ஆதவா
11-11-2010, 08:01 AM
10.10.2010 அன்று மதியம் 12.00 மணிக்கு
மஹாபலிபுரம் சிவகாமி லாட்ஜில்
ரூம் நம்பர் 555 ல்
சரக்கடித்துக் கொண்டிருந்த பொழுது
தனக்கு மயக்கம் வருவதாகச் சொன்னான் ஆறாமுதன்
அன்றிரவு 10.10க்கு வண்டி எண் 2673 சேரன் எக்ஸ்பிரஸில்
கோச் எண் S11, சீட் எண் 22 ல் பயணித்தபொழுது
அவன் முகம் சிவந்து உப்பியிருந்ததாக
உடன் பயணித்த காளிமுத்து என்னிடம் கூறினான்.
அதிகாலை 5 மணிக்கு ஸ்டேசன் விட்டிறங்கி
திருப்பூர் 3 கி.மி எனும் தூரக்கல்லருகே
அமர்ந்து வாந்தியெடுத்த ஆறாமுதனின்
வண்டி டோக்கன் எண் 2985.
அவசராவசரமாக 108க்கு அழைத்து
அவனை திருப்பூர் குமரன் மருத்துவமனை
அறை எண் 101ல் சேர்த்தபொழுது
அவன் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது
பேசமுடியாமல் திக்கி
கைக்கடிகாரத்தைக் காண்பித்து ஏதோ சொன்னான்
அப்பொழுது மணி மாலை 5.55
மிகுந்த கவலைக்கிடமாகக் கிடந்தவனை
டாக்டர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும்
அடுத்தநாள் காலை 10.10 க்கு இறந்தே போனான்.
அவன் இறந்ததற்கான காரணத்தை
யாராலும் சொல்லமுடியவேயில்லை.
இறுதி சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு
சுமார் ஒரு வருடம் கழித்து
10.10.2011 அன்று மதியம் 1.00 மணிக்கு
அதே சிவகாமி லாட்ஜில் ரூம் நம்பர் 555ல்
சரக்கடித்துக் கொண்டிருந்த காளிமுத்து
தனக்கு மயக்கம் வருவதாகக் கூறினான்.
மஹாபலிபுரம் சிவகாமி லாட்ஜில்
ரூம் நம்பர் 555 ல்
சரக்கடித்துக் கொண்டிருந்த பொழுது
தனக்கு மயக்கம் வருவதாகச் சொன்னான் ஆறாமுதன்
அன்றிரவு 10.10க்கு வண்டி எண் 2673 சேரன் எக்ஸ்பிரஸில்
கோச் எண் S11, சீட் எண் 22 ல் பயணித்தபொழுது
அவன் முகம் சிவந்து உப்பியிருந்ததாக
உடன் பயணித்த காளிமுத்து என்னிடம் கூறினான்.
அதிகாலை 5 மணிக்கு ஸ்டேசன் விட்டிறங்கி
திருப்பூர் 3 கி.மி எனும் தூரக்கல்லருகே
அமர்ந்து வாந்தியெடுத்த ஆறாமுதனின்
வண்டி டோக்கன் எண் 2985.
அவசராவசரமாக 108க்கு அழைத்து
அவனை திருப்பூர் குமரன் மருத்துவமனை
அறை எண் 101ல் சேர்த்தபொழுது
அவன் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது
பேசமுடியாமல் திக்கி
கைக்கடிகாரத்தைக் காண்பித்து ஏதோ சொன்னான்
அப்பொழுது மணி மாலை 5.55
மிகுந்த கவலைக்கிடமாகக் கிடந்தவனை
டாக்டர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும்
அடுத்தநாள் காலை 10.10 க்கு இறந்தே போனான்.
அவன் இறந்ததற்கான காரணத்தை
யாராலும் சொல்லமுடியவேயில்லை.
இறுதி சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு
சுமார் ஒரு வருடம் கழித்து
10.10.2011 அன்று மதியம் 1.00 மணிக்கு
அதே சிவகாமி லாட்ஜில் ரூம் நம்பர் 555ல்
சரக்கடித்துக் கொண்டிருந்த காளிமுத்து
தனக்கு மயக்கம் வருவதாகக் கூறினான்.