ஆன்டனி ஜானி
12-11-2010, 04:36 PM
கொசுக்கள் தனது ரத்த உணவை, அதன் இரைகள் வெளிப்படுத்தும் வெப்பம் மற்றும் கார்பன்டை ஆக்சைடில் இருந்து தான், அடையாளம் கண்டு கொள்கிறது. தற்போது ஒரு புதிய கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தக்கருவி, இயந்திரம் போன்று இருந்தாலும் மனிதர்களைப் போன்றே வெப்பத் தையும்,கார்பன்டை ஆக்சைடையும் வெளிப்படுத்துகிறது. இந்த வெப்பமும், கார்பன்டை ஆக்சைடும் கொசுக்களை தன் பக்கம் இழுக்கிறது. கொசுக்கள் உள்ளே இழுக்கப்பட்டு அதில் பாயும் மின்னோட்டத்தில் அழிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில், பல்வேறு சூழ்நிலைகளில், பலமுறை இந்தக்கருவியின் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் திறன் பரிசோதிக்கப் பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் நெடி, சத்தம், பூச்சிக்கொல்லி மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள், இதில் இல்லை. எதிர் காலத்தில் கொசுக்களை ஒழிப்பதில், இந்த முறையே முன்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
****நன்றி **** இந்த தகவலை நமக்கு வெளிபடுத்தி தந்த தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்****
****நன்றி **** இந்த தகவலை நமக்கு வெளிபடுத்தி தந்த தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்****