகும்..,திருவிழா, பூஜைகளை...
நினைத்து பயந்து கொண்டிருந்ததால் ....வார்த்தைகள் வரவில்லை..)
என் நண்பன் தான் எடுத்து சொன்னான்...
காரணம் இது தான் :
அதே கல்லூரியில் தான் என் அக்காளும் முதுநிலை...படிக்கிறாள்...
அதே ஊர் பள்ளியில் என் அப்பா தலைமையாசிரியர்....
என் அப்பாவும்...அக் கல்லூரி முதல்வரும் நண்பர்கள்...)
அதனால் தான்....என்று....இழுத்தவுடன் ..சத்தம் போட்டு சிரித்தார்.
'இது நாடகம் தானே...!?' உன்னைப் பாராட்டத் தான் செய்வார்கள்...உனக்கு எந்தப் பாதிப்பும் வராது...
பயப்பட வேண்டாம்...நான் பார்த்துக் கொள்கிறேன்..'என்றார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
ஏன் இங்கு வந்தோம் என்று நொந்து கொண்டேன்.
அவரிடம் மிகவும் பணிவாக கெஞ்சிக் கேட்டேன்...
சரி...உனக்கு பயமாக இருப்பதால் விட்டு விடுகிறேன்...
ஆனால் உன் பெயரை புறக்கணிக்க மனமில்லை....
யார் கேட்டாலும்...உன் பெயரை சொல்ல மாட்டேன்...'
என உறுதி அளித்தார்....
அப்போது தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
ஆனால் அவ் விழாவில்...நாடகத்தின் முடிவில்....
வசன உதவி கோவி என அறிவித்து விட்டார்...
(மன்றத்தில் குணமதி என்னை 'கோவி' என குறிப்பிடுவார்...)
நாடகம் சிறப்பாக இருந்தது என்று அனைத்து துறை
பேராசிரியர்களும்...மாணவர்களும்....பாராட்டி புகழ்ந்து
பேசினார்கள்.
அக் குழுவில் அனைவரையும் பாராட்டி விட்டு...
யார் அந்த வசன உதவி...?! என்று ஆளாளுக்கு
கேள்வி எழுப்பி......,பேசிக் கொண்டார்கள்.
அப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது...
'நான் தான்' என சொல்லி விடலாம் என நினைத்த போது....
(அடுத்து நடந்தது தான்....எனக்கு மனசு வலித்தது...
இன்னும் வலிக்கிறது..)
தமிழ் துறை மாணவன் கோபியை எல்லோரும் பாராட்டினார்கள்.
கை குலுக்கித் தோள் தட்டினார்கள்...
அவனும் ஹி...ஹி...என இளித்துக் கொண்டே...
அனைவருடைய பாராட்டையும் வாங்கிக் கொண்டான்...
(என் வயிற்றெரிச்சலையும் சேர்த்து...!)