PDA

View Full Version : உன்னைக் கண்டபின் எனக்குள்......!!!!!



gopikrishnan.r
15-11-2010, 08:18 AM
கடந்த
காலங்கள்
முடிவுறாமல்
நினைவுகளாய்..........

நிகழ் காலம்
நிஜங்களை
காட்டாமல்
நிர்ச்சலனமாய்.........

எதிர் காலமோ
எண்ணங்களை
கடந்து
கேள்விக்குறிகளாய்.....

இந்த மாற்றங்கள்
யாவும்
உன்னைக்
கண்டபின்
எனக்குள்......!!!!!

அக்னி
15-11-2010, 08:54 AM
வசந்தகாலம்
முடிவுற்று

இந்தக்காலம்
தெளிவற்று

வரும்காலம்
திக்கற்று

இந்த மாற்றங்கள்
யாவும்
உன்னைக் கண்டபின் எனக்குள்...

என வந்த பதில்..,
மேற்கவிதையைத் திரும்பவும்
பூக்கவைத்தது...

ஆதவா
15-11-2010, 09:24 AM
////
இந்த மாற்றங்கள்
யாவும்
உன்னைக்
கண்டபின்
எனக்குள்......!!!!!
/////

கவிதை அருமை.
அக்னியின் பதில் கவிதை அவர் திரும்பவும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று தோன்றுகிறது!

gopikrishnan.r
07-06-2011, 08:17 AM
நன்றிகள் நண்பர்களே...!!!

Ravee
07-06-2011, 10:00 AM
கடந்த கால கால கனவுகள் நிகழ்காலத்தில் நிஜங்கள் ஆகி எதிர் கால கேள்விகளுக்கு பதில்கள் ஆகட்டும். வாழ்த்துக்கள் நண்பரே ...:)

Nivas.T
09-06-2011, 12:56 PM
மிக அழகானக் கவிதை

பாராட்டுகள்

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 02:18 PM
அருமையான கவிலயம் ....வாழ்த்துகள்..

முரளிராஜா
09-06-2011, 04:36 PM
அருமையான கவிதை
வாழ்த்துகள் நண்பரே

kalaiselvan2
13-12-2011, 03:49 AM
அருமை திரு கோபி அவர்களே

பென்ஸ்
13-12-2011, 07:03 AM
ஏதிர்பாராமை... காதலிலும்தான்
நிச்சயமின்மை... கதலிலும்தான்
இல்லாமை .... காதலிலும்தான்

இதை எல்லாம் கடந்து செல்லும் மனமும் தைரியமும் இல்லாத போது
எக்காலமும் இறந்த காலம் தான்...

கவிதை அருமை... காதல் மொட்டு...

பிரேம்
09-01-2012, 12:31 PM
ச்ச..காதலிச்சா இவ்ளோ கஷ்டப்படனுமா..!
அது சரி முன்ன பின்ன அதெல்லாம் செஞ்சி இருந்தாதானே..

வரிகளும்..உணர்வுகளும் அருமை..தல..