inban
15-11-2010, 03:17 PM
தாத்தா வாங்கிவரும்
திராச்சைக்கு தொடங்கி
எப்போதும் சண்டை அவளோடு
வீட்டில் எபோதும்
உதை வாங்க வைக்கும் அவளுக்கு
மனசாட்சியே இல்லை
என்பதுதான்
அபோதைய
அசைக்கமுடியாத நம்பிக்கை
பந்து விளையாட கிளம்பினால்
பூச் செடிகளுக்கு
காவல் இருக்க ஓடுவாள்
பண்டிகை தினங்களில்
புத்தாடை காட்டி
'எப்படி' என்பாள்
'பூனைக்கு பூமாலை' என்றதும்
கோபத்தில் தலைமுடி பிடிப்பாள்
காலாண்டு தேர்விலே
தவறிய தகவல்
வீடு வரை எட்டாது இருக்க
எதையோ
லஞ்சமாக தந்தது ஞாபகம்
வள்ளிக்கு வைத்த முத்தத்தை
முச்சந்திக்கு இழுத்தது
சட்டை பையில் கிடந்த சிகிரெட்டினை
சித்தியிடம் நீட்டியது-என
மோதலிலேயே எங்களின்
உறவுப்பாலம் உருப்பெற்றிருந்தாலும்
கல்யாணமாகி அவள்
கணவன் வீடு போனபோதுதான் தெரிகிறது
சண்டை மகத்துவமும்...
சகோதர பாசமும்...
திராச்சைக்கு தொடங்கி
எப்போதும் சண்டை அவளோடு
வீட்டில் எபோதும்
உதை வாங்க வைக்கும் அவளுக்கு
மனசாட்சியே இல்லை
என்பதுதான்
அபோதைய
அசைக்கமுடியாத நம்பிக்கை
பந்து விளையாட கிளம்பினால்
பூச் செடிகளுக்கு
காவல் இருக்க ஓடுவாள்
பண்டிகை தினங்களில்
புத்தாடை காட்டி
'எப்படி' என்பாள்
'பூனைக்கு பூமாலை' என்றதும்
கோபத்தில் தலைமுடி பிடிப்பாள்
காலாண்டு தேர்விலே
தவறிய தகவல்
வீடு வரை எட்டாது இருக்க
எதையோ
லஞ்சமாக தந்தது ஞாபகம்
வள்ளிக்கு வைத்த முத்தத்தை
முச்சந்திக்கு இழுத்தது
சட்டை பையில் கிடந்த சிகிரெட்டினை
சித்தியிடம் நீட்டியது-என
மோதலிலேயே எங்களின்
உறவுப்பாலம் உருப்பெற்றிருந்தாலும்
கல்யாணமாகி அவள்
கணவன் வீடு போனபோதுதான் தெரிகிறது
சண்டை மகத்துவமும்...
சகோதர பாசமும்...