PDA

View Full Version : துளித் துளியாய்



inban
11-11-2010, 03:21 PM
1]சாவது கூட
சந்தோசமானதுதான்
உயிர் துறப்பு
உன் மடியல் என்றால்

2]மலராத பூ உன் உதடு
சிறகு முளைக்காத வண்டுநான்
நாம் காதலர்கள்

3]காதலை ஏற்ற
பின்மாலையை விடவும்
மதுரமானது
நீ கருத்தரித்த
பின்மாலை

4]தொடுதல்
மொழிகளின் தாய்

5]கூவிடும்
சேவலிடம் கூட
மிளிர்கிறது
காமத்தின் கம்பீரம்

M.Jagadeesan
12-11-2010, 12:16 AM
தொடுதல்
மொழிகளின் தாய்

என்ற வரிகள் என்னைக் கவர்ந்தன.
மௌனம்
மொழிகளின் தாய்

என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Ravee
12-11-2010, 01:06 AM
கூவிடும்
சேவலிடம் கூட
மிளிர்கிறது
காமத்தின் கம்பீரம்

ம்ம் உண்மை உண்மை :)